Friday, December 2, 2011

ஓசையில்லா

ஓசையில்லா ஏக தாளத்தில்
பாடும் மௌன ராகங்கள்
கண்ணோட்டங்கள் மொழிகளுமாய்
கண்ணீர்த்துளிகள் சுருதியாக (ஓசை)

எங்கோ அலையும் நினைவுகளில்
ஏதோ தேடும் பாவனையாய்
என்றோ இழந்த பழமைகளை
இன்றும் மெல்லும் ஆவினமாய் (ஓசை)

தேங்கி நிற்கும் உணர்வுகளை
பாங்காய் கோர்க்கும் பாவனையாய்
ஊனமுற்ற இந்த உள்ளத்தின்
கானம கேட்பீர் காதோர்த்து (ஓசை)
All rights reserved for the poem. Leela Narayanaswamy©

Sunday, November 20, 2011

aaRupadai veedu konda ayyappaa









Sri Ayyapan Raagamalika Virutham Sung by Vellore ARS

ആറുപടൈ വീട് കൊണ്ട അയ്യപ്പാ
ആറുമുകന്‍ സോദരനെ അയ്യപ്പാ
ഇരുമുടി കട്ടും താങ്കി അയ്യപ്പാ
ഈരൊന്‍പതു പടി കടന്തോം അയ്യപ്പാ

മാലൈയിട്ട് നോന്പിരുന്തു അയ്യപ്പാ
മലൈഏറി വന്ത് നിന്ട്രോം അയ്യപ്പാ
പുലനടക്കം തന്തരുള്‍വായ്‌ അയ്യപ്പാ
പലര്‍ക്കുതവും നര്‍ക്കുണം താ അയ്യപ്പാ
പേരാശൈ പൊറാമൈ എനൈ അയ്യപ്പാ
ചേരാത് കാത്തിടുവായ് അയ്യപ്പാ
അജ്ഞ്യാനം അകന്തൈ അകല അയ്യപ്പാ
ആടിപ്പാടി പണിന്തോമുനൈ അയ്യപ്പാ
കോപം ലോപം പോക്കിടുവായ്‌ അയ്യപ്പാ
കൂടിഉനൈ വണങ്കി നിന്‍ട്രോം അയ്യപ്പാ
കര്‍പ്പൂരം കരൈവതുപോല്‍ അയ്യപ്പാ
അര്‍പകുണം കളൈന്തിട വാ അയ്യപ്പാ

പുലിയേറും മണിഖണ്ടാ അയ്യപ്പാ
കലിയുഗവരതാ ശരണമയ്യപ്പാ
കണ്‍കണ്ട ദെയ്വമേ അയ്യപ്പാ
ശരണം ശരണം ശരണം സ്വാമി അയ്യപ്പാ



ஆறுபடை வீடு கொண்ட ஐயப்பா
ஆறுமுகன் சோதரனே ஐயப்பா
இருமுடி கட்டும் தாங்கி ஐயப்பா
ஈரொன்பது படி கடந்தோம் ஐயப்பா

மாலையிட்டு நோன்பிருந்து ஐயப்பா
மலையேறி வந்து நின்றோம் ஐயப்பா
புலனடக்கம் தந்தருள்வாய் ஐயப்பா
பலர்க்குதவும் நற்குணம் தா ஐயப்பா

பேராசை பொறாமைஎனை ஐயப்பா
சேராது காத்திடுவாய் ஐயப்பா
அஞ்ஞானம் அகந்தை அகல ஐயப்பா
ஆடிப்பாடி பணிந்தொமுனை ஐயப்பா
கோபம லோபம் போக்கிடுவாய் ஐயப்பா
கூடி உன்னை வணங்கி நின்றோம் ஐயப்பா
கற்பூரம் கரைவதுபோல் ஐயப்பா
அற்பகுணம் களைந்திட வா ஐயப்பா
புலியேறும் மணிகண்டா ஐயப்பா
கலியுகவரதா சரணம் ஐயப்பா
கண்கண்ட தெய்வமே ஐயப்பா
சரணம் சரணம் சரணம் சுவாமி ஐயப்பா
All rights reserved for the poem. Leela Narayanaswamy©

kaarthigal thirunaaL paattu


kaarthigai Deepam Virutham by Vellore ARS | Online Karaoke


அடிமுடி அறியா அருட்பெருஞ்ஜோதியே
அண்ணாமலை வாழ் அரனே சிவனே
தீப ஒளியாய் நீ திக்கெங்கும் ஒளிப்பிழம்பாய்
திகழ்ந்த நன்னாளாம் கார்த்திகை திருநாளிது

ஒருமையே இனிய இல்லறம் என்றே
உமையொரு பாகனாய் நின்ற பொன்னாளிது
மலைமீது தீபமேற்றி மகேசனை வழிபட்டு
மலைமகள் தொடங்கி வைத்த கார்த்திகை பெருநாளிது

அதிகாலை பரணி தீபம் பொன்மாலை மகாதீபம்
முக்கண்ணன் மலையில் இன்று கார்த்திகை நெய்தீபம்
ஆனைமுகன் ஆறுமுகன் ஐயப்பன் என்றிவரின்
அய்யனே அம்மையப்பா அருளிடுவாய் நீ அப்பா

അടിമുടി അറിയാ അരുള്പെരും ജ്യോതിയേ
അണ്ണാമലൈ വാഴ് അരനെ ശിവനെ
ദീപ ഒളിയായ്‌ തിക്കെങ്കും ഒളിപ്പിഴംപായ്‌
തികഴ്ന്ത നന്നാളാം കാര്‍ത്തികൈ തിരുനാളിത്
ഒരുമൈയെ ഇനിയ ഇല്ലറം എന്ട്രെ
ഉമൈഒരുബാഗനായ് നിന്ട്ര പൊന്നാളിതു
മലൈമീത് ദീപമേട്രി മഹശനൈ വഴിപട്ടു
മലൈമകള്‍ തൊടങ്കി വൈത്ത കാര്‍ത്തികൈ പെരുനാളിത്
അതികാലൈ ഭരണി ദീപം പൊന്മാലൈ മഹാദീപം
മുക്കണ്ണന്‍ മലൈയില്‍ ഇന്ട്രു കാര്‍ത്തികൈ നെയ്ദീപം
ആനൈമുകന്‍ ആറുമുകന്‍ അയ്യപ്പന്‍ എന്ദ്രിവരിന്‍
അയ്യനെ അമ്മൈയപ്പാ അരുളിടുവായ്‌ നീ അപ്പാ
All rights reserved for the poem. Leela Narayanaswamy©

Thursday, October 6, 2011

கலகம் செய் அசுரரை

கலகம்செய் அசுரரை அழித்து இந்த
உலகம் காக்க வந்த உத்தமியே
ஒன்பது நாட்களும் உருமாறி
ஓங்காரி அசுரரை போரில் வென்றாய்

தின்மையை தீர்க்கும் துர்க்கை நீ
பொன்னும் பணமும் அருள் திருமகள் நீ
பரிசுத்த அறிவருளும் கலைமகள் நீ
முப்பெருந்தேவி நீ ஆதிசக்தி
All rights reserved for the poem. Leela Narayanaswamy©

முத்தேவியர் துதி


1 துர்காதேவி
ஆங்காரி ஓங்காரி சிங்காரி நீ
ஆயுதம் பல ஏந்தும மாகாளி நீ
சிங்கவாகனத்தில் அமர்பவள் நீ
தங்கமேனியளாய் ஜொலிப்பவள் நீ
அதர்மம் அழிக்க வந்த அன்னை நீ
துக்கம் தீர்த்தருல்வாய் துர்கா நீ

2 லட்சுமி
ஆயிரம் இதழ் மலர் தாமரை வாழ்
ஆனந்தரூபிணி நீ மகாலட்சுமி
சர்வ அலங்காரி சத்குணை நீ
சரத்கால சந்த்ரமுகமுடையாய்
அலைமகள் திருமகள் அருள்வாய் நீ
அனைத்து மங்கலங்கள் தருவாய் நீ

3 சரஸ்வதி
பொய்கையில் வெள்ளைத்தாமரை வாழ்
காயத்ரி சாவித்திரி சரஸ்வதி நீ
கச்சபி சுவடி மணிமாலையுமாய்
காட்சி தரும் வாணி பாரதி நீ
அன்னவாகினியே அருள்வாய் நீ
அஞ்ஞானம் அகற்றி காப்பாய் நீ
All rights reserved for the poem. Leela Narayanaswamy©

கண்ணா


கண்ணா என் கால்கள் இடறுதடா
கைபிடித்து வழிநடத்த வருவாயா?
கண்ணா மனம் உலைபோல் கொதிக்குதடா
கண்மலர் திறந்து குளிர்விப்பாயா?

கண்ணா ஆசைக்கடலில் மனம் ஆடுதடா
ஓடமாய் வந்தெனைக் காப்பாயா?
கண்ணா வீண்மோகங்கள் கூடுதடா
கரங்களால் களைந்துதவ வருவாயா?

கண்ணா மனதில் பனிமூடலடா
குழலோசையால் உருக்கி களைவாயா?
கண்ணா எங்கே பிழை செய்தேனடா?
பவளவாய் திறந்து கூறுவாயா?

கண்ணா கனவில் நீ இல்லையடா
காரணம் என்னவென்று சொல்வாயா?
கண்ணா மனம் தாயன்பால் ஏங்குதடா
கண்முன்னில் குழந்தையாய் வருவாயா?
All rights reserved for the poem. Leela Narayanaswamy©

அசுரனாய்

அசுரனாய் மாறிய வரமுனியை
அழிக்க வந்தவளே ஆதிசக்தி
மூன்று மூர்த்திகளும் ஒன்றிணைந்து
நின்ற வடிவமே பராசக்தி

சக்ரம் சூலம் கமண்டலமும்
சகலதேவ மகாசக்திகளும்
சக்தி மிக்க சிங்க வாகனமும்
சார்த்தி நின்றவளே சந்திரமுகி

ஒன்பது நாட்கள் நீண்ட போரில்
குமாரி த்ரிமூர்த்தி கல்யாணியாய்
ரோகிணி காளிகா சண்டிகையாய்
சாம்பவி துர்கா சுபத்ராவாய்
ஒவ்வொரு வடிவம் கொண்டவளே
சகல பாபங்களும் தீர்த்திடுவாய்

அசுரனை அழித்தவன் உடல்மீதே
ஆனந்த தாண்டவம் ஆடிநின்ற
துர்கா தேவி தொழுது நின்றோம்
துன்பம் தீர்த்தருள் காமாட்சி
All rights reserved for the poem. Leela Narayanaswamy©

chila pookkaL


maraththil pookkum pookkaLalla iavai
manathil pookkum pookkaL

pukazhchchiyaal manathil pookum kaLippu
ikazhchchiyaal nikazhum manathil vedippu
makizhchchiyin veLippaadu kalakala chirippu
nekizhchchciyil ozhukum manathil pala ninaippu

EtRam varungaal thondrum poorippu
cheetRam varungaal thondrum kaduppu
chutRam choozhungaal thondrum piNaippu
kutRam kaaNungaal manathil kothippu

kavalaikal cherththidum manathil idippu
gaNanera uNarvaal irattikkum thudippu
thodarum tholviyaal thondrum kaLaippu
tholainthathu vaazhvena manahtil veRuppu

naaLai namathendRa manithanin ethirpaarppu
nambikkayil pookkum manathil chuRuchuRuppu
manithanin kaiyil illai piRappu iRappu
maaRaatha viyappu ithu Maadhavan padaippu

