tag:blogger.com,1999:blog-50676786941160158832024-02-20T23:05:55.959+05:30இசைக்குவியல்பொங்கும் கடலை நோக்கி ஒழுகி வரும் நதியாக...Leelahttp://www.blogger.com/profile/16813146628317640040noreply@blogger.comBlogger101125tag:blogger.com,1999:blog-5067678694116015883.post-15432953319097482772016-01-09T19:38:00.000+05:302018-02-12T18:35:15.047+05:30<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br /></div>
Leelahttp://www.blogger.com/profile/16813146628317640040noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5067678694116015883.post-78777626990611767082014-12-25T13:33:00.002+05:302015-01-14T14:48:29.277+05:30 63.மலைமகள் மகனே<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div>
<b>மலைமகள் மகனே மாதவன் மருகனே</b></div>
<div>
<b>வேழமுகத்தோனே வேலவன் சோதரனே</b></div>
<div>
<b>ஐங்கரனே ஐயா ஆனந்த விநாயகா</b></div>
<div>
<b>மங்களம் புரிவாய் ஸ்ரீ கணநாதா</b><br />
<b><br /></b></div>
<div>
<div>
<span style="color: #333333; font-size: 16px; font-weight: bold;">சரணம் சரணம் ஐயா சங்கரன் மகனே</span></div>
<div>
<span style="color: #333333; font-size: 16px; font-weight: bold;">இன்னல்கள் அகலவே முன்னில் வருவாயே</span></div>
<div>
<span style="color: #333333; font-size: 16px; font-weight: bold;">மலைமகள் கைப்பிடிமண்ணில் பிறந்தோனே</span></div>
<div>
<span style="color: #333333; font-size: 16px; font-weight: bold;">வேதமுதல்வனுன்னை மனமுருகி தொழுதோமே .</span><br />
<span style="color: #333333; font-size: 16px; font-weight: bold;"><br /></span></div>
<span style="color: #333333; font-weight: bold;">வேலன் காதல் நாடகத்தில் வேடமகள் வள்ளி முன்னில்</span><span style="color: #333333;">,</span><br />
<span style="color: #333333; font-weight: bold;">ஓலமிடும் வாரணமாய் ரூபமேற்று நின்றோனே</span><span style="color: #333333;">,</span><br />
<span style="color: #333333; font-weight: bold;">துன்டித்த தந்தமதை தூரிகையாய் பிடித்தோனே,</span><br />
<span style="color: #333333; font-weight: bold;">வலஞ்சுழி துதிக்கையோனே குலம் காக்க வருவாயே!</span><br />
<pre style="background-color: white; color: #333333; font-size: 15px; line-height: 20.7900009155273px; white-space: pre-wrap;"><span class="Apple-style-span" style="border-collapse: separate; color: black; font-family: 'Times New Roman'; font-size: 16px; line-height: normal; white-space: normal;"><span class="Apple-style-span" style="color: #333333; font-size: 13px; line-height: 20px;"><span class="Apple-style-span" style="border-collapse: separate; color: black; line-height: normal; orphans: 2; widows: 2;"><span class="Apple-style-span" style="color: #021324;"><span class="Apple-style-span" style="font-family: 'times new roman';">All rights reserved for the poem. Leela Narayanaswamy©</span></span></span></span></span></pre>
</div>
</div>
Leelahttp://www.blogger.com/profile/16813146628317640040noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5067678694116015883.post-76883020713022045432014-12-24T08:44:00.004+05:302014-12-24T08:46:30.068+05:3033.மலராய் விரியும்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
மலராய் விரியும் மனம்<br />
கவர்பல வண்ணங்களாய்<br />
அழகாய் சிதறும் கண்<br />
கவர்வண்ண கனவுகளாய்<br />
ஓ ............. ஆசைப்பூ விரிந்ததிங்கே<br />
ஆனந்தம் கூடுது இங்கே<br />
விவாகப் பட்டணிந்து<br />
பெண்ணின் கல்யாணம்....<br />
<br />
<br />
malaraay viriyum manam<br />
kavarpala vaNNangaLaay<br />
azhagaay chithaRum kaNN<br />
kavarvaNNa kanavukaLaay<br />
oh.... aasaippoo virinthathinge<br />
aanantham kooduthu inge<br />
vivaaha pattaNinthu<br />
peNNin kalyaaNam<br />
<br />
for Krishnaraaj for an ad of Chennai silks on 21.12.14<br />
<span style="background-color: #e0e0e0; color: #021324; font-family: 'times new roman'; font-size: 13px; line-height: 18.2000007629395px;">All rights reserved for the poem. Leela Narayanaswamy©</span></div>
Leelahttp://www.blogger.com/profile/16813146628317640040noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5067678694116015883.post-50402693990010942662014-12-14T21:59:00.001+05:302014-12-17T15:56:34.071+05:3062.துன்பம் ஓட இன்பம் சேர<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
சுவாமியே சரணமய்யப்பா<br />
துன்பம் ஓட இன்பம் சேர துணையாய் உனைத்தேடி இங்கே<br />
குருபதமும் தொழுதே இருமுடி தாங்கி வந்தோம் அய்யனே சரணம்அய்யனே<br />
<br />
தூயவிரதம் இருந்தே நாங்கள் துளசிமாலை மார்பில் அணிந்தே<br />
சபரிமலை ஏறிவந்தோம் சரணம் அய்யனே சரணம் அய்யனே<br />
<br />
ஐந்துமலை வாழும் அய்யா புலிவா ....கனனே ......<br />
ஆடிப்பாடி பேட்டையிலே வாவரை தொழுதோம் அய்யனே<br />
அழுதைநதியில் முழுகிக் கல்லும் இட்டோம் அய்யனே சரணம் அய்யனே<br />
<br />
கடினமிகு கரிமலைச்சாரலும் ஏறிக்கடந்து வந்தோம் அய்யா<br />
அடியார்க்கு எளியவன் உன்னைப் பாடிநின்றோமே<br />
கடினமிகு கரிமலைச்சாரலும் ஏறிக்கடந்து வந்தோம் அய்யா<br />
அடியார்க்கு எளியவன் உன்னைப் பாடிநின்றோமே<br />
<br />
பம்பை ...நதியாம் தக்ஷின கங்கையிலே புனிதநீராடி<br />
தேவர் தொழும் மைந்தா அய்யா உன்னைத் தேடியே சரணம் அய்யனே<br />
பம்பையிலே விளக்கும் கண்டு நீலிமலையில் சரங்குத்தி ஆடி<br />
பந்தளனின் கண்மணி உன்னை நாடி வந்தோமே சரணம் அய்யனே<br />
<br />
மாசில்லா சபரியும் வாழ்ந்ததோர் மாமலையாம் சபரிமலையும்<br />
மாதவமே கடந்தோமே சரணம் அய்யனே<br />
மாசில்லா சபரியும் வாழ்ந்ததோர் மாமலையாம் சபரிமலையும்<br />
மாதவமே கடந்தோமே சரணம் அய்யனே<br />
<br />
கும்பளமாம் அருவியில் முழுகி மஞ்சள்மாதா தேவியை வணங்கி<br />
படிபதினெட்டும்.....ஏறி வந்தோம் அய்யனே சரணம் அய்யனே<br />
<br />
நீலமேகவண்ணன் மைந்தா நீலகண்டன் அருளிய புதல்வா<br />
மணிமாலை கழுத்தில் அணிந்தே பிறந்த பாலனே...<br />
மணிகண்டனாதனே ......ய்<br />
<br />
காந்தமலையில் வாழும் அய்யா கருணை ஒளி மின்னும் செல்வா<br />
காந்தமலை நாதனே......ய்<br />
<br />
புத்துருக்கு நெய்யபிஷேகமும் பொன்னணிகள் சூடிய மேனியும்<br />
சுவாமியே சுவாமியே சுவாமியே சரணம் அய்யப்பா<br />
<br />
கற்பூர ஒளியில் மின்னும் கண்கவர் திருமுகமும் கண்டோம்<br />
வானுயரும் சரணம் ஒலியில் தனைமறந்து நின்றோமே சரணம் அய்யனே<br />
<br />
வில்லேந்தி நின்ற வீரன் புலி ஏறி வந்த தீரன்<br />
ஆஸ்ராமத்தஞ்சனமெழுதிய கண்டன் அய்யனே சரணம் அய்யனே<br />
சரணம் அய்யனே சரணம் அய்யனே<br />
<br />
<span style="background-color: #e0e0e0; color: #021324; font-family: 'times new roman'; font-size: 13px; line-height: 18.2000007629395px;">All rights reserved for the poem. Leela Narayanaswamy©</span><br style="background-color: white; color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 15px; line-height: 20.7900009155273px;" /><span style="background-color: white; color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 15px; line-height: 20.7900009155273px;">Written for Mr. Sibu Sukumaran for an album according to tune already set in June 2010.</span><br />
<br />
<br />
<br /></div>
Leelahttp://www.blogger.com/profile/16813146628317640040noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5067678694116015883.post-1417607324545582122014-12-14T21:27:00.001+05:302014-12-14T21:29:37.686+05:3061.புற்றில் வாழ்ந்திடும் தேவா<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
புற்றில் வாழ்ந்திடும் தேவா போற்றிப்பாடுவோம் பாட்டு<br />
புற்றில் வாழ்ந்திடும் தேவா வாராய் தாளத்தில் ஆடு (புற்றில்)<br />
<br />
வளைந்தாடும் நேரம் மரக்கிளைகளும் ஆடிடுமே<br />
மலையாளப்பெண்டிர் தாளத்தில் பாடுவரே புள்ளுவர்<br />
குடத்தின்... தாளம் ........ (புற்றில்)<br />
<br />
படைபயக்கும் நீ படமெடுத்தால் ஜடைமுடியனின் அணிகலனே<br />
