Thursday, December 25, 2014

63.மலைமகள் மகனே

மலைமகள் மகனே மாதவன் மருகனே
வேழமுகத்தோனே வேலவன் சோதரனே
ஐங்கரனே ஐயா ஆனந்த விநாயகா
மங்களம் புரிவாய் ஸ்ரீ கணநாதா

சரணம் சரணம் ஐயா சங்கரன் மகனே
இன்னல்கள் அகலவே முன்னில் வருவாயே
மலைமகள் கைப்பிடிமண்ணில் பிறந்தோனே
வேதமுதல்வனுன்னை மனமுருகி தொழுதோமே .

வேலன் காதல் நாடகத்தில் வேடமகள் வள்ளி முன்னில்,
ஓலமிடும் வாரணமாய் ரூபமேற்று நின்றோனே,
துன்டித்த தந்தமதை தூரிகையாய் பிடித்தோனே,
வலஞ்சுழி துதிக்கையோனே குலம் காக்க வருவாயே!
All rights reserved for the poem. Leela Narayanaswamy©

Wednesday, December 24, 2014

33.மலராய் விரியும்

மலராய் விரியும் மனம்
   கவர்பல வண்ணங்களாய்
அழகாய் சிதறும் கண்
   கவர்வண்ண கனவுகளாய்
ஓ ............. ஆசைப்பூ விரிந்ததிங்கே
ஆனந்தம் கூடுது இங்கே
விவாகப் பட்டணிந்து
   பெண்ணின் கல்யாணம்....


malaraay viriyum manam
    kavarpala vaNNangaLaay
azhagaay chithaRum kaNN
   kavarvaNNa kanavukaLaay
oh.... aasaippoo         virinthathinge
aanantham kooduthu inge
vivaaha pattaNinthu
  peNNin kalyaaNam

for Krishnaraaj for an ad of Chennai silks on 21.12.14
All rights reserved for the poem. Leela Narayanaswamy©

Sunday, December 14, 2014

62.துன்பம் ஓட இன்பம் சேர

சுவாமியே சரணமய்யப்பா
துன்பம் ஓட இன்பம் சேர துணையாய் உனைத்தேடி இங்கே
குருபதமும் தொழுதே இருமுடி தாங்கி வந்தோம் அய்யனே  சரணம்அய்யனே

தூயவிரதம் இருந்தே நாங்கள் துளசிமாலை மார்பில் அணிந்தே
சபரிமலை ஏறிவந்தோம் சரணம் அய்யனே சரணம் அய்யனே

ஐந்துமலை வாழும் அய்யா புலிவா ....கனனே ......
ஆடிப்பாடி பேட்டையிலே வாவரை தொழுதோம் அய்யனே
அழுதைநதியில் முழுகிக் கல்லும் இட்டோம் அய்யனே சரணம் அய்யனே

கடினமிகு கரிமலைச்சாரலும் ஏறிக்கடந்து வந்தோம் அய்யா
அடியார்க்கு எளியவன் உன்னைப் பாடிநின்றோமே
கடினமிகு கரிமலைச்சாரலும் ஏறிக்கடந்து வந்தோம் அய்யா
அடியார்க்கு எளியவன் உன்னைப் பாடிநின்றோமே

பம்பை ...நதியாம் தக்ஷின கங்கையிலே புனிதநீராடி
தேவர் தொழும் மைந்தா அய்யா உன்னைத் தேடியே சரணம் அய்யனே
பம்பையிலே விளக்கும் கண்டு நீலிமலையில் சரங்குத்தி ஆடி
பந்தளனின் கண்மணி உன்னை நாடி வந்தோமே சரணம் அய்யனே

மாசில்லா சபரியும் வாழ்ந்ததோர் மாமலையாம் சபரிமலையும்
மாதவமே கடந்தோமே சரணம் அய்யனே
 மாசில்லா சபரியும் வாழ்ந்ததோர் மாமலையாம் சபரிமலையும்
மாதவமே கடந்தோமே சரணம் அய்யனே

கும்பளமாம் அருவியில் முழுகி மஞ்சள்மாதா தேவியை வணங்கி
படிபதினெட்டும்.....ஏறி வந்தோம் அய்யனே சரணம் அய்யனே

நீலமேகவண்ணன் மைந்தா நீலகண்டன் அருளிய புதல்வா
மணிமாலை கழுத்தில் அணிந்தே பிறந்த பாலனே...
மணிகண்டனாதனே ......ய்

காந்தமலையில் வாழும் அய்யா கருணை ஒளி மின்னும் செல்வா
காந்தமலை நாதனே......ய்

 புத்துருக்கு நெய்யபிஷேகமும் பொன்னணிகள் சூடிய மேனியும்
சுவாமியே சுவாமியே சுவாமியே சரணம் அய்யப்பா

கற்பூர ஒளியில் மின்னும் கண்கவர் திருமுகமும் கண்டோம்
வானுயரும் சரணம் ஒலியில் தனைமறந்து நின்றோமே சரணம் அய்யனே

வில்லேந்தி நின்ற வீரன் புலி ஏறி வந்த தீரன்
ஆஸ்ராமத்தஞ்சனமெழுதிய கண்டன் அய்யனே சரணம் அய்யனே
சரணம் அய்யனே சரணம் அய்யனே

All rights reserved for the poem. Leela Narayanaswamy©
Written for Mr. Sibu Sukumaran for an album according to tune already set in June 2010.



61.புற்றில் வாழ்ந்திடும் தேவா

புற்றில் வாழ்ந்திடும் தேவா போற்றிப்பாடுவோம் பாட்டு
புற்றில் வாழ்ந்திடும் தேவா வாராய் தாளத்தில் ஆடு (புற்றில்)

வளைந்தாடும் நேரம் மரக்கிளைகளும் ஆடிடுமே
மலையாளப்பெண்டிர் தாளத்தில் பாடுவரே புள்ளுவர்
குடத்தின்... தாளம் ........                                                            (புற்றில்)

படைபயக்கும் நீ படமெடுத்தால் ஜடைமுடியனின் அணிகலனே
விடைகாணா வினையும் தீர்ப்பாயே ........
படைபயக்கும் நீ படமெடுத்தால் ஜடைமுடியனின் அணிகலனே
விடைகாணா வினையும் தீர்ப்பாயே ........
அலைகடல் மேவும் அரி என்றும் அமரும் ஆசனம் நீ அன்றோ
அலைபோல் உயரும் துயரம் துடைப்பாயே .....
அலைகடல் மேவும் அரி என்றும் அமரும் ஆசனம் நீ அன்றோ
அலைபோல் உயரும் துயரம் துடைப்பாயே .....
மஞ்சள்தூவி வணங்கிடுவோம் முட்டை பாலிவை படைத்திடுவோம்
புற்றின் மேலே படமாய் வா வா வா .......                            (புற்றில்)

பிறந்த நேரத்துள்ள பிணிகள் நீக்குவாய்
     ஆயில்யம் பிறந்தோரின் ஆதங்கம் அகற்றுவாய்
ராகுகேது கிரக கோபம் போக்குவாய்
      நாகதேவா  ராகம் பாடி வணங்கினோம்
கனத்த மழையில் கண்ணனுக்கும் வசுதேவர்க்கும் குடையானாய்
யமுனைனதியைக் கடக்கத் துணைபோனாய் .......
கனத்த மழையில் கண்ணனுக்கும் வசுதேவர்க்கும் குடையானாய்
யமுனைனதியைக் கடக்கத் துணைபோனாய் .......
அயன்அரிஅரனாம் முத்தேவர் மகிழும் அன்பா அருளிடுவாய்
அடியவர் பாடும் பாட்டில் ஆடிடுவாய் .......
அயன்அரிஅரனாம் முத்தேவர் மகிழும் அன்பா அருளிடுவாய்
அடியவர் பாடும் பாட்டில் ஆடிடுவாய் .......
மஞ்சள்தூவி வணங்கிடுவோம் முட்டை பாலிவை படைத்திடுவோம்
புற்றின் மேலே படமாய் வா வா வா .......                            (புற்றில்)

All rights reserved for the poem. Leela Narayanaswamy©
Written for Mr. Sibu Sukumaran for an album according to tune already set in June 2010.





60.வேல்பிடித்து மயிலேறி வா வேலவனே

சுலோகம்
ஒராறு முகங்களும் ஈராறு கரங்களும்
ஓங்காரரூபமாய் ஒளிரும் திருமேனியும்
ரீங்காரமாய் காதில் ஒலிக்கும் சஷ்டிகவசமும்
தீங்கிலாவாழ்வினை ஈன்றிடும் என்றுமே

பாட்டு
வேல்பிடித்து மயிலேறி வா வேலவனே
வேலுருவில் சொர்ணமலை வாழுமய்யா எங்கள் காவலனே
 குன்றுதோறாடும் குமரா திருச்செந்தூர் முருகய்யா
குறவள்ளியின் மணாளா சிவபாலா கதிர்வேலா
மயில்காவடியாடு சஷ்டிகவசம் பாடு
கந்தனுக்கு போடு ஹர ஹர ஹர ஹர                   (வேல்பிடித்து)

அழகுமுருக பாலா அரியாம் மாலுக்குகந்த மருகா
அலையும் மனதில் அமைதியை வேண்டினோம் அருள்வாய் ஆறுமுகா
அழகுமுருக பாலா அரியாம் மாலுக்குகந்த மருகா
அலையும் மனதில் அமைதியை வேண்டினோம் அருள்வாய் ஆறுமுகா
ஹரஹரோஹர  ஹர ஹர ஹர ஹர ஹரஹரோ
ஹரஹரோஹர  ஹர ஹர ஹர ஹர ஹரஹரோ
உமையவள் கொஞ்சிட உரு ஒன்றானவா
உந்தைக்கு குருவான  குமரனுக்கு ஹர ஹர         (வேல்பிடித்து)

புரமெரித்த பரமன் நெற்றிகண்ணுதித்த புதல்வா
சூரதாரகர்க்கெமனாய்நின்றவா  நீறு தந்தருள்வாய்
புரமெரித்த பரமன் நெற்றிகண்ணுதித்த புதல்வா
சூரதாரகர்க்கெமனாய்நின்றவா  நீறு தந்தருள்வாய்
ஹரஹரோஹர  ஹர ஹர ஹர ஹர ஹரஹரோ
ஹரஹரோஹர  ஹர ஹர ஹர ஹர ஹரஹரோ
ஆண்டியாய் நின்ற பழனிவாழ்திரு முருகய்யா
ஆணைமுகந்தன் அருமை இளவலுக்கு ஹரஹர (வேல்பிடித்து)

All rights reserved for the poem. Leela Narayanaswamy©
Written for Mr. Sibu Sukumaran for an album according to tune already set in June 2010.





32.கல்லாம் என்மனதில்

கல்லாம் என்மனதில் சொல்லாமல் நீ வந்ததேன்
கடலில் அலையென இரண்டறக் கலந்ததேன்
கண்ணிமைப்பொழுதில் கனவாய் மறைந்ததேன்
கனலான என்கண்உன் நிழல் தேடி அலையுதே (கல்லாம்)

நிறையும் என்விழிகள் ஆகும் நீரருவியாய்
நீ இங்கில்லைஎனும் நினைவின் சுழலியால்
பாடாத கவிதையே மறையாத ஓவியமே
காயாத புதுமலரே கண்மணி ஆனவளே
உறவாடி நீ நின்ற காலம் நினைத்தாலே
உயிரின் தாளம் தடமிடறிப் போனதே      (கல்லாம்)

இளநெஞ்சின் கனவிற்கு புதுநிலவானவளே
இதயவீணையின் நாதமாய் நின்றவளே
அறிகிலையோ நீ என் உணர்வின் அலைகள்
அன்றும் இன்றுமென் விழிநீரின் மொழிகள்
ஆவதொன்றுமிலை நீ எனக்கில்லை அறிவேன்
ஆயினும் தேடுகிறேன் தளராத மனமுமாய் (கல்லாம்)
All rights reserved for the poem. Leela Narayanaswamy©
Written for Mr. Sibu Sukumaran for an album according to tune already set in June 2010.

59. நான்மறை போற்றிடும்

 நான்மறை  போற்றிடும் நான்முகன் தேவிநீ நாவில் அருள்வாய் அம்மா
அநாதிகாலமாய் கானாம்ருதமுமாய் ஆதாரஸ்ருதியானவளே (நான்மறை)

பத்தைந்துமொன்றுமாம் மணிமாலையில்
           எழுத்தின் வடிவம் குறித்தவளே
நான்மறையோடு நன்னான்குமிரண்டான
            நல்லறிவின் ரூபமே தாள் பணிந்தோம் (நான்மறை)

எழிலாய்ப்போழியுமிசைமழையிலேழு ஸ்வரங்களுயர்ந்ததிதா
இடக்கையில் ஏந்தும் புத்தகமும் ஈன்றிடும் சகலஞானம்
துங்காதீரம்வாழும் தேவி சரணம் அம்மா
துங்காதீரம்வாழும் தேவி சரணம் அம்மா
கச்சபீ வீணையை மீட்டிடுமென் கானமனோகரி கண்திறவாய்
கச்சபீ வீணையை மீட்டிடுமென் கானமனோகரி கண்திறவாய்  (நான்மறை)

அம்பாபுரியாம் கூத்தனூரில் அருளிடும் ஆனந்த சரஸ்வதியே
இயலிசை நாடக ரூபம் நீயே ஈசனின் இளையவளருள்வாயே
வெண்பட்டுடுத்த வேணி வேண்டும் வரம் தருவாய்
வெண்பட்டுடுத்த வேணி வேண்டும் வரம் தருவாய்
வெண்தாமரை அமரும் வாக்வாதினி சாரதாதேவி நீ கண்திறவாய்
வெண்தாமரை அமரும் வாக்வாதினி சாரதாதேவி நீ கண்திறவாய் (நான்மறை)All rights reserved for the poem. Leela Narayanaswamy©
Written for Mr. Sibu Sukumaran for an album according to tune already set in June 2010.


58.கண்ணா கார்வண்ணா

கண்ணா கார்வண்ணா நந்தகோகுலத்து கோபியரின் மன்னா
கண்ணா... கார்வண்ணா... வெண்ணைதிருடி உண்ணும் கள்வா கமலக்கண்ணா
மாடுமேய்த்திடும் ஓர் இடையப்பையனாம்
மனமயக்கும் குழலூதும் பாலனாம்  (கண்ணா)

அன்னைக்காக உரலோடு பிணைந்து நின்றாயே
அசுரகளை அதிசயமாய் கொன்றோழிதித்தாயே
காளிங்கனின் முடிமேலே ஆடிநின்றாயே
கருணையுடன் கோவர்த்தனக்குடை பிடித்தாயே
கண்ணா..............................................................................
மாயக்கலையிலே மன்னா மனதில் நின்ற மாதவா(கண்ணா)

தர்மம் காக்க பாஞ்சஜன்ய சங்கெடுத்தாயே
தர்மநெறி பாடமாக கீதை தந்தாயே
நல்லோர்க்கு காவலனாய் அருகிருப்பவனே
பல்லாண்டு பாடிநின்றோம் பாலகோபனே
கண்ணா............................................................................
அழகுமுடியில் மயிலின் இறகு ஆட ஓடி வா   (கண்ணா)
All rights reserved for the poem. Leela Narayanaswamy©
Written for Mr. Sibu Sukumaran for an album according to tune already set in June 2010.

57.ஆடிவா நீ ஆதிசக்தி

ஆடிவா நீ ஆதிசக்தி ஆயிரங்கண்ணாளே
நாடிவந்தே படையல் வைத்தே கூடிப்பாடுகின்றோம் (ஆடிவா)

பால்குடம் எடுத்தோம் இங்கே மாவிளக்கேற்றி வைத்தோம்
மாரியம்மா ....... முத்துமாரி.............                            ( ஆடிவா)

மாங்காட்டில் நீ காமாக்ஷி காசி விசாலாக்ஷி
காஞ்சியில் அயன் அரி அரனார் இவருன் ஆசனமாவாரே
பூமிதித்து வந்தோம் குண்டத்து காளியம்மா
பாழும் அசுரரைக் கொன்றேழு கபாலமணிந்தவளே
சிவந்த பட்டும் உடுத்தவளே மருவூர் அரசி மங்கலங்களருள்வாய்
அங்கயற்கண்ணீ .....அரியின் தங்காய் ..............(ஆடிவா)

அம்பும் வில்லும் கேடயமும் வேலும் சூலம் சக்ரமுமாய்
அபயமுத்திரை சங்குடனே எட்டு கைகளுமாய்
திருவாரூரில் ரௌத்ரி நீ திருமயிலையிலே கற்பகம் நீ
திருவேற்காட்டில் கருமாரி கருநிறம் கொண்டவளே
சமயபுரம்வாழ் உமையவளே சங்கரநாயகி  மங்கலங்களருள்வாய்
குங்குமச்செல்வீ .......ஓங்காரி தாயே..........(ஆடிவா)
All rights reserved for the poem. Leela Narayanaswamy©
Written for Mr. Sibu Sukumaran for an album according to tune already set in June 2010.

56.அண்ணாமலைவாழ்

அண்ணாமலைவாழ் அருணாசலமே
     அரவமுன் மாலையாகும் நீலகண்டனே
சொக்கநாதனே அகத்தீஸ்வரா
    கையிலில் ஒலிக்குமே சாமவேதம்
உண்மைப்பொருளே உடுக்கையுடையாய்
     ருத்ராக்ஷரூபனே விஸ்வநாதனே
அயன் அரி அறியா அருட்பெரும் ஒளியே  (அண்ணாமலைவாழ்)

கார்த்திகை தீபங்கள் உயர்ந்தங்கிதா
    கண்காணாதுயரும் உன்முடி தேடியே
மாதொருபாகனே ஸ்ரீமகாதேவனே
     தழுவக்குழைந்தவா தொழுதே நின்றோமே
இடையில் புலித்தோலும் ஜடையில் பிறையுமாய்
   முடியில் காணுமிதா கங்கைநதியும்
நடையில் அடியார்தம் நாவில்
      ஊறிடும் மந்திரம் ஐந்தெழுத்தே  
 ஓம்   நமோ  நமசிவாய         {அண்ணாமலைவாழ்)

அரியும் ஐங்கரனும் தாளம் போடவே 
      ஆடும்கோலம் கொண்ட தில்லைநாதனே 
மகிழ்வாய் வில்வத்தில் முக்கண்ணுடையோனே
      மணிப்பூரில் வாழ் மகா காலேஸ்வரனே 
கோள்மாலை அணிந்தவா நீறாடி மகிழ்வாய் 
     நால்வரின் பாசுரம் பாடிட அருள்வாய் 
நடையில் அடியார்தம் நாவில்
      ஊறிடும் மந்திரம் ஐந்தெழுத்தே  
 ஓம்   நமோ  நமசிவாய         (அண்ணாமலைவாழ்)

All rights reserved for the poem. Leela Narayanaswamy©
Written for Mr. Sibu Sukumaran for an album according to tune already set in June 2010.

55.தும்பிக்கையோனே துணை வருவாயே

சுலோகம்
ஐந்து கரங்களும் அருகணியும் திருமுடியும்
இன்னலறுத்திடும் என்றும் ஏத்தமிட்டோம் வித்தகனே

பாட்டு
தும்பிக்கையோனே துணை வருவாயே
சித்தி விநாயகா சிவன் மகனே

மலைமகள் பிடிமண்ணில் பிறந்த முதல்வனே
அலைமகள் நாயகனின் மருமகனே
வலஞ்சுழி விநாயகா தும்பை துலங்கு மார்பா
முப்பழம் அதிரசம் அப்பமொடவல்பொரி கைத்தலமோதகம்
கனிவுடன் கொள்வாய் கடம்பன்  சோதரனே   (தும்பிக்கையோனே)

தாய்தந்தையை வலம் வந்தன்று மாங்கனி பெற்றவனே
கமண்டலத்தை கவிழ்த்தன்றிங்கு காவிரி கொணர்ந்தவனே

ஐங்கரனாம் என் அய்யனே அல்லல்களகற்றும் வள்ளலே
கையிலை கூப்பி  அடிபணிகின்றோம் கயிலை கணபதியே (தும்பிக்கை)

வள்ளி முன்னன்று வேலனுக்காக வாரணமானவனே
சாமரக்கர்ணனே முழுமுதற்கடவுளே எருக்கில் மகிழ்பவனே

ஆனைமுகம் கொண்ட அய்யனே பானைவயிறோனே சரணமே
 கையிலை கூப்பி  அடிபணிகின்றோம் கயிலை கணபதியே (தும்பிக்கை)

All rights reserved for the poem. Leela Narayanaswamy©
Written for Mr. Sibu Sukumaran for an album according to tune already set in June 2010.


Saturday, December 13, 2014

31.ஓநாய் நாட்டிலே

ஓநாய் நாட்டிலே ஓடியாடுதே
நீதி நேர்மையோ மாயமானதே
குண்டுவெடி கொலை நாளும் பெருகுதே
மொத்தநாடுமே சுடுகாடானதே
தந்தை காமத்தீயில் கருகும் மகளே மனித மிருகங்களே ...........

பள்ளிப்பிள்ளையும் பலியாடாகுதே
கள்ளப்பணம் கல்லும் கற்பழிப்பு கொள்ளை
நித்தம் ஊழல் நாட்டில் நிம்மதி எங்கே ?..........

காப்பகங்களும் அடிமைக்கூடமே
கள் சுமக்கும் பிள்ளை கண்ணில் ஏக்கம் கண்டேன்
வாக்குறுதி எல்லாம் ஒட்டு என்னும் வரையே

நன்மை நாடியே நெஞ்சுருகுதே
வழியும் தேடியே நாடு காக்கவே
All rights reserved for the poem. Leela Narayanaswamy©
written for Mr. Unnikrishnan.K.B. under the theme "FRUSTRATION"
according to the already set tune. on 03.05 14

30.அன்றென்னவோ

அன்றென்னவோ பன்னோசையும் கேட்கவே
ஓர் மழலையின் அழுமோசையும் சேரவே
கனவிலும் காணாக் காட்சிகள் அத்தினம் காணவே
இருகண் இமைக்கும் நேரத்தில் நிசப்தம் ஆனதே
எங்கெங்கெயோ தன் தாயினை தேடியே
நின்றோரமாய் கண் ஊற்றென மாறவே
All rights reserved for the poem. Leela Narayanaswamy©
written for"Beyond Calton"- a safe earth on Feb 2012
sung by Mr K.B.Unnikrishnan

29.எங்கோ தொலைவிலே

பெண் குரலில்
எங்கோ தொலைவிலே தொடரா நிழலாய் நான்
தேங்கியே விழிமொழியாய் கண்ணீர் பொழியும்
காட்சியில் கலைந்ததம்மா பிரியா விடையும்
ஆண் குரலில்
சந்திரனின் பிரியமுள்ள பூவே நீ இரவினில் மலராதே
ஏதோ கனாவில் அறியாதென் நெஞ்சில்
    கனலுமாய் எரிக்கிறாய் நீறுதேன் பஞ்சணையே (சந்திரனின்)

கடலே வெண்ணலைகளை அனுப்பியே
      உரையாட விழைந்தனை தனியே நீ
யாரோடும் சொல்லாத்த என் மோகங்கள்
      காதோடு கேட்காமல் தானாகவே
எங்கெங்கோ பாய்ந்தங்கு மௌனமாய் ஓடி
      மாய்ந்ததேன் சொல்லேன்       (சந்திரனின்)

நிலவே நின் ஒளியில் அவள் பிம்பம்
       தெரியவே நிழலாய் நானங்கு
ஆராரும் காணாதே நின்னைத் தொடரவே
       அம்முகம் மாயுதே கானல் நீர்போல்
இனி அன்பே மறக்குமோ மெதுவாய் மூளும் என்னனுராகம்
written for Mr. Susanth Sankar according to the tune already set on 23.01 12.


All rights reserved for the poem. Leela Narayanaswamy©
   

28.வானுயர் மரங்களும்

வானுயர் மரங்களும் வடிவில்லா காற்றும்
நாள் தோறும் பரிமாறும் காதல் மொழிகள்
மேகம் கேட்டங்கு நாணித்ததாலோ
அகன்று நிறம் மாறி மறைவிடம் தேடி
மண்ணில் இறங்குதே மின்னலிடி மழையாய்

All rights reserved for the poem. Leela Narayanaswamy©
came in Face Book on 18.01 13 through Mr. Susanth Sankar

27. தூரே தூரே போனாலும்

தூரே தூரே போனாலும்
     தொடரும் உந்தன் நினைவுகளும்
யாரும் யாரும் அறியாதே
     யாழின் இசையாய் இனிமை தரும்
எங்கோ பெய்யும் மழைத்துளிகள்
     பாங்காய் தாளம் கொட்டிவரும்
இங்கே அங்கே என்றிருந்தாலும்
      எங்கும் நிறைந்த காற்றலைபோல்
வானும் நிலவும்போல் இணை பிரியா
       தென்றும் நம்முறவு தொடர்ந்திடுமே

All rights reserved for the poem. Leela Narayanaswamy©

26. வசந்தமே உன்

வசந்தமே உன் நினைவுகள் வளருது
வாடும் என் மனதை நாளும் வருடுது
காலம் போனாலும் காதல் மாறுமோ?
காத்திருப்பில் ஒரு சுகமுண்டு தெரியுமோ?

ஆழப்பதிந்த உன் மலர்முகம் மனதை
ஆழ்கடலலை போல் ஆட்டுதம்மா
பாடும் கொடியாக
தொடரும் கதையாக
தேடும் விடையாக
எங்கோ நின்று நீ இன்று   
பாடும் கவியாக என்னை மாற்றிவிட்டாய்
All rights reserved for the poem. Leela Narayanaswamy©

25.சிதறி விழும்

சிதறி விழும் பூக்களென சிரிக்கும் மத்தாப்பு
சின்னஞ்சிறு மழலைகளின் முகமலரில் சிரிப்பு
சிங்காரி கங்கையவள் வெந்நீரில் வருகை  தர
எங்கும் எண்ணைக்குளி புத்தாடையுடன் இனிப்பு
தீமையின் இருளகல தீபங்களின் ஆவளி
திருமகள் அருள் பெருக தீபமேற்றி தீபாவளி

நரகனெனும் அசுரனையே வதித்தனின்னாளே
ரகுராமன் வனவாழ்க்கை முடிந்ததின்னாளிலே
மாகாளி சினம் மாறி இந்நாளில் முகம் மலர
வங்கம் ஆற்றினிலே மிதக்கவிடும் தீபங்கள்
இமயம் முதல் குமரி வரை தீபங்களின் ஆவளி
மகிழ்வலை எதிரொலியாய் தீபமேற்றி தீபாவளி
  All rights reserved for the poem. Leela Narayanaswamy©

Friday, December 12, 2014

54.கண்ணன் காப்பான்

கண்ணன் காப்பான் என்னைக் கண்ணன்  காப்பான் -மனக்
கவலைகளில்லயம்மா
என்னை அணைத்து  பஞ்சுக்கன்னம் பதிப்பான் -அந்த
வெண்ணை உண்ட கள்வனம்மா

கனவில் கண்டேன்  குழலூதும் கண்ணனை- கையைக்
கனிவாய் உயர்த்திச் சிரித்தான்
கட்டி அணைத்தே ஒரு முத்தம் கொடுக்க நான்
எட்டி நடந்தேன் ஒளிந்தான்
 All rights reserved for the poem. Leela Narayanaswamy©


53.ஆடு கண்ணா



ஆடு கண்ணா ஊஞ்சலாடு கண்ணா
அஞ்சனவண்ணா ஆடு கமலக்கண்ணா

கருங்கூந்தல்  காற்றில் கலைந்தோடி  ஆட
கண்ணே உன் மயில்பீலி  உடன்சேர்ந்து ஆட
முத்தாபரணங்கள் முடியில் அசைந்தாட
மயக்கும் கருவிழிகள் மலர்ந்து சிரியாட
மார்பில் துளசியோடு மணிமாலை ஆட
முத்தே மணிவண்ணா நீ ஊஞ்சல் ஆடு

காதில் குண்டலங்கள் குழைந்து குழைந்தாட
கிண்கிணி ஓசையுடன் கைவளை இசைபாட
இடையில் செருகிய ஓடக்குழல் குஞ்சம் ஆட
பட்டாடை பாங்காய் அங்குமிங்கும் ஆட
பாதசரம்  சலசலத்து மெல்லிசையாய் ஓசையிட
புன்சிரி முகவண்ணா நீ ஊஞ்சல் ஆடு
All rights reserved for the poem. Leela Narayanaswamy©