மரத்தில் பூக்கும் பூக்களல்ல இவை
மனதில் பூக்கும் பூக்கள்

புகழ்ச்சியால் மனதில் பூக்கும் களிப்பு
இகழ்ச்சியால் நிகழும் மனதில் வெடிப்பு
மகிழ்ச்சியின் வெளிப்பாடு கலகல சிரிப்பு
நெகிழ்ச்சியில் ஒழுகும் மனதில் பல நினைப்பு

ஏற்றம் வருங்கால் தோன்றும் பூரிப்பு
சீற்றம் வாருங்கால தோன்றும் கடுப்பு
சுற்றம் சூழுங்கால் தோன்றும் பிணைப்பு
குற்றம் காணுங்கால் மனதில் கொதிப்பு

கவலைகள் சேர்த்திடும் மனதில் இடிப்பு
கணநேர உணர்வால் இரட்டிக்கும் துடிப்பு
தொடரும் தோல்வியால் தோன்றும் களைப்பு
தொலைந்தது வாழ்வென மனதில் வெறுப்பு

நாளை நமதென்ற மனிதனின் எதிர்பார்ப்பு
நம்பிக்கையில் பூக்கும் மனதில் சுறுசுறுப்பு
மனிதனின் கையில் இல்லை பிறப்பு இறப்பு
மாறாத வியப்பு இது மாதவன் படைப்பு
All rights reserved for the poem. Leela Narayanaswamy©

kaathal

காதல் கடலினிலே மூழ்கி
கரையேறத் தவிக்கின்றேனே
கடைக்கண் நோக்கினிலே எனக்கோர்
அடைக்கலம் தருவாயோ?

கனவில் வந்து நின்றாய் - மலர்
நயன மொழி பொழிந்தாய்
முத்தமழை பொழிந்தே என்னைப்
பித்தனாய் அடித்து விட்டாய்

முத்துநகையோடும்
தத்து மொழியோடும்
மெத்த மனமிரங்கி என்
சித்தம் தெளிய வைப்பாய்

kaathal kadalinile moozhki
karaiyeRa thudikkendRene- oru
kadakkaNN nokkinile enakkor
adaikkalam tharuvaayo?

kanavil vanthu nindRaay-malar
nayanamozhi mozhinthaay
muththamazhai pozhinthe ennai
piththanaay adiththu vitaay

muththu nakaiyodum
thaththu mozhiyodum
meththa manamirangi en
chiththa theliya vaippaay
All rights reserved for the poem. Leela Narayanaswamy©


Friday, July 29, 2011

மாறாதபுன்னகையை

மாறாத புன்னகையை பூத்தருளும் தாயே
மலர் போல சிரிக்கின்ற மனம் அருள்வாய் நீயே
பேதமின்றி பேரன்பு பொழிகின்ற தாயே
வேதநெறி கூறும் அன்பு வழி காட்டு நீயே

மடமையும் அச்சமும் போக்கிடுவாய் தாயே
கடமையும் நேர்மையும் சேர்த்திடுவாய் நீயே
போதாதென்ற மனம் மாற்றிடுவாய் தாயே -நற்
பாதையை பகுத்தறியும் அறிவினைத்தா நீயே

ஏதிலார் நிறை அறியும் நற்குணம் தா தாயே
தீதிலா சொற்கூறும் நாவினைத்தா நீயே
முதியோர் முன் நாவடக்கம் தந்தருள்வாய் தாயே
நீதிவழி நடந்திட மனத்திண்மை தா நீயே

எனதென்ற செருக்கடக்கி காத்திடுவாய் தாயே
உனதடி தொழுது நின்றேன் உய்விப்பாய் நீயே
நாடிவந்தோம் உனையே நலம் அருள்வாய் தாயே
வணங்கினோம் வாழ்வை வளமாக்கு நீயே
All rights reserved for the poem. Leela Narayanaswamy©