விடைகாணா வினையும் தீர்ப்பாயே ........<br />
படைபயக்கும் நீ படமெடுத்தால் ஜடைமுடியனின் அணிகலனே<br />
விடைகாணா வினையும் தீர்ப்பாயே ........<br />
அலைகடல் மேவும் அரி என்றும் அமரும் ஆசனம் நீ அன்றோ<br />
அலைபோல் உயரும் துயரம் துடைப்பாயே .....<br />
அலைகடல் மேவும் அரி என்றும் அமரும் ஆசனம் நீ அன்றோ<br />
அலைபோல் உயரும் துயரம் துடைப்பாயே .....<br />
மஞ்சள்தூவி வணங்கிடுவோம் முட்டை பாலிவை படைத்திடுவோம்<br />
புற்றின் மேலே படமாய் வா வா வா ....... (புற்றில்)<br />
<br />
பிறந்த நேரத்துள்ள பிணிகள் நீக்குவாய்<br />
ஆயில்யம் பிறந்தோரின் ஆதங்கம் அகற்றுவாய்<br />
ராகுகேது கிரக கோபம் போக்குவாய்<br />
நாகதேவா ராகம் பாடி வணங்கினோம்<br />
கனத்த மழையில் கண்ணனுக்கும் வசுதேவர்க்கும் குடையானாய்<br />
யமுனைனதியைக் கடக்கத் துணைபோனாய் .......<br />
கனத்த மழையில் கண்ணனுக்கும் வசுதேவர்க்கும் குடையானாய்<br />
யமுனைனதியைக் கடக்கத் துணைபோனாய் .......<br />
அயன்அரிஅரனாம் முத்தேவர் மகிழும் அன்பா அருளிடுவாய்<br />
அடியவர் பாடும் பாட்டில் ஆடிடுவாய் .......<br />
அயன்அரிஅரனாம் முத்தேவர் மகிழும் அன்பா அருளிடுவாய்<br />
அடியவர் பாடும் பாட்டில் ஆடிடுவாய் .......<br />
மஞ்சள்தூவி வணங்கிடுவோம் முட்டை பாலிவை படைத்திடுவோம்<br />
புற்றின் மேலே படமாய் வா வா வா ....... (புற்றில்)<br />
<br />
<span style="background-color: #e0e0e0; color: #021324; font-family: 'times new roman'; font-size: 13px; line-height: 18.2000007629395px;">All rights reserved for the poem. Leela Narayanaswamy©</span><br style="background-color: white; color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 15px; line-height: 20.7900009155273px;" /><span style="background-color: white; color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 15px; line-height: 20.7900009155273px;">Written for Mr. Sibu Sukumaran for an album according to tune already set in June 2010.</span><br />
<br />
<br />
<br />
<br />
<br /></div>
Leelahttp://www.blogger.com/profile/16813146628317640040noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5067678694116015883.post-59002589857388562982014-12-14T21:07:00.002+05:302014-12-14T21:08:53.820+05:30 60.வேல்பிடித்து மயிலேறி வா வேலவனே <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
சுலோகம்<br />
ஒராறு முகங்களும் ஈராறு கரங்களும்<br />
ஓங்காரரூபமாய் ஒளிரும் திருமேனியும்<br />
ரீங்காரமாய் காதில் ஒலிக்கும் சஷ்டிகவசமும்<br />
தீங்கிலாவாழ்வினை ஈன்றிடும் என்றுமே<br />
<br />
பாட்டு<br />
வேல்பிடித்து மயிலேறி வா வேலவனே<br />
வேலுருவில் சொர்ணமலை வாழுமய்யா எங்கள் காவலனே <br />
குன்றுதோறாடும் குமரா திருச்செந்தூர் முருகய்யா<br />
குறவள்ளியின் மணாளா சிவபாலா கதிர்வேலா<br />
மயில்காவடியாடு சஷ்டிகவசம் பாடு<br />
கந்தனுக்கு போடு ஹர ஹர ஹர ஹர (வேல்பிடித்து)<br />
<br />
அழகுமுருக பாலா அரியாம் மாலுக்குகந்த மருகா<br />
அலையும் மனதில் அமைதியை வேண்டினோம் அருள்வாய் ஆறுமுகா<br />
அழகுமுருக பாலா அரியாம் மாலுக்குகந்த மருகா<br />
அலையும் மனதில் அமைதியை வேண்டினோம் அருள்வாய் ஆறுமுகா<br />
ஹரஹரோஹர ஹர ஹர ஹர ஹர ஹரஹரோ<br />
ஹரஹரோஹர ஹர ஹர ஹர ஹர ஹரஹரோ<br />
உமையவள் கொஞ்சிட உரு ஒன்றானவா<br />
உந்தைக்கு குருவான குமரனுக்கு ஹர ஹர (வேல்பிடித்து)<br />
<br />
புரமெரித்த பரமன் நெற்றிகண்ணுதித்த புதல்வா<br />
சூரதாரகர்க்கெமனாய்நின்றவா நீறு தந்தருள்வாய்<br />
புரமெரித்த பரமன் நெற்றிகண்ணுதித்த புதல்வா<br />
சூரதாரகர்க்கெமனாய்நின்றவா நீறு தந்தருள்வாய்<br />
ஹரஹரோஹர ஹர ஹர ஹர ஹர ஹரஹரோ<br />
ஹரஹரோஹர ஹர ஹர ஹர ஹர ஹரஹரோ<br />
ஆண்டியாய் நின்ற பழனிவாழ்திரு முருகய்யா<br />
ஆணைமுகந்தன் அருமை இளவலுக்கு ஹரஹர (வேல்பிடித்து)<br />
<br />
<span style="background-color: #e0e0e0; color: #021324; font-family: 'times new roman'; font-size: 13px; line-height: 18.2000007629395px;">All rights reserved for the poem. Leela Narayanaswamy©</span><br style="background-color: white; color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 15px; line-height: 20.7900009155273px;" /><span style="background-color: white; color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 15px; line-height: 20.7900009155273px;">Written for Mr. Sibu Sukumaran for an album according to tune already set in June 2010.</span><br />
<br />
<br />
<br />
<div>
<br /></div>
<br /></div>
Leelahttp://www.blogger.com/profile/16813146628317640040noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5067678694116015883.post-23787834137494044502014-12-14T18:54:00.001+05:302014-12-14T18:56:26.240+05:3032.கல்லாம் என்மனதில்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
கல்லாம் என்மனதில் சொல்லாமல் நீ வந்ததேன்<br />
கடலில் அலையென இரண்டறக் கலந்ததேன்<br />
கண்ணிமைப்பொழுதில் கனவாய் மறைந்ததேன்<br />
கனலான என்கண்உன் நிழல் தேடி அலையுதே (கல்லாம்)<br />
<br />
நிறையும் என்விழிகள் ஆகும் நீரருவியாய்<br />
நீ இங்கில்லைஎனும் நினைவின் சுழலியால்<br />
பாடாத கவிதையே மறையாத ஓவியமே<br />
காயாத புதுமலரே கண்மணி ஆனவளே<br />
உறவாடி நீ நின்ற காலம் நினைத்தாலே<br />
உயிரின் தாளம் தடமிடறிப் போனதே (கல்லாம்)<br />
<br />
இளநெஞ்சின் கனவிற்கு புதுநிலவானவளே<br />
இதயவீணையின் நாதமாய் நின்றவளே<br />
அறிகிலையோ நீ என் உணர்வின் அலைகள்<br />
அன்றும் இன்றுமென் விழிநீரின் மொழிகள்<br />
ஆவதொன்றுமிலை நீ எனக்கில்லை அறிவேன்<br />
ஆயினும் தேடுகிறேன் தளராத மனமுமாய் (கல்லாம்) <br />
<span style="background-color: #e0e0e0; color: #021324; font-family: 'times new roman'; font-size: 13px; line-height: 18.2000007629395px;">All rights reserved for the poem. Leela Narayanaswamy©</span><br style="background-color: white; color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 15px; line-height: 20.7900009155273px;" /><span style="background-color: white; color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 15px; line-height: 20.7900009155273px;">Written for Mr. Sibu Sukumaran for an album according to tune already set in June 2010.</span></div>
Leelahttp://www.blogger.com/profile/16813146628317640040noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5067678694116015883.post-22846777841138878262014-12-14T18:44:00.003+05:302014-12-14T18:44:30.085+05:30 59. நான்மறை போற்றிடும் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
நான்மறை போற்றிடும் நான்முகன் தேவிநீ நாவில் அருள்வாய் அம்மா<br />
அநாதிகாலமாய் கானாம்ருதமுமாய் ஆதாரஸ்ருதியானவளே (நான்மறை)<br />
<br />
பத்தைந்துமொன்றுமாம் மணிமாலையில்<br />
எழுத்தின் வடிவம் குறித்தவளே<br />
நான்மறையோடு நன்னான்குமிரண்டான<br />
நல்லறிவின் ரூபமே தாள் பணிந்தோம் (நான்மறை)<br />
<br />
எழிலாய்ப்போழியுமிசைமழையிலேழு ஸ்வரங்களுயர்ந்ததிதா<br />
இடக்கையில் ஏந்தும் புத்தகமும் ஈன்றிடும் சகலஞானம்<br />
துங்காதீரம்வாழும் தேவி சரணம் அம்மா<br />
துங்காதீரம்வாழும் தேவி சரணம் அம்மா<br />
கச்சபீ வீணையை மீட்டிடுமென் கானமனோகரி கண்திறவாய்<br />
கச்சபீ வீணையை மீட்டிடுமென் கானமனோகரி கண்திறவாய் (நான்மறை)<br />
<br />
அம்பாபுரியாம் கூத்தனூரில் அருளிடும் ஆனந்த சரஸ்வதியே<br />
இயலிசை நாடக ரூபம் நீயே ஈசனின் இளையவளருள்வாயே<br />
வெண்பட்டுடுத்த வேணி வேண்டும் வரம் தருவாய்<br />
வெண்பட்டுடுத்த வேணி வேண்டும் வரம் தருவாய்<br />
வெண்தாமரை அமரும் வாக்வாதினி சாரதாதேவி நீ கண்திறவாய்<br />
வெண்தாமரை அமரும் வாக்வாதினி சாரதாதேவி நீ கண்திறவாய் (நான்மறை)<span style="background-color: #e0e0e0; color: #021324; font-family: 'times new roman'; font-size: 13px; line-height: 18.2000007629395px;">All rights reserved for the poem. Leela Narayanaswamy©</span><br />
<div>
<span style="background-color: white; color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 15px; line-height: 20.7900009155273px;">Written for Mr. Sibu Sukumaran for an album according to tune already set in June 2010.</span></div>
