Wednesday, September 8, 2010

38.நான்முகன் நாயகி


நான்முகன் நாயகி நாதரூபிணி
அன்னவாகினி அடிமலர் பணிந்தோம்

வெள்ளைத்தாமரையில் அமர்ந்தவளே
வெள்ளைப்பட்டாடைஉடுத்தவளே
ஏந்தும வீணையில் எழிலாய் இசையை
ஏழு ஸ்வரங்களில் கொணர்ந்தவளே
ஸ.. ரி... க.., ம... ப... த... நி... (நான்)

நாவின் அசைவில் குடிகொண்டவளே
நான்மறை போற்றும் கலைமகளே
சொல்லின் தலைவியே கல்வியின் கருவே
வளரும் செல்வமாய் வற்றாத கேணியாய்
மிளிரும் அறிவொளி தருவாய் தாயே (நான்)

All rights reserved for the poem. Leela Narayanaswamy©

No comments:

Post a Comment