Thursday, September 9, 2010

39.ஓங்காரி



ஓங்காரி ஒய்யாரி உலகாளும் மீனாட்சி
மாங்காட்டு காமாட்சி வேற்காடு கருமாரி
திருமயிலை கற்பகமே திருச்சி சமயபுரத்தாளே
திருவாரூர் ரௌத்ரி நீ தீவினைகள் போக்கிடுவாய்

புன்னைநல்லூர் மாரியம்மா பொள்ளாச்சி மாசாணி
புன்னய்க்கல் ஸ்ரீதுர்க்கே சென்னம்மா காளிதேவி
கோவை கோனியம்மாகோவில்பட்டி செண்பகமே
நாகை நீலாயதாக்ஷி நாடி வந்தோம் காத்திடுவாய்










All rights reserved for the poem. Leela Narayanaswamy©

Wednesday, September 8, 2010

38.நான்முகன் நாயகி


நான்முகன் நாயகி நாதரூபிணி
அன்னவாகினி அடிமலர் பணிந்தோம்

வெள்ளைத்தாமரையில் அமர்ந்தவளே
வெள்ளைப்பட்டாடைஉடுத்தவளே
ஏந்தும வீணையில் எழிலாய் இசையை
ஏழு ஸ்வரங்களில் கொணர்ந்தவளே
ஸ.. ரி... க.., ம... ப... த... நி... (நான்)

நாவின் அசைவில் குடிகொண்டவளே
நான்மறை போற்றும் கலைமகளே
சொல்லின் தலைவியே கல்வியின் கருவே
வளரும் செல்வமாய் வற்றாத கேணியாய்
மிளிரும் அறிவொளி தருவாய் தாயே (நான்)

All rights reserved for the poem. Leela Narayanaswamy©

Tuesday, September 7, 2010

14.climax scene song-ம்.ம்.ம்...................உயிரோட்டமானவள்

climax scene song (sad part)
ம்.ம்.ம்...................உயிரோட்டமானவள்
நிழலெனத் தொடர்ந்தவள் தனிவழி போய்விட்டாள்
சுவாசமே.....பிரிய மனமில்லையே...
எழுதிய.... கவிதையில் எழுத்துப்பிழை என்னவோ?

in English letters
hm hm hm ...........uyirottamaanavaL
nizhalenath thodarnthavaL thanivazhi poyvittaaL
swasane.... piriya manamillaiye....
ezhuthiya... kavithaiyil ezhuththuppizhai ennavo?

in Malayaalam libi
ഹം.ഹം. ഹം..........ഉയിരോട്ടമാനവള്‍
നിഴലെന തൊടര്‍ന്തവള്‍ തനിവഴി പോയ്‌വിട്ടാള്‍
ശ്വാസമേ പിരിയ മനമില്ലൈയേ
എഴുതിയ...... കവിതൈയില്‍ എഴുത്തുപ്പിഴൈ എന്നവോ?

climax scene song (happy part)
இங்கிதா எனை விட்டெங்கோ மறைந்தவள் எதிரிலே
புன்னகை முகம் மலர எனை அழைக்கிறாள் மௌனமாய்
என்னிதயம் என்னில் வந்து சேர்ந்ததே
இன்பராகம் பாடித் தாலாட்டுதே
கண் பேசிடும் மொழி மௌனமே
எந்நாளும் வாழ்வில் வீசும் இனி தென்றலே
காதல் வெற்றி கண்ட சந்தோஷமே
ஆனந்தமே ம்.. ம்..ம்... ஆனந்தமே

in English letters
ingithaa enaivitengo marainthavaL ethirile
punnakai mukam malara enai azhaikkiRaL mounamaay
ennithayam ennil vanthu chernthathe
inparaagam paadith thaalaattuthe
kaNN pesidum mozhi mouname
ennaaLum vaazhvil veesum ini thendrale
kaathal vetri kanda santhoshame
aanathame....hm .. hmm.. hmm. aananthame

in Malayaalam libi
ഇങ്കിതാ എനൈ വിട്ടെങ്കോ മരൈന്തവള്‍ എതിരിലേ
പുന്നകൈ മുഖം മലര എനൈ അഴൈക്കിരാള്‍ മൌനമായ്‌
എന്നിതയം എന്നില്‍ വന്ത് ചേര്‍ന്തതേ
ഇന്‍പ രാഗം പാടിത്താലാട്ടുതേ
കണ്‍ പേശിടും മൊഴി മൌനമേ
എന്നാളും വാഴ്വില്‍ വീശും ഇനി തെട്രലേ
കാതല്‍ വെറ്റി കണ്ട സന്തോഷമേ
ആനന്തമേ ഹം...ഹം..ഹം.....ആനന്തമേ

