Friday, December 2, 2011

22.ஓசையில்லா

ஓசையில்லா ஏக தாளத்தில்
பாடும் மௌன ராகங்கள்
கண்ணோட்டங்கள் மொழிகளுமாய்
கண்ணீர்த்துளிகள் சுருதியாக (ஓசை)

எங்கோ அலையும் நினைவுகளில்
ஏதோ தேடும் பாவனையாய்
என்றோ இழந்த பழமைகளை
இன்றும் மெல்லும் ஆவினமாய் (ஓசை)

தேங்கி நிற்கும் உணர்வுகளை
பாங்காய் கோர்க்கும் பாவனையாய்
ஊனமுற்ற இந்த உள்ளத்தின்
கானம கேட்பீர் காதோர்த்து (ஓசை)
All rights reserved for the poem. Leela Narayanaswamy©