<br />
<br /></div>
Leelahttp://www.blogger.com/profile/16813146628317640040noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5067678694116015883.post-73252740901532821182014-12-14T17:43:00.002+05:302014-12-14T17:45:03.819+05:3058.கண்ணா கார்வண்ணா <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
கண்ணா கார்வண்ணா நந்தகோகுலத்து கோபியரின் மன்னா<br />
கண்ணா... கார்வண்ணா... வெண்ணைதிருடி உண்ணும் கள்வா கமலக்கண்ணா<br />
மாடுமேய்த்திடும் ஓர் இடையப்பையனாம்<br />
மனமயக்கும் குழலூதும் பாலனாம் (கண்ணா)<br />
<br />
அன்னைக்காக உரலோடு பிணைந்து நின்றாயே<br />
அசுரகளை அதிசயமாய் கொன்றோழிதித்தாயே<br />
காளிங்கனின் முடிமேலே ஆடிநின்றாயே<br />
கருணையுடன் கோவர்த்தனக்குடை பிடித்தாயே<br />
கண்ணா..............................................................................<br />
மாயக்கலையிலே மன்னா மனதில் நின்ற மாதவா(கண்ணா)<br />
<br />
தர்மம் காக்க பாஞ்சஜன்ய சங்கெடுத்தாயே<br />
தர்மநெறி பாடமாக கீதை தந்தாயே<br />
நல்லோர்க்கு காவலனாய் அருகிருப்பவனே<br />
பல்லாண்டு பாடிநின்றோம் பாலகோபனே<br />
கண்ணா............................................................................<br />
அழகுமுடியில் மயிலின் இறகு ஆட ஓடி வா (கண்ணா) <br />
<span style="background-color: #e0e0e0; color: #021324; font-family: 'times new roman'; font-size: 13px; line-height: 18.2000007629395px;">All rights reserved for the poem. Leela Narayanaswamy©</span><br style="background-color: white; color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 15px; line-height: 20.7900009155273px;" /><span style="background-color: white; color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 15px; line-height: 20.7900009155273px;">Written for Mr. Sibu Sukumaran for an album according to tune already set in June 2010.</span></div>
Leelahttp://www.blogger.com/profile/16813146628317640040noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5067678694116015883.post-4794859024956534622014-12-14T17:27:00.001+05:302014-12-14T17:29:28.922+05:3057.ஆடிவா நீ ஆதிசக்தி <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
ஆடிவா நீ ஆதிசக்தி ஆயிரங்கண்ணாளே<br />
நாடிவந்தே படையல் வைத்தே கூடிப்பாடுகின்றோம் (ஆடிவா)<br />
<br />
பால்குடம் எடுத்தோம் இங்கே மாவிளக்கேற்றி வைத்தோம்<br />
மாரியம்மா ....... முத்துமாரி............. ( ஆடிவா)<br />
<br />
மாங்காட்டில் நீ காமாக்ஷி காசி விசாலாக்ஷி<br />
காஞ்சியில் அயன் அரி அரனார் இவருன் ஆசனமாவாரே<br />
பூமிதித்து வந்தோம் குண்டத்து காளியம்மா<br />
பாழும் அசுரரைக் கொன்றேழு கபாலமணிந்தவளே<br />
சிவந்த பட்டும் உடுத்தவளே மருவூர் அரசி மங்கலங்களருள்வாய்<br />
அங்கயற்கண்ணீ .....அரியின் தங்காய் ..............(ஆடிவா)<br />
<br />
அம்பும் வில்லும் கேடயமும் வேலும் சூலம் சக்ரமுமாய்<br />
அபயமுத்திரை சங்குடனே எட்டு கைகளுமாய்<br />
திருவாரூரில் ரௌத்ரி நீ திருமயிலையிலே கற்பகம் நீ<br />
திருவேற்காட்டில் கருமாரி கருநிறம் கொண்டவளே<br />
சமயபுரம்வாழ் உமையவளே சங்கரநாயகி மங்கலங்களருள்வாய்<br />
குங்குமச்செல்வீ .......ஓங்காரி தாயே..........(ஆடிவா)<br />
<span style="background-color: #e0e0e0; color: #021324; font-family: 'times new roman'; font-size: 13px; line-height: 18.2000007629395px;">All rights reserved for the poem. Leela Narayanaswamy©</span><br style="background-color: white; color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 15px; line-height: 20.7900009155273px;" /><span style="background-color: white; color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 15px; line-height: 20.7900009155273px;">Written for Mr. Sibu Sukumaran for an album according to tune already set in June 2010.</span><br />
<br /></div>
Leelahttp://www.blogger.com/profile/16813146628317640040noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5067678694116015883.post-9877507714932877462014-12-14T17:10:00.002+05:302014-12-14T17:11:15.310+05:3056.அண்ணாமலைவாழ்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
அண்ணாமலைவாழ் அருணாசலமே<br />
அரவமுன் மாலையாகும் நீலகண்டனே<br />
சொக்கநாதனே அகத்தீஸ்வரா<br />
கையிலில் ஒலிக்குமே சாமவேதம்<br />
உண்மைப்பொருளே உடுக்கையுடையாய்<br />
ருத்ராக்ஷரூபனே விஸ்வநாதனே<br />
அயன் அரி அறியா அருட்பெரும் ஒளியே (அண்ணாமலைவாழ்)<br />
<br />
கார்த்திகை தீபங்கள் உயர்ந்தங்கிதா<br />
கண்காணாதுயரும் உன்முடி தேடியே<br />
மாதொருபாகனே ஸ்ரீமகாதேவனே<br />
தழுவக்குழைந்தவா தொழுதே நின்றோமே<br />
இடையில் புலித்தோலும் ஜடையில் பிறையுமாய்<br />
முடியில் காணுமிதா கங்கைநதியும்<br />
நடையில் அடியார்தம் நாவில்<br />
ஊறிடும் மந்திரம் ஐந்தெழுத்தே <br />
<div>
ஓம் நமோ நமசிவாய {அண்ணாமலைவாழ்)</div>
<div>
<br /></div>
<div>
அரியும் ஐங்கரனும் தாளம் போடவே </div>
<div>
ஆடும்கோலம் கொண்ட தில்லைநாதனே </div>
<div>
மகிழ்வாய் வில்வத்தில் முக்கண்ணுடையோனே</div>
<div>
மணிப்பூரில் வாழ் மகா காலேஸ்வரனே </div>
<div>
கோள்மாலை அணிந்தவா நீறாடி மகிழ்வாய் </div>
<div>
நால்வரின் பாசுரம் பாடிட அருள்வாய் </div>
<div>
நடையில் அடியார்தம் நாவில்</div>
ஊறிடும் மந்திரம் ஐந்தெழுத்தே <br />
<div>
ஓம் நமோ நமசிவாய (அண்ணாமலைவாழ்)</div>
<div>
<br /></div>
<div>
<span style="background-color: #e0e0e0; color: #021324; font-family: 'times new roman'; font-size: 13px; line-height: 18.2000007629395px;">All rights reserved for the poem. Leela Narayanaswamy©</span><br style="background-color: white; color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 15px; line-height: 20.7900009155273px;" /><span style="background-color: white; color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 15px; line-height: 20.7900009155273px;">Written for Mr. Sibu Sukumaran for an album according to tune already set in June 2010.</span></div>
<br /></div>
Leelahttp://www.blogger.com/profile/16813146628317640040noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5067678694116015883.post-20529316760515004932014-12-14T13:07:00.003+05:302014-12-14T13:07:39.243+05:3055.தும்பிக்கையோனே துணை வருவாயே <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
சுலோகம்<br />
ஐந்து கரங்களும் அருகணியும் திருமுடியும்<br />
இன்னலறுத்திடும் என்றும் ஏத்தமிட்டோம் வித்தகனே<br />
<br />
பாட்டு<br />
தும்பிக்கையோனே துணை வருவாயே<br />
சித்தி விநாயகா சிவன் மகனே<br />
<br />
மலைமகள் பிடிமண்ணில் பிறந்த முதல்வனே<br />
அலைமகள் நாயகனின் மருமகனே<br />
வலஞ்சுழி விநாயகா தும்பை துலங்கு மார்பா<br />
முப்பழம் அதிரசம் அப்பமொடவல்பொரி கைத்தலமோதகம்<br />
கனிவுடன் கொள்வாய் கடம்பன் சோதரனே (தும்பிக்கையோனே)<br />
<br />
தாய்தந்தையை வலம் வந்தன்று மாங்கனி பெற்றவனே<br />
கமண்டலத்தை கவிழ்த்தன்றிங்கு காவிரி கொணர்ந்தவனே<br />
<br />
ஐங்கரனாம் என் அய்யனே அல்லல்களகற்றும் வள்ளலே<br />
கையிலை கூப்பி அடிபணிகின்றோம் கயிலை கணபதியே (தும்பிக்கை)<br />
<br />
வள்ளி முன்னன்று வேலனுக்காக வாரணமானவனே<br />
சாமரக்கர்ணனே முழுமுதற்கடவுளே எருக்கில் மகிழ்பவனே<br />
<br />
ஆனைமுகம் கொண்ட அய்யனே பானைவயிறோனே சரணமே<br />
கையிலை கூப்பி அடிபணிகின்றோம் கயிலை கணபதியே (தும்பிக்கை)<br />
<div>
<br /></div>
<span style="background-color: #e0e0e0; color: #021324; font-family: 'times new roman'; font-size: 13px; line-height: 18.2000007629395px;">All rights reserved for the poem. Leela Narayanaswamy©</span><br />
Written for Mr. Sibu Sukumaran for an album according to tune already set in June 2010.<br />
<br />
<br /></div>
Leelahttp://www.blogger.com/profile/16813146628317640040noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5067678694116015883.post-58996077551483840132014-12-13T18:54:00.001+05:302014-12-13T18:57:03.935+05:3031.ஓநாய் நாட்டிலே <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
ஓநாய் நாட்டிலே ஓடியாடுதே<br />
நீதி நேர்மையோ மாயமானதே<br />
குண்டுவெடி கொலை நாளும் பெருகுதே<br />
மொத்தநாடுமே சுடுகாடானதே<br />
தந்தை காமத்தீயில் கருகும் மகளே மனித மிருகங்களே ...........<br />
<br />
பள்ளிப்பிள்ளையும் பலியாடாகுதே<br />
கள்ளப்பணம் கல்லும் கற்பழிப்பு கொள்ளை<br />
நித்தம் ஊழல் நாட்டில் நிம்மதி எங்கே ?..........<br />
<br />
காப்பகங்களும் அடிமைக்கூடமே<br />
கள் சுமக்கும் பிள்ளை கண்ணில் ஏக்கம் கண்டேன்<br />
வாக்குறுதி எல்லாம் ஒட்டு என்னும் வரையே<br />
<br />
நன்மை நாடியே நெஞ்சுருகுதே<br />
வழியும் தேடியே நாடு காக்கவே<br />
<span style="background-color: #e0e0e0; color: #021324; font-family: 'times new roman'; font-size: 13px; line-height: 18.2000007629395px;">All rights reserved for the poem. Leela Narayanaswamy©</span><br />
written for Mr. Unnikrishnan.K.B. under the theme "FRUSTRATION"<br />
according to the already set tune. on 03.05 14</div>
Leelahttp://www.blogger.com/profile/16813146628317640040noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5067678694116015883.post-7286154407107322222014-12-13T18:43:00.001+05:302014-12-13T18:57:25.237+05:3030.அன்றென்னவோ<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
அன்றென்னவோ பன்னோசையும் கேட்கவே<br />
ஓர் மழலையின் அழுமோசையும் சேரவே<br />
கனவிலும் காணாக் காட்சிகள் அத்தினம் காணவே<br />
இருகண் இமைக்கும் நேரத்தில் நிசப்தம் ஆனதே<br />
எங்கெங்கெயோ தன் தாயினை தேடியே<br />
நின்றோரமாய் கண் ஊற்றென மாறவே<br />
<span style="background-color: #e0e0e0; color: #021324; font-family: 'times new roman'; font-size: 13px; line-height: 18.2000007629395px;">All rights reserved for the poem. Leela Narayanaswamy©</span><br />
written for"Beyond Calton"- a safe earth on Feb 2012<br />
sung by Mr K.B.Unnikrishnan<br />
<br /></div>
Leelahttp://www.blogger.com/profile/16813146628317640040noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5067678694116015883.post-82477237916524532072014-12-13T18:34:00.001+05:302014-12-13T18:44:52.365+05:3029.எங்கோ தொலைவிலே<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
பெண் குரலில்<br />
எங்கோ தொலைவிலே தொடரா நிழலாய் நான்<br />
தேங்கியே விழிமொழியாய் கண்ணீர் பொழியும்<br />
காட்சியில் கலைந்ததம்மா பிரியா விடையும்<br />
ஆண் குரலில்<br />
சந்திரனின் பிரியமுள்ள பூவே நீ இரவினில் மலராதே<br />
ஏதோ கனாவில் அறியாதென் நெஞ்சில்<br />
கனலுமாய் எரிக்கிறாய் நீறுதேன் பஞ்சணையே (சந்திரனின்)<br />
<br />
கடலே வெண்ணலைகளை அனுப்பியே<br />
உரையாட விழைந்தனை தனியே நீ<br />
யாரோடும் சொல்லாத்த என் மோகங்கள்<br />
காதோடு கேட்காமல் தானாகவே<br />
எங்கெங்கோ பாய்ந்தங்கு மௌனமாய் ஓடி<br />
மாய்ந்ததேன் சொல்லேன் (சந்திரனின்)<br />
<br />
நிலவே நின் ஒளியில் அவள் பிம்பம்<br />
தெரியவே நிழலாய் நானங்கு<br />
ஆராரும் காணாதே நின்னைத் தொடரவே<br />
அம்முகம் மாயுதே கானல் நீர்போல்<br />
இனி அன்பே மறக்குமோ மெதுவாய் மூளும் என்னனுராகம்<br />
written for Mr. Susanth Sankar according to the tune already set on 23.01 12.<br />
<br />
<br />
<span style="background-color: #e0e0e0; color: #021324; font-family: 'times new roman'; font-size: 13px; line-height: 18.2000007629395px;">All rights reserved for the poem. Leela Narayanaswamy©</span><br />
</div>
Leelahttp://www.blogger.com/profile/16813146628317640040noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5067678694116015883.post-89330557934537094152014-12-13T17:50:00.000+05:302014-12-13T17:50:18.877+05:3028.வானுயர் மரங்களும் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
வானுயர் மரங்களும் வடிவில்லா காற்றும்<br />
நாள் தோறும் பரிமாறும் காதல் மொழிகள்<br />
மேகம் கேட்டங்கு நாணித்ததாலோ<br />
அகன்று நிறம் மாறி மறைவிடம் தேடி<br />
மண்ணில் இறங்குதே மின்னலிடி மழையாய்<br />
<br />
<span style="background-color: #e0e0e0; color: #021324; font-family: 'times new roman'; font-size: 13px; line-height: 18.2000007629395px;">All rights reserved for the poem. Leela Narayanaswamy©</span><br />
came in Face Book on 18.01 13 through Mr. Susanth Sankar</div>
Leelahttp://www.blogger.com/profile/16813146628317640040noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5067678694116015883.post-50437329290505392212014-12-13T17:42:00.002+05:302014-12-13T18:17:44.301+05:3027. தூரே தூரே போனாலும் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
தூரே தூரே போனாலும்<br />
தொடரும் உந்தன் நினைவுகளும்<br />
யாரும் யாரும் அறியாதே<br />
யாழின் இசையாய் இனிமை தரும்<br />
எங்கோ பெய்யும் மழைத்துளிகள்<br />
பாங்காய் தாளம் கொட்டிவரும்<br />
இங்கே அங்கே என்றிருந்தாலும்<br />
எங்கும் நிறைந்த காற்றலைபோல்<br />
வானும் நிலவும்போல் இணை பிரியா<br />
தென்றும் நம்முறவு தொடர்ந்திடுமே<br />
<br />
<span style="background-color: #e0e0e0; color: #021324; font-family: 'times new roman'; font-size: 13px; line-height: 18.2000007629395px;">All rights reserved for the poem. Leela Narayanaswamy©</span></div>
Leelahttp://www.blogger.com/profile/16813146628317640040noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5067678694116015883.post-4960847904397604472014-12-13T17:36:00.003+05:302014-12-13T17:36:49.184+05:3026. வசந்தமே உன் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
வசந்தமே உன் நினைவுகள் வளருது<br />
வாடும் என் மனதை நாளும் வருடுது<br />
காலம் போனாலும் காதல் மாறுமோ?<br />
காத்திருப்பில் ஒரு சுகமுண்டு தெரியுமோ?<br />
<br />
ஆழப்பதிந்த உன் மலர்முகம் மனதை<br />
ஆழ்கடலலை போல் ஆட்டுதம்மா<br />
பாடும் கொடியாக<br />
தொடரும் கதையாக<br />
தேடும் விடையாக<br />
எங்கோ நின்று நீ இன்று <span style="background-color: white; color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 15px; line-height: 20.7900009155273px;"> </span><br />
பாடும் கவியாக என்னை மாற்றிவிட்டாய்<br />
<span style="background-color: #e0e0e0; color: #021324; font-family: 'times new roman'; font-size: 13px;">All rights reserved for the poem. Leela Narayanaswamy©</span></div>
Leelahttp://www.blogger.com/profile/16813146628317640040noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5067678694116015883.post-39466892271635943812014-12-13T17:28:00.000+05:302014-12-13T17:28:44.636+05:3025.சிதறி விழும்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
சிதறி விழும் பூக்களென சிரிக்கும் மத்தாப்பு<br />
சின்னஞ்சிறு மழலைகளின் முகமலரில் சிரிப்பு<br />
சிங்காரி கங்கையவள் வெந்நீரில் வருகை தர<br />
எங்கும் எண்ணைக்குளி புத்தாடையுடன் இனிப்பு<br />
தீமையின் இருளகல தீபங்களின் ஆவளி<br />
திருமகள் அருள் பெருக தீபமேற்றி தீபாவளி<br />
<br />
நரகனெனும் அசுரனையே வதித்தனின்னாளே<br />
ரகுராமன் வனவாழ்க்கை முடிந்ததின்னாளிலே<br />
மாகாளி சினம் மாறி இந்நாளில் முகம் மலர<br />
வங்கம் ஆற்றினிலே மிதக்கவிடும் தீபங்கள்<br />
இமயம் முதல் குமரி வரை தீபங்களின் ஆவளி<br />
மகிழ்வலை எதிரொலியாய் தீபமேற்றி தீபாவளி <br />
<span style="background-color: #e0e0e0; color: #021324; font-family: 'times new roman'; font-size: 13px;">All rights reserved for the poem. Leela Narayanaswamy©</span></div>
Leelahttp://www.blogger.com/profile/16813146628317640040noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5067678694116015883.post-86230040822140645272014-12-12T20:32:00.002+05:302014-12-13T11:19:02.494+05:3054.கண்ணன் காப்பான் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
கண்ணன் காப்பான் என்னைக் கண்ணன் காப்பான் -மனக்<br />
கவலைகளில்லயம்மா<br />
என்னை அணைத்து பஞ்சுக்கன்னம் பதிப்பான் -அந்த<br />
வெண்ணை உண்ட கள்வனம்மா<br />
<br />
கனவில் கண்டேன் குழலூதும் கண்ணனை- கையைக்<br />
கனிவாய் உயர்த்திச் சிரித்தான்<br />
கட்டி அணைத்தே ஒரு முத்தம் கொடுக்க நான்<br />
எட்டி நடந்தேன் ஒளிந்தான்<br />
<span style="background-color: #e0e0e0; color: #021324; font-family: 'times new roman'; font-size: 13px;">All rights reserved for the poem. Leela Narayanaswamy©</span><br />
<br />
<br /></div>
Leelahttp://www.blogger.com/profile/16813146628317640040noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5067678694116015883.post-70101118872763574882014-12-12T16:59:00.001+05:302014-12-13T11:18:18.805+05:30 53.ஆடு கண்ணா <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<br />
ஆடு கண்ணா ஊஞ்சலாடு கண்ணா<br />
அஞ்சனவண்ணா ஆடு கமலக்கண்ணா<br />
<br />
கருங்கூந்தல் காற்றில் கலைந்தோடி ஆட<br />
கண்ணே உன் மயில்பீலி உடன்சேர்ந்து ஆட<br />
முத்தாபரணங்கள் முடியில் அசைந்தாட<br />
மயக்கும் கருவிழிகள் மலர்ந்து சிரியாட<br />
மார்பில் துளசியோடு மணிமாலை ஆட<br />
முத்தே மணிவண்ணா நீ ஊஞ்சல் ஆடு<br />
<br />
காதில் குண்டலங்கள் குழைந்து குழைந்தாட<br />
கிண்கிணி ஓசையுடன் கைவளை இசைபாட<br />
இடையில் செருகிய ஓடக்குழல் குஞ்சம் ஆட<br />
பட்டாடை பாங்காய் அங்குமிங்கும் ஆட<br />
பாதசரம் சலசலத்து மெல்லிசையாய் ஓசையிட<br />
புன்சிரி முகவண்ணா நீ ஊஞ்சல் ஆடு <br />
<pre style="background-color: #e0e0e0; color: #333333; font-size: 13px; line-height: 20px; white-space: pre-wrap;"><span class="Apple-style-span" style="border-collapse: separate; color: black; line-height: normal; white-space: normal;"><span class="Apple-style-span" style="color: #021324;"><span class="Apple-style-span" style="font-family: 'times new roman';">All rights reserved for the poem. Leela Narayanaswamy©</span></span></span></pre>
</div>
Leelahttp://www.blogger.com/profile/16813146628317640040noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5067678694116015883.post-63045532557082280652012-10-06T19:59:00.003+05:302014-12-13T16:04:35.123+05:3024.இயற்கை வளம் காப்போம் -வான்நிலம் நெருப்பு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<br />
<br />
வான்நிலம் நெருப்பு காற்று நீரென்ற ஐந்துமாய்<br />
காக்கிறாள் இயற்கை அன்னை நன்றி என்றுமே<br />
<br />
மரம தரும் மழையால் நன்மையே<br />
மகன் போல காப்போம் நண்பனே<br />
<br />
ஆலைகள் உமிழும் அமில வாயுவால் காற்றிலே<br />
ஆவினம் பறவை மக்கள் சுவாசமே தேடுதே<br />
<br />
வானில் புரட்சி செய்தால் பூமியே<br />
ஊனமுற்று போகும் உண்மையே<br />
<br />
vaannilam neruppu katRu neerendra aynthumaay<br />
kaakiRaaL iyaRkai annai nandRi endRume<br />
<br />
maram tharum mazhaiyaal nanmaiye<br />
makanpola kaappom nanpane<br />
<br />
aalaikaL umizhum amila vaayuvaal kaatRile<br />
aavinam paRavai makkaL swaasame theduthe<br />
<br />
vaanil puratchi cheythaal boomiye<br />
oonamutru pokum uNmaiye<br />
<br />
വാന്നിലം നെരുപ്പു കാറ്റു നീരെന്ട്ര ഐന്തുമായ്<br />
കാകിറാള് ഇയര്കൈ അന്നൈ നന്ട്രി എന്ട്രുമേ<br />
<br />
മരം തരും മഴൈയാല് നന്മൈയേ<br />
മകന് പോല കാപ്പോം നണ്പനേ<br />
<br />
ആലൈകള് ഉമിഴും അമില വായുവാല് കാറ്റിലേ<br />
ആവിനം പറവൈ മക്കള് സ്വാസമേ തേടതേ<br />
<br />
വാനില് പുരഷി ചെയ്താല് ഭൂമിയേ<br />
ഊനമുട്രു പോകും ഉണ്മൈയേ<br />
(written as per the tune already set)<br />
written according to the tune set. sung byMr.Unnikrishnan.K.B.<br />
<br />
<pre style="background-color: #e0e0e0; color: #333333; font-size: 13px; line-height: 20px; white-space: pre-wrap;"><span class="Apple-style-span" style="border-collapse: separate; color: black; line-height: normal; white-space: normal;"><span class="Apple-style-span" style="color: #021324;"><span class="Apple-style-span" style="font-family: 'times new roman';">All rights reserved for the poem. Leela Narayanaswamy©</span></span></span></pre>
<br />
<br /></div>
Leelahttp://www.blogger.com/profile/16813146628317640040noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5067678694116015883.post-59456383395089359102012-09-10T13:03:00.000+05:302018-02-12T18:34:39.955+05:30 ஸ்ரீமத் பகவத் கீதை (சுருக்கமாக)<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
காப்பு<br />
<br />
ஆதிமுதல்வனே அருள்மிகு விநாயகா<br />
வேழமுகத்தோனே வேங்கடன் மருகனே<br />
வினை தீர்க்கும் வித்தகனே வேண்டினேன் உன்னையப்பா<br />
இடையூறு களைந்துதவ இங்கே எழுந்தருள்வாய்<br />
<br />
வேறு<br />
<br />
வேதசாரமாம் கீதைதனை இங்கு<br />
கீதமாய் நாம் கூடி பாடிடுவோம்<br />
சோதனை வேதனை நிறைந்த வாழ்விலே<br />
சோர்விலா இன்பம் அடைந்திடுவோம்<br />
<br />
அத்தியாயம் 1<br />
<br />
அரசகுலத்தோராம் பாண்டவர் கௌரவர்<br />
அரியணைக்காக வேறாகி நின்றனர்<br />
பாண்டவர் தூதனாய் சென்றான் கண்ணன்<br />
பரிந்துரைத்து போரை ஒழிவாக்க நினைத்தான்<br />
<br />
ஆணவம் ஆத்திரம் கண்ணை மறைத்திட<br />
அற்பர் கௌரவர் முதிர்ந்தனர் போரிட<br />
பார்த்தனுக்காக தேரோட்டினான் கண்ணன்<br />
கௌரவர் நின்றனர் பீஷ்மர் தலைமையில்<br />
<br />
எதிரிகளாய் நின்ற உறவுகளைக் கண்டே<br />
பதறினான் பார்த்தன் கதறினான் கண்ணனிடம்<br />
பாபச்செயல் இது உறவோடு பகை வேண்டா<br />
கோபம் குரோதம் கொண்டு போரிட வேண்டா<br />
<br />
ஆசிரியர் துரோணர் பெரியவர் பீஷ்மர் இவர்<br />
கேசவா தவறிது போரிட வேண்டா என்றான்<br />
அரசபோக ஆசை வைத்து அற்பனானேன்<br />
அழிவது என்குலம் என்ற அறிவிழந்தேன்<br />
<br />
கலங்கிய கண்களுடன் காண்டீபம் கீழே வைத்தான்<br />
குலநாசம் செய்தோர் வாழ்வு வேண்டாமென்றே<br />
குழப்பமும் இரக்கமும் ஒருசேர நின்றான் பார்த்தன்<br />
இழப்பில் இன்பமுண்டோ சொல்வாய் கண்ணா என்றான்<br />
<br />
அத்தியாயம் 2 - சாங்க்ய யோகம் <br />
<br />
நிலைகுலைந்து தேரில் இருந்துவிட்ட பார்த்த்னிடம்<br />
நிலையாமை இறவாமை எவை என அறிகிலையோ<br />
நிதானம் கொள்வாய் எனக்கண்ணன் கூறினான்<br />
அழிவது உடலாகும் அழிவில்லை ஆன்மாவிற்கு<br />
<br />
போற்றிவளர்த்த உடல் அழியும் என்ற உண்மை<br />
மாற்றமுடியாததை மனிதனால் அறிவாய்<br />
அரசகுல தர்மமாகும் போரிடல் என்றறிவாய்<br />
அடையும் வெற்றிதோல்வி சமமாக ஏற்றிடுவாய்<br />
<br />
குலதர்மம் செய்யாமல் குழம்பி நின்றால் உன்னை<br />
உலகம் பழிக்கும் அது தீராத நரகம் ஆகும்<br />
எது தேவை என்றறிவாய் வேதங்களை நன்கறிவாய்<br />
எதிலும் பற்றற்று குலதர்மம் காத்து நிற்பாய்<br />
<br />
மனிதனின் நிலைகொள்ளா மனம் அவன் எதிரியாகும்<br />
நினைப்பதில் ஆசைகொண்டு அதனால் மோகம் கொண்டு<br />
தனைமறந்து தடுமாறி பகுத்தறிவு இழந்து விடும்<br />
ஐம்புலன்கள் மனதை தன்வசம் ஆக்கிவிடும்<br />
<br />
ஐம்புலனின் செயலாகும் இன்பதுன்பமென்றறிவாய்<br />
ஐயமின்றி அறிவாய் நிலையற்றதாகும் இவை<br />
இன்பதுன்பங்களில் சமநோக்கு பாவித்து<br />
ஆசைபயம் கோபம் இவை இல்லா முனியாம்<br />
<br />
ஸ்திதப்ரஜ்ஞனாக நீ கர்மம் செய்திடுவாய்<br />
இதுவே பிரம்மஞான நிலை முக்தி தரும் உச்ச நிலை<br />
<br />
அத்தியாயம் 3 - கர்ம யோகம்<br />
<br />
கர்மமின்றி மனிதனில்லை அறிவாய் அர்ஜுனா<br />
கர்மபல மோகமின்றி கர்மம் செய்திடுவாய்<br />
அன்னம் முதல் வேதம் வரை ஆராய்ந்தாலோ<br />
அழிவற்ற பிரம்மத்தில் வேதம் நிலை கொண்டிடுமே<br />
<br />
அரசன் எவ்வழியோ அவ்வழி மக்கள் என்பார்<br />
ஆதலால் அர்ஜுனா கர்மம் செய்ய தயங்காதே<br />
முக்குணங்கள் கர்மத்தின் காரணிகள் என்றறிவாய்<br />
கர்மகுனங்களின் பாகுபாட்டை நன்கறிவாய்<br />
<br />
சத்குணம் கடைப்பிடிப்பாய் சகலகாமம் விட்டொழிப்பாய்<br />
ஐம்புலன் அடக்கி அறிவால் ஆன்மாவை அறிவாய்<br />
பற்றற்ற கர்மம் செய்வாய் பலன் எனக்கு அர்ப்பணிப்பாய்<br />
ஆன்மசக்தி பெற்று அஞ்ஞானம்அழித்திடுவாய்<br />
<br />
அத்தியாயம் 4 - ஞான யோகம் <br />
<br />
எத்தனையோ பிறவி எடுத்துவிட்டோம் அறிவாய் நீ<br />
அத்தனையும அறிவேன் நான் அன்பா அறியாய் நீ<br />
அநீதி தலை தூக்கும் காலத்தில் பூவுலகில்<br />
அவதரித்திருப்பேன் நீதி காக்க என்றறிவாய்<br />
<br />
நல்லோரைக்காத்து நிற்கும் நண்பனாய் நான்<br />
ஓரோர் யுகத்திலும் அவதரிப்பேன் பார்த்தா<br />
பக்தரின் கற்பனைக்கொத்த உருவங்களில்<br />
பல்வேறு காட்சிகளில் தெரிவேன் அன்பா<br />
<br />
கர்மம் செய்பவனாய் தோன்றுவேன் எனினும் எனை<br />
கர்மங்கள் ஒட்டாது என்றறிவாய் பார்த்தா<br />
பற்றற்ற கர்மம் செய்பவன் யோகி<br />
பற்று வைப்பவன் கர்மபல சுகமோகி<br />
<br />
போகமோகம் நிலையற்றதறிவாய் அர்ஜுனா<br />
யோகியாய் கர்மயோகம் கடைப்பிடித்திடுவாய்<br />
<br />
அத்தியாயம் 5 - கர்ம சந்யாச யோகம்<br />
<br />
கர்மம் செய்து கர்மபலன் துறப்பதேன்?<br />
கர்மங்களைத் துறந்தால் என்ன? என்ற பார்த்தனிடம்<br />
கர்மசந்யாச யோகம் போதித்தான் கண்ணன்<br />
கர்மம் துறக்கவேண்டா கர்மயோகம் கடைப்பிடிப்பாய்<br />
<br />
கர்மம் துறந்தவழி ஞானம் பெறுதலரிது<br />
கர்மம் செய்தவழி யோகி ஆவதெளிது<br />
புலன்களின் பலன்களில் பற்றற்று நின்றால்<br />
பூலோகம் தேவலோகம் ஆகும் என்றறிவாய்<br />
<br />
நான் எனதென்றஎண்ணம் அறவே ஒழித்து<br />
நல்லபடி கர்மம் செய்தால் நீ யோகி ஆவாய்<br />
ஞானிகளும் முனிவர்களும் ஏற்றவழி இதுவே<br />
ஞானம் முழுமை பெற கர்மயோகமே நன்று<br />
<br />
ஆன்மாவைக் கண்டறிவாய் ஆசையின்றி கர்மம் செய்வாய்<br />
அரசனிலும் ஆண்டியிலும் ஒரே ஆன்மா என்றறிவாய்<br />
<br />
அத்தியாயம் 6 - தியான யோகம்<br />
<br />
கர்மங்கள் துறப்பது நன்றல்ல அறிவாய் நீ<br />
கர்மபல மோகமின்றி கர்மம் செய்வாய் நீ<br />
ஏகாந்த சிந்தையுடன் யோகம் பயில்வாய் நீ<br />
அசையாத ஆசனத்தில் சுத்தமான ஓரிடத்தில்<br />
<br />
முதுகுதலை கழுத்து இவை நேராக்கி இருப்பாய் நீ<br />
சித்தம் சிதறாமல் நாசிநுனி நோக்கியே<br />
சலனமின்றி இருந்து என்னில் மனதைச் செலுத்துவாய்<br />
அளவிற்கு அதிகமாயின் அமுதமும் விடமாகும்<br />
<br />
அளவில் குறையுமெனில் விடமும் மருந்தாகும்<br />
ஆதலால் பார்த்தா நீ அளவோடு கர்மம் செய்வாய்<br />
ஆசையைத் துறந்து ஆன்மாவில் நிலைகொள்வாய்<br />
எல்லா உயிரினமும் நான் என்ற அறிவுடன் நீ<br />
<br />
சொல்லாலும் செயலாலும் சமநோக்கு கொண்டிடுவாய்<br />
அலைமோதும் மனமொரு குரங்காகும் என்றறிவாய்<br />
அடக்கும் வழியாகும் யோகப்பயிற்சி என்றறிவாய்<br />
இப்பிறவி யோகசித்தி கிட்டாது போனாலும்<br />
<br />
இனிவரும் பிறவி உனை அவ்வழி நடத்திச் செல்லும்<br />
முயற்சி திருவினை ஆக்கும் அறிவாய் பார்த்தா<br />
மோகமற்ற யோகநிலை முழுமையான சித்தியாகும்<br />
முழுதும் துறந்த யோகி முழுபோகி என்றறிவாய்<br />
<br />
அத்தியாயம் 7 - விஞ்ஞான யோகம்<br />
<br />
ஞானம் விஞ்ஞானம் இரண்டையும் அறிவாய் நீ<br />
நீர் நிலம் நெருப்பு காற்று மனம் என்ற ஐந்தோடு<br />
ஆகாயம் அகந்தை அறிவு சேர்ந்து எட்டாக<br />
இயற்கையில் கலந்துள்ளேன் பூவுலகில் என்றறிவாய்<br />
<br />
இவையினும் உயர்ந்த ஒன்றாம் உயிர்தன் வழியாக<br />
உலகமதைத்தாங்கி நின்றேன் அன்பா அறிவாய் நீ<br />
நூல் கோர்த்த சரம்போலெண் வகையுமாய்ப் பிணைந்து<br />
இயங்கும் உலகமாம் விஞ்ஞானம் என்றறிவாய்<br />
<br />
எண்வகை இயற்கையின் இயக்கம் நான் அறிவாய்<br />
முக்குணச் சேர்க்கையாம் மாயையில் மயங்கும்<br />
பூவுலகில் என்னை அறிபவர் மிக அரிது<br />
என்னை அறிய முயற்சிப்போர் நான்குவிதம்<br />
<br />
துன்புற்றோர் பொருள்விரும்பி என்றிவிருவர்<br />
சுகதுக்க மோகவலை மாயையால் சூழ்ந்திடுவர்<br />
தத்துவஞானம் விரும்பும் மூன்றாம் வகையினரோ<br />
தன்னை எனக்கர்ப்பணித்து கர்மங்கள் செய்திடுவர்<br />
<br />
ஞானிகளாம் நான்காமவர் என்னை நன்கு அறிபவராய்<br />
நாளும் பிரியாமல் என்னுடனே லயித்திடுவர்<br />
<br />
அத்தியாயம் 8 - அட்சர பிரம்ம யோகம்<br />
<br />
அழிவில்லா பிரம்மத்தின் குணமே அத்யாத்மம்<br />
மனிதன் முதலாய பிராணிகளே அதிபூதம்<br />
காரணியாம் ஆன்மா அதிதைவம் என்றறிவாய்<br />
இவைகளில் குடிகொள்ளும் அதியஜ்ஞன் நானாகும்<br />
<br />
அணுவினும் அணுவாய் அறிவிற்கெட்டாததாய்<br />
அஞ்ஞானம் கடந்த பழமையாம் பரம்பொருளை<br />
அனுதினமும் தியானித்து ஒருநிலையில் நின்றாயேல்<br />
அந்திம காலத்தில் அவனையே சென்றடைவாய்<br />
<br />
பற்றற்று பிராணனை சிரசில் நிலைநிறுத்தி<br />
பிரம்மமாம் ஓம் எனும் ஒற்றைச்சொல் உச்சரித்து<br />
ஏகாந்த சிந்தையுடன் என்னை நினைத்திட்டால்<br />
எளிதில் நான் அருகிலாவேன் என்றறிவாய் பார்த்தா<br />
<br />
ஆயிரம் யுகம் என்ற பகல் ஒன்றில் தோன்றும் இவை<br />
ஆயிரம் யுகம் என்ற இரவொன்றில் மறையுமிவை<br />
அயனின் ஆயுள் இக்கணக்கில் வயது நூறு<br />
அங்ஙனம் அனைத்தும் அழியும் என்றறிவாய்<br />
<br />
அந்திமகாலம் தேய்பிறை இரவு மற்றும்<br />
தட்சிணம் என்றாயின் யோகிக்கும் மறுபிறவி<br />
உத்தராயணம் வளர்பிறை பகல் இவையில்<br />
உயிர் நீத்த யோகி பிரம்மத்தை அடைந்திடுவான்<br />
<br />
அத்தியாயம் 9 - ராஜவித்யா ராஜகுஹ்ய யோகம்<br />
<br />
இயற்கையால் உண்டாகும் ஐம்புலச் செயல்பாடு<br />
அதனால் உண்டாகும் மனிதனும் பிராணிகளும்<br />
இயக்கம் என்கையில் அறிவாய் அர்ஜுனா நீ<br />
என்னில் எல்லாம் அடக்கம் என்றறிவாய்<br />
<br />
வேதமும் வேள்வியும் வெயிலும் நானே<br />
இருப்பிடம் காப்பிடம் என்றிவை நானே<br />
உலகை இயக்கும் தந்தைதாய் நானே<br />
பிறவாமை இறவாமை என்றிவை நானே<br />
<br />
எல்லாதேவதையும் என்னில் அடக்கம் ஆகும்<br />
என்னை அறிந்தவரின் தொண்டன் நானாகும்<br />
இலை பூ பழம் நீர் என்றிவையில் ஒன்றையேனும்<br />
ஒன்றிய பக்தியுமாய் எனக்கு தந்திட்டால்<br />
<br />
உவகையுடன் ஏற்பேன் அறிவாய் அன்பா நீ<br />
உன் செயலை எல்லாம் எனக்கு அர்ப்பணிப்பாய்<br />
எல்லோரிடமும் சமநோக்கு கொண்டவன் நான்<br />
என்னை அறிபவரில் எப்போதும் இருப்பவன் நான்<br />
<br />
அத்தியாயம் 10 - விபூதி யோகம்<br />
<br />
அர்ஜுனா அறிவாய் அனைத்திலும் நான் உள்ளேன்<br />
ஆனாலும் என்னை அறிபவர் ஒருசிலரே<br />
அஞ்ஞானம் அகன்ற ஞானிகளாம் அவர்<br />
அனுதினமும் என்னை நினைவில் கொள்பவர்<br />
<br />
முதலும் நடுவும் முடிவும் நானே<br />
வேதத்தில் சாமமும் மாதத்தில் மார்கழியும்<br />
ஆதித்யரில் விஷ்ணுவும் யக்ஞத்தில் ஜபயக்ஞம்<br />
வ்ருஷ்ணிகுலத்தவரில் வாசுதேவன் நானே<br />
<br />
முனிகளில் வியாசனும் கவிகளில் சுக்ரனும்<br />
பாண்டவரில் நீயும் பறவையில் கருடனும்<br />
விலங்கில் சிங்கமும் வித்தையில் ஆன்மமும்<br />
அகார எழுத்தும் அனந்தனும் வருணனும்<br />
<br />
பித்ருவில் அர்யமா தைத்யரில் பிரஹலாதன்<br />
காலத்தில் வசந்தமும் காலனாம் யமனும்<br />
காயத்ரி கங்கா காற்றும் காலமும்<br />
செங்கோலும் நீதியும் சூதும் வெற்றியும்<br />
<br />
பெண்ணினக்கீர்த்தியும் ரகசியத்தில் மௌனமும்<br />
மீனில் மகரமும் ஞானியில் ஞானமும்<br />
ஆயுதபாணியாம் ராமனும் நானே<br />
அரசமரமும் அரசனும் நானே<br />
<br />
வஜ்ராயுதமும் வாசுகியும் நானே<br />
ஐராவதமும் உச்சைசிரவசும்<br />
காமதேனுவும் மன்மதனும் நானே<br />
நாரதன் சித்ரதன் கபிலமுனி<br />
<br />
பிரகஸ்பதி ப்ருகுமுனி குபேரன் நான்<br />
இந்திரன் சூரியன் சங்கரனும்<br />
சுப்ரமணியனாம் சேனாபதியும்<br />
அக்னி மேரு இமயமும் நான்<br />
<br />
மரீசி சந்திரன் சமுத்திரம் நான்<br />
ஒரெழுத்தாம் பிரணவமும் நான்<br />
ஐம்புலன்களில் மனமே நான்<br />
விவேகம் முயற்சி வெற்றியும் நான்<br />
<br />
எல்லாப்பொருள்களின் மேன்மை நான்<br />
எல்லோரையும் இயக்கும் ஆளுநன் நான்<br />
உதவும் சிந்தையில் உயர்ந்த எண்ணத்தில்<br />
நிதமும் நின்று ஒளிர்வேன் நான்<br />
<br />
அத்தியாயம் 11 - விஸ்வரூப சந்தர்சன யோகம்<br />
<br />
எல்லாம் என்னில் அடக்கம் என்ற கண்ணனை<br />
அவ்வாறே காண விழைந்த பார்த்தன் முன்<br />
ஆச்சர்யமிக்க ஐங்குணரூபம் கொண்டு<br />
அர்ஜுனன் காணவே கண்ணன் நின்றான்<br />
<br />
தெய்வீக கண்கள் பெற்றே அர்ஜுனன்<br />
திவ்ய ரூபம் கண்டு மயங்கி நின்றான்<br />
அண்டசராசரம் அனைத்தும் தாங்கியே<br />
அர்ஜுனன் முன்னில் கண்ணன் ரூபம்<br />
<br />
பன்முகம் பலகண்கள் ஆயுதம் பற்பல<br />
பளீர் என்ற கோடி சூர்ய ஒளியுமாய்<br />
வானுயர்ந்த சரீரம் கொண்டே கண்ணன்<br />
பாண்டவகுமாரன் முன்னில் நின்றான்<br />
<br />
விலங்கினம் முதல் விண்மீன் கூட்டம் வரை<br />
விரிவாக கண்ணனில் கண்டான் பார்த்தன்<br />
எரியும் நெருப்பை முகத்தில் கண்டான்<br />
சந்திர சூரியர் கண்களாகக் கண்டான்<br />
<br />
அனைத்து உயிர்களும் அவனது உடலில்<br />
தத்தம் செயலுமாய் நடமாடிடவே<br />
அளவில் பெரிதாகி நின்ற கண்ணனில்<br />
அசுராதி தேவ முனிவர் கண்டான்<br />
<br />
அர்ஜுனன் கண்டான் அங்கே தன் தேரை<br />
அயர்ந்து இருக்கும் தன்னையும் தனக்கு<br />
உபதேசம் செய்யும் அச்சுதனையும் கண்டான்<br />
அற்புத ரூபமாய் கண்ணன் நிற்கக் கண்டான்<br />
<br />
அக்னிப் பிழம்பாய் திகழும் ரூபமாய்<br />
அனைத்துலகையும் தாங்கும் வண்ணமாய்<br />
அளவிட முடியா அரிய உருவமாய்<br />
அநேக முகமும் கோரைப்பற்களுமாய்<br />
<br />
அனைத்து ஆயுதமும் கதையும் சக்ரமும்<br />
அனைத்து தலைகளிலும் கிரீடம் சூடியும்<br />
ஆதிஅந்தமில்லா அதீத அளவுமாய்<br />
அனைவரும் பயக்கும் ரூபம் கண்டான்<br />
<br />
கர்ணன் கௌரவர் துரோணர் பீஷ்மருடன்<br />
கணக்கிலடங்காத இருபுற சேனைகளும்<br />
அகன்ற வாய்களில் சென்று வீழ்வதை<br />
அர்ஜுனன் கண்டு வியந்து நின்றான் <br />
<br />
அச்சுதா கேசவா பொறுத்தருள்வாய்<br />
அக்னியாய் எரிக்கும் ஆதிமூலமே<br />
அளவிடமுடியா பிழை செய்தேனே<br />
அன்பால் உனை நான் அடே என்றழைத்தேனே<br />
<br />
கண்டேன் கௌரவர் கர்ணன் முதலாய<br />
கணக்கிலா சேனைகள் உன்வாயில் வீழ்வதை<br />
அறியேன் அதன் உண்மை அருள்புரிவாய் என்றான்<br />
அச்சுதன் கூறினான் இவ்வாறு அவனிடம்<br />
<br />
நீ கண்ட இவரழிவு நடப்பது நிச்சயம்<br />
நீ வெறும் அம்பே உன்செயல் ஏதுமில்லை<br />
துரோணர் முதலாய பெரியோர் அனைவரும்<br />
மாண்டு போனவரே என்பதை அறிவாய்<br />
<br />
அர்ஜுனன் அது கேட்டு அதிர்ந்து நின்றான்<br />
அச்சுதா எனது அகங்காரம் பொறுப்பாய்<br />
எல்லாமாய் எல்லாமும் அறிந்தவன் நீயே<br />
எல்லாச்செயல்களின் காரணம் நீயே<br />
<br />
நான்எனதென்ற மமதை கொண்டுன்னிடம்<br />
நானாவிதமாய் நான் உரைத்தது பொறுப்பாய்<br />
ஆதிமூலமே உன் திவ்யரூபம் கண்டேன்<br />
அழகிய உனது இயல்புருவை விழைந்தேன்<br />
<br />
சங்குசக்ரம் கதை கிரீடம் கொண்டே<br />
சாந்த ரூபனாய் என்முன் நிற்பாய்<br />
அனந்தசயனா என்றடி பணிந்துநின்றான்<br />
தன்னியல்பெய்திய கண்ணன் பார்த்தனிடம்<br />
<br />
அரிதாகும் காண்பதென் ஐங்குணரூபம்<br />
அனன்யபக்தியால் அதெளிதாகும் என்றான்<br />
<br />
அத்தியாயம் 12 - பக்தி யோகம்<br />
<br />
மனமுழுதும் நானாக யோகத்தில் இருப்போர்<br />
அழிவில்லா அருவமாம் அறுதியில்லா பிரம்மத்தை<br />
எவர்க்கும் பொதுவாம் எங்கும் நிறை பரம்பொருளை<br />
எல்லோரிடமும் சமநோக்கு கொண்டு<br />
<br />
எல்லா உயிரின் நலன் கருதி தியானிப்போர்<br />
என்னையே அடைவர் என்றறிவாய் அர்ஜுனா<br />
வடிவில்லா பிரம்மத்தை தியானித்தல் பலர்க்கும்<br />
கடினப்பயிற்சி என்றறிவாய் பார்த்தா நீ<br />
<br />
என்றும் என்னையே நினைத்து வாழ்ந்திடுவாய்<br />
அன்றேல் எல்லாமும் என்னிடம் சமர்ப்பிப்பாய்<br />
அன்றேல் கர்மயோகம் கடைப்பிடித்து<br />
உனதென்ற எண்ணமின்றி வாழும் நிலை கொள்வாய்<br />
<br />
எதனாலும் உணர்வுகள் சிதறாமல் காப்பாய்<br />
இன்பதுன்ப முதலான இரட்டைகளால் மனது<br />
இடறிவிழாமல் பயிற்சி மேற்கொள்வாய்<br />
உலகியல்நீதி வழிகளாம் என்னுரையை<br />
<br />
உள்ளபடி கருத்தில் நீ கொண்டு நடந்தால்<br />
உத்தமனாய் என்றும் எனக்குப் பிரியனாவாய்<br />
<br />
அத்தியாயம் 13 - க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞ்ய விபாக யோகம்<br />
<br />
ஆலயம் ஆகும் இவ்வுடலில் மனம்நிறை<br />
ஆண்டவன் நான் என்று அறிவாய் அர்ஜுனா<br />
ஐம்புலன்களும் அதனைந்து செயல்பாடும்<br />
அகங்காரம் முதலாய உணர்வுகள் கூடியதே<br />
<br />
ஆலயம் என்ற இவ்வுடல் என்றறிவாய்<br />
ஆலயச்செயல்பாட்டில் பற்றற்ற நிலை கொண்டு<br />
ஆன்மாவைத் தேடி தனிமையில் தியானித்தல்<br />
ஞானம் என்றறிவாய் அல்லவை அஞ்ஞானம்<br />
<br />
எல்லாமாய் எல்லோரிலும் இயங்கும் பரம்பொருள்<br />
எங்கும் நிறைந்தாலும் அருகிலில்லா ஒன்றாகும்<br />
அறிதர்கரிதாம் இப்ப்ரம்மத்தை அறிவதே<br />
ஞானமாகும் என்னை அடையும் வழியாகும்<br />
<br />
ஆன்மாவும் இயற்கையும் அநாதி என்றறிவாய்<br />
ஐம்புலக்குணங்களின் காரணி இயற்கையே<br />
செயல்களின் இன்பதுன்ப காரணி ஆன்மாவாகும்<br />
குணங்களில் பற்றாகும் பிறவியின் காரணி<br />
<br />
இவ்விருவரை அறிந்தோன் உயர்ந்த ஞானி<br />
எவ்வியிர்களிலும் என்னைக் காண்பான் ஞானி<br />
இயற்கையே கர்மகாரணி என்றறிபவன்<br />
ஆன்மாவை அதனின்று அகற்றிக் காண்பவன்<br />
<br />
அணுவளவாம் அழிவில்லா பிரம்மத்தில் அடக்கமெல்லாம்<br />
அனைத்து உயிர்களிலும் பரவிநிற்கும் பரம்பொருளாம்<br />
அதுதான் ஆன்மா அதிலேதுவும் ஒட்டாதென்று<br />
அறிந்தவன் ஞானி அறிவாய் அர்ஜுனா நீ<br />
<br />
அத்தியாயம் 14 - குணத்ரய விபாக யோகம்<br />
<br />
மகா இயற்கையாகும் எனது ஆலயத்தில்<br />
உயிர்களின் காரணியாம் தந்தை நானே<br />
உயிர்களின் உருவ காரணியே<br />
அன்னையாம் இயற்கை அறிவாய் நீ<br />
<br />
இயற்கையில் உண்டாகும் முக்குணங்கள்<br />
சத்வம் ரஜஸ் தமஸ் என்றிவையாம்<br />
நிர்மல ஒளிமயம் சத்வ குணம்<br />
ஆன்மாவை ஞானத்தில் பிணைக்கும் அது<br />
<br />
ஆசையும்பற்றும் ரஜோகுணம்<br />
ஆன்மாவை காமத்தில் பிணைக்கும் அது <br />
அஞ்ஞான காரணி தமோகுணம்<br />
ஆன்மாவை சோம்பலில் பிணைக்கும் அது<br />
<br />
முக்குணச்சேர்க்கை ஆகும் உயிர் இனம்<br />
அவைவழி உயிரினம் செயல்படுமே<br />
சத்வம் மேலிட்டால் தத்துவஞானம்<br />
ரஜஸ் மேலிட்டால் பேராசையே<br />
<br />
தமஸ் மேலிட்டால் அறிவிழந்த மயக்கம்<br />
குணமேம்பாடே உயிர்களை வழிநடத்தும்<br />
குணமேலிட்டால் பலன்கள் வேறுபடும்<br />
இச்செயல்பாட்டை அறிந்தவன் அறிவாளி<br />
<br />
கர்மபலன்களில் மயக்கம் இன்றியே<br />
குணங்கள் கடந்து தான் வேறென்றறிந்து<br />
எல்லோரிடமும் சமத்துவம் கொண்டங்கு<br />
இன்பதுன்பங்களை சமமாக ஏற்று<br />
<br />
மனச்சலனமின்றி என்னில் லயிப்பவன்<br />
முக்குணம் கடந்த பரம்பொருளை அடைவான்<br />
<br />
அத்தியாயம் 15 - புருஷோத்தம யோகம்<br />
<br />
இயற்கையில் வாழ்க்கை ஓர் அற்புதமரமாகும்<br />
மேலே வேருமாய் நிற்பவன் நான்முகனே<br />
முக்குணங்கள் வளர்ந்த கிளைகளுமாய்<br />
நான்மறைகள் அதன் இலைகளாக<br />
<br />
ஐம்புலக்குணங்கள் தளிர்களாக<br />
நிற்கும் இம்மரத்திற்கு ஆதி அந்தமில்லை<br />
கர்மச்சேர்க்கையால் பூவுலகில் பார்த்தா<br />
இம்மரத்தின் வேர்கள் பரவிடும் கீழேயும்<br />
<br />
ஆசையும் மோகமும் விட்டொழித்து<br />
ஆன்மகுணம் நன்கு கண்டறிந்து<br />
ஆன்மஞானத்தில் ஈடுபட்டு<br />
இந்தமரத்தின் மூலம் கண்டறிந்தந்த<br />
<br />
ஆதிமூலத்தை சரணடைந்தால்<br />
அதுவே எனதுயர்ந்த இடமாகும்<br />
எனது ஒருகூறாம் ஆன்மாவே<br />
எல்லா உயிர்களின் உயிரோட்டம்<br />
<br />
உடலை அடையுங்கால் ஐம்புலனில்<br />
உயிரினங்களை இழுத்துச் செல்லும்<br />
உடலை விட்டங்கு போயாலோ<br />
அவ்வைந்தையும் தன்னுடன் கொண்டு செல்லும்<br />
<br />
அழிவில்லா இந்த ஆன்மாவை<br />
அறிந்தவர் ஞானக்கண் படைத்தவரே<br />
ஒளிப்பிழம்பாய் நிற்பவன் நான்<br />
அன்னம் செரிக்க உதவும் நெருப்பும் நான்<br />
<br />
உள்ளத்தில் குடிகொண்டிருப்பவன் நான்<br />
ஞாபகம் ஞானம் வளர்ப்பவன் நான்<br />
க்ஷர-அக்ஷரரில் உயர்ந்த ஆண்மகன் நான்<br />
புருஷோத்தமனாம் பரமாத்மா நான்<br />
<br />
அத்தியாயம் 16 - தெய்வ அசுர சம்பத் விபாகயோகம்<br />
<br />
அன்பும் அஹிம்சையும் ஆன்மீக நாட்டமும்<br />
மென்மையும் நேர்மையும் கருணையும் தியாகமும்<br />
தூய்மையும் வாய்மையும் பொறுமையும் வீறும்<br />
அடக்கமும் வெட்கமும் சலனமில்லாமையும்<br />
<br />
தன்னிலை தவறாத புலனடக்கமும்<br />
தெய்வீக ஒளியும் தெய்வக்குணங்களாகும்<br />
காமம் கோபம கடுஞ்சொல் இவையோடு<br />
ஆடம்பரம் அஞ்ஞானம் அடங்காமை<br />
<br />
காமத்தால் உண்டாகும் இவ்வுலகம் பொய்யென்ற<br />
வாதமும் அசுரகுணத்தன்மை என்றறிவாய்<br />
அளவில்லா பேராசை மதிமயக்கம் கொண்டிவர்கள்<br />
அதர்மவழிகளிலே பொருளீட்டி மகிழ்ந்திடுவர்<br />
<br />
அகம்பாவம் கொண்டிவர் நான் என்ற போதை ஏறி<br />
ஆடம்பரமாக யாகங்கள் செய்திடுவர்<br />
தன்னை அல்லாமல் பிறரை நேசிக்கிலர்<br />
தமோகுண மேலிட்டால் தரந்தாழ்ந்தவரிவர்<br />
<br />
இவ்விரு குணங்களை செவ்வனே அறிவாய்<br />
மறைநெறி அறிந்து கர்மம் கைக்கொள்வாய்<br />
<br />
அத்தியாயம் 17 - குணத்ரய விபாக யோகம்<br />
<br />
அர்ஜுனா அறிவாய் குணநிலை மூன்று வகை<br />
சாத்வீகம் ராஜசம் தாமசம் ஆகுமிவை<br />
சாத்வீகம் தேவகுணம் ராஜசம் யக்ஷகுணம்<br />
தாமசம் பிரேதபூத குணமென்றறிவாய்<br />
<br />
மனதில் பேராசையுடன் உடலை வருத்தி<br />
மறைமுறை அற்றதவம் அசுரத்தன்மை<br />
உணவும் தானமும் யாகமும் மூன்றுவகை<br />
சுகமுள்ள குணமேன்மை உள்ளஉணவு சத்வம்<br />
<br />
காரம் கசப்பு சூடு புளிப்பு இவை ராஜசம்<br />
உலர்ந்ததும் பழையதும் ஆனவை தாமசம்<br />
ஒன்றிய மனதுமாய் பலனில் பற்றின்றி<br />
செய்யும் யாகம் சாத்வீகமாகும்<br />
<br />
பலனை வேண்டி அதீத ஆடம்பரமாய்<br />
பலர் முன்னில் செய்வது ராஜசம் ஆகும்<br />
வேதநெறி தவறியது தானங்கள் அற்றது<br />
மந்திரம் காணிக்கை அற்ற யாகம் தாமசம்<br />
<br />
பெரியோரை வந்தித்தல் தூய்மை நேர்மை பாலித்தல்<br />
அஹிம்சை என்றிவை உடலின் தவம் ஆகும்<br />
உண்மையும் இன்பமும் நன்மையும் கலந்த உரை<br />
பிறரை வருத்தாத நல்வாக்கு என்றிவை<br />
<br />
வாக்கினால் செய்யும் தவம் ஆகும் அறிவாய்<br />
மனத்தெளிவு கட்டுப்பாடு மௌனம் மனத்தவம்<br />
பரம்பொருளை முன்னிட்டு பலனை ஆராயாமல்<br />
கவனமாய் செய்யும் தவம் சாத்வீகமாகும்<br />
<br />
பலனைக்கருதி செய்வது ராஜசமே<br />
மூர்க்கனாய் தன்னை வருத்துதல் தாமசம்<br />
இடம் பொருள் ஏவல் இவை அறிந்து செய்யும்<br />
எதிர்பார்ப்பற்ற தானம் சாத்வீகமாகும்<br />
<br />
எதிர்பார்ப்புடனான தானம் ராஜசம்<br />
இகழ்ச்சி அலட்சியம் சேர்ந்தது தாமசம்<br />
பிரம்மத்தின் பெயர்களாகும் ஓம் சத் தத் இவை<br />
எல்லா நற்கர்மத்திலும் கூறப்படும் அறிவாய்<br />
<br />
அத்தியாயம் 18 - மோட்ச சந்யாச யோகம்<br />
<br />
கர்மம் செய்திடினும் பலன் துறத்தல் தியாகம்<br />
பலன் வேண்டி செய்யும் கர்மம் துறத்தல் துறவு<br />
இன்றியமையாதவை வேள்வி தானம் தவம இவை<br />
தியாக நோக்குடன் செய்ய வேண்டியவை<br />
<br />
விதித்த கர்மம் துறப்பது தாமசம்<br />
துன்பம் கருதி துறப்பது ராஜசம்<br />
பற்றுதல் இன்றி விதித்த கர்மம்<br />
பலனைத் துறந்து செய்வது சாத்வீகம்<br />
<br />
நல்லவை அல்லவையாய கர்மம் முறையே<br />
நாடலும் வெறுக்கலும் சாத்வீக குணமல்ல<br />
முக்குணமும் கர்மமும் மனிதனில் உள்ளவை<br />
இயற்கையாகவே நியமிக்கப்பட்டவை<br />
<br />
மனிதனவன் சரீரம் ஐம்புலங்களுடன்<br />
சுவாசம் பரமாத்மா என்ற இவ்வைந்தும்<br />
மனிதனின் கர்மகாரணிகள் அதனால்<br />
அகங்காரம் ஆகும் நான்செய்தேன் எனும் எண்ணம்<br />
<br />
அறிவு அறிபவன் அறிபடும் பொருளிவை<br />
கர்மகாரணிகள் ஆகும் நண்பா<br />
செய்வழி செய்பவன் செயல் இம்மூன்றும்<br />
கர்மம் நிறைவேற காரணிகள் ஆகும்<br />
<br />
அனைத்து உயிர்கட்கும் ஒரே ஆன்மா என்பதும்<br />
ஓரோர் உயிர்க்கும் ஆன்மா வேறென்பதும்<br />
ஞானங்களாம் முறையே சத்வம் ராஜசமாம்<br />
உண்மை அல்லாததில் ஓட்டுவது தாமசம்<br />
<br />
கவனம் சிதறாத பற்றற்ற கர்மவினை<br />
பற்றும் அகங்காரமும் கொண்ட கர்மவினை<br />
மோகமேலிட்டு சக்திமீறிச செய்யும் கர்மம்<br />
முறையே சத்வம் ராஜசம் தாமசமாம்<br />
<br />
கர்மம் செய்பவனும் இம்மூவகை ஆகும்<br />
நன்நெறியைக் கசடற கற்றல் சாத்வீகம்<br />
முழுமை பெறாத இவ்வறிவு ராஜசம்<br />
அதர்மமே தர்மம் என்றறிவு தாமசம்<br />
<br />
மனம் புலன் அடக்கும் யோகம் சாத்வீகம்<br />
பலன்கோரி புலன்வழி செல்லல் ராஜசம்<br />
அதிமோகம் கொண்ட கர்வவினை தாமசம்<br />
சாத்வீக சுகமது அந்திம சுகம் தரும்<br />
<br />
ராஜச சுகமோ ஆதியில் சுகம் தரும்<br />
உறக்கம் சோம்பலென்ற மயக்கம் தாமசம்<br />
ஆன்மீகவழியும் அடக்கமும் நேர்மையும்<br />
அந்தண குலத்தின் இயற்கை குணங்கள்<br />
<br />
வீறும் பிரதாபமும் தானமும் ஆளுமையும்<br />
அரசகுலத்தோரின் இயற்கை குணங்கள்<br />
பசுக்களை மேய்த்தல் வாணிபம் விவசாயம்<br />
என்றிவை வைசியரின் இயற்கை குணங்கள்<br />
<br />
சேவனம் புரிந்து வாழ்வதென்பது<br />
சூத்திரனின் இயற்கை குணமென அறிவாய்<br />
குலதர்மம் காப்பவனே சிறந்தவன் ஆவான்<br />
அவனில் ஆன்மாவை கடமையால் வந்திக்கிறான்<br />
<br />
குலதர்மவழி துறத்தல் நன்மாக்கமல்ல<br />
அரைகுறை ஆயினும் குலதர்மம் காத்தல் நன்று<br />
எல்லாகுல தர்மங்களும் நன்மைதீமை உடையனவே<br />
இயற்கையான இக்கர்மம் விடாமல் தொடர்வதே மேல்<br />
<br />
அளவோடு உண்டும் அகங்காரம் விட்டொழித்தும்<br />
அடக்கிய புலன்களுமாய் தனிமையில் தியானம் செய்து<br />
அனைத்து உயிர்களிலும் சமநோக்கு கொண்டு<br />
அபிமானம் அற்றவன் உள்ளம் என்னை நன்கறியும்<br />
<br />
உன்பிறவிக்குணம் உன்னைவிட்டு ஒழியாது<br />
உள்ளபடி குலதர்மமாம் போர் செய்வாய்<br />
எனக்கே சமர்ப்பிப்பாய் கர்மம் கர்மபலன்<br />
நன்கு ஆராய்ந்து நல்லதோர் முடிவெடுப்பாய்<br />
<br />
என்ற உபதேசம் கேட்ட பார்த்தனும்<br />
நன்றியுடன் வணங்கினான் நந்தகுமாரனை<br />
அச்சுதா உணர்ந்தேன் அகங்காரம் ஒழிந்தேன்<br />
அனைத்தும் உன்னில் சமர்ப்பணம் செய்தேன்<br />
<br />
தெளிந்தேன் என்றே காண்டீபம் எடுத்தான்<br />
தேவதேவனாம் கண்ணனைப் பணிந்தே<br />
பரம்பொருளை ஒன்றிய பற்றற்ற கர்மயோகம்<br />
ஞானமார்க்கமாகும் பக்தியோகம் என்றிவையை<br />
<br />
பார்த்தன் அறிய உரைத்தனன் கண்ணன்<br />
கவனமாய் படிப்பவன் கேட்பவன் நலம் பெறுவான்<br />
அரியின் நினைவே அரியதவம் இது உண்மை<br />
அறிந்து அர்ப்பித்தால் அடைந்திடுவர் முக்திநிலை<br />
<br />
சமர்ப்பணம்<br />
<br />
உன் திருவாய்மொழியாம் கீதையை கண்ணா<br />
உன்னடி பணிந்தே சமர்ப்பணம் செய்தேன்<br />
கண்ணா பொறுப்பாய் காப்பாய் அருள்வாய்<br />
கணக்கிலா தவறுகள் செய்யும் இந்த ஏழையை<br />
<br />
உலகில் எவரிலும் உள்ளவன் ஒருவனே<br />
உயிர் என்ற பெயரில் ஆள்பவன் அவனே<br />
உதவும் சிந்தையும் உயர்ந்த எண்ணமும்<br />
உள்ளோர் உணர்வில் ஒளிர்பவன் அவனே<br />
<br />
அங்கெங்கெனாதபடி எங்கும் நிறை காற்றென<br />
அனைத்து உயிர்களிலும் நிறைகின்ற பரம்பொருளை<br />
அறிந்து அனைவரிலும் ஒருமை காண்பவன்<br />
ஆதவனேபோல் ஒளிர்ந்து நிற்பான் <br />
<br />
<br />
சுபம்! <br />
<br />
<b><b><b><span class="Apple-style-span" style="color: #333333; line-height: 19px;">All rights reserved for the poem. Leela Narayanaswamy©</span></b></b></b><br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br /></div>
Leelahttp://www.blogger.com/profile/16813146628317640040noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5067678694116015883.post-39906398396782881452012-08-26T13:45:00.001+05:302014-12-13T11:17:25.160+05:3052.மலர்தாமரைமுக நாயகா வரதா<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
மலர்தாமரை முக நாயகா வரதா<br />
மாதவா யாதவதிலகா<br />
அமுதம் ஏந்திய மோகினி ரூபா<br />
அலைமகள் நாயகா தேவா<br />
<br />
அன்பர்க்கடியனே அஞ்சனவண்ணா<br />
ஆவினம் மேய்த்த இடையா<br />
அருளுக மங்களம் எங்கும்<br />
பெருகுக பேரின்பம் என்றும்<br />
<br />
அச்சுதா கேசவா அனந்தசயனா<br />
குழலூதும் கோபகுமாரா<br />
வருவாய் கண்ணா தருவாய்<br />
வாழ்வில் மங்கலம் என்றும்<br />
<br />
கண்ணா நலம் சுபமே<br />
கனிவாய் அருள்வாயே<br />
கண்ணா அருள்வாயே<br />
நலம் சுபம் ஜெயம் என்றுமே<br />
<b style="background-color: white; color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 15px; line-height: 20.7900009155273px;"><b><b><span class="Apple-style-span" style="line-height: 19px;">All rights reserved for the poem. Leela Narayanaswamy©</span></b></b></b><br />
<br />
<b style="background-color: white; color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 15px; line-height: 20.7900009155273px;"><b><b><span class="Apple-style-span" style="line-height: 19px;">All rights reserved for the poem. Leela Narayanaswamy©</span></b></b></b></div>
Leelahttp://www.blogger.com/profile/16813146628317640040noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5067678694116015883.post-45776490656287766812012-08-26T13:34:00.001+05:302014-12-13T16:03:57.821+05:3023aമലയാള<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<br />
മലയാള ദേശത്ത് മാവേലി വരുന്ന കാലം<br />
നാടാകെ ആഘോഷം മത്സരം സമ്മാനം<br />
<br />
വീടിന്റെ മുറ്റത്ത് പൂക്കളം പുലരിയില്<br />
പാടിക്കളിക്കുന്നു ഊഞ്ഞാലിട്ടൊരുകൂട്ടം<br />
<br />
മാദേവന് വാമനന് എഴുന്തള്ളും നേരം<br />
തിരുവോണ സദ്യയുമായ് സ്വാഗതം സ്വാഗതം<br />
<br />
തിരുവോണക്കോടിയുമായ് കളിചിരിതൂകി ബാലര്<br />
തിരുനാളില് മിത്രമുമായ് ഓടിക്കളിയായ്<br />
<br />
ഈചിരി എന്നെന്നും മായാതെ കാക്കണേ<br />
ഈരടിയില് മൂണ്ലോകം അളന്ന നാരായണ<br />
</div>
Leelahttp://www.blogger.com/profile/16813146628317640040noreply@blogger.com0