Uyirotamaanaval - Original Composition by Krishna Raaj | Upload Music
All rights reserved for the poem. Leela Narayanaswamy©

13.அசையுமுன்

அசையுமுன் விழிகளின் ஓசையின் ராகங்கள்
அன்றுனைக் கண்ட நாள் கேட்டதென் காதிலே
என்னிடம் எதோ ஒன்றை இழந்து நின்றேன்
விண் தாண்டி வந்தவளுன்னைத் தேடி வந்தேனே

in English letters
asaium un vizhikaLin osaiyin raagankaL
andrunaik kanda naaL kettathen kaathile
ennidam etho ondrai izhanthu nnindrene
viNN thaandi vanthavaLunnaith thedi vanthene

in malayaalam letters
ആശൈയുമുന്‍ വിഴികളിന്‍ ഓശൈയിന്‍ രാഗങ്കല്‍
അന്ട്രുനൈക് കണ്ടനാള്‍ കേട്ടതെന്‍ കാതിലെ
എന്നിടം ഏതോ ഒന്ട്രൈ ഇഴന്തു നിന്ട്രേന്‍
വിണ്‍ താണ്ടി വന്തവളുന്നൈത്തേടി വന്തേനേ


Asayum un - Original Composition by Krishna Raaj | Upload Music
All rights reserved for the poem. Leela Narayanaswamy©

Friday, July 23, 2010

37.பால் காவடி

பால்காவடி பூக்காவடி பழக்காவடி எடுத்தே
பாலனே பதம் பணிந்தோம் பழனிமலை ஆண்டவனே

மாங்கனிக்காக சினங்கொண்டகன்றே
மலை ஏறி ஆண்டியாக நின்ற குமரனே
பழம் நீயப்பா ஞானப்பழம் நீயப்பா என்றே
அழைத்த தமிழ்ப்பாட்டிக்குகந்த குமரா வேலனே

பாலமுருகனே சரணம் பழனி முருகனே
வேலேந்தி வினை தீர்ப்பாய் வேங்கடன் மருகனே
ஆறுமுகனே ஐயா அழற்பிறந்தோனே
ஆறுபடை வீடு கொண்ட அழகுமுருக பாலனே

மலை ஏறி வந்து நின்றோம் மயில்வாகனனே
மாறாத பிலலிசூனியம் மலையேறி தொலைந்திடவே
கந்தசஷ்டி கவசம் கூறி கைகூப்பி நின்றோமே
கண்காணா தீவினைகள் காததூரம் அகன்றிடவே

All rights reserved for the poem. Leela Narayanaswamy©

Thursday, July 8, 2010

12.கருவறையில் இருளொளியில்

கருவறையில் இருளொளியில்
இருந்த காலம் நம் நினைவிலில்லை
காலால் தாய்வயிற்றில்
உதைத்ததும் நம் நினைவிலில்லை
உருவாகி வெளிஉலகம்
கண்ட நேரம் நினைவிலில்லை
முதன்முதல் யாரைக்கண்டோம்?
பெற்ற தாயையா ? மாற்றாந்தாயையா
அழுததும் நம் நினைவிலில்லை தாயின்
அணைப்பில்உறங்கியதும் நினைவிலில்லை
பாலூட்டி நம்மைத் தாலாட்டிய
காலம் ஒன்றும் நம் நினைவிலில்லை
மூவிரண்டு வயதுவரை வாழ்ந்த
வாழ்க்கை நம் நினைவிலில்லை
கற்பனையில் இப்பொற்காலம்
கோபுரமாய் உயருதம்மா!
வாலிபப்பருவமும் இனிய
தோழமைக்குழாமும்
பொலிமைமாறாத பொன்னோவியமாய்
இன்றும் நம் நினைவிலுண்டு
வளர்ந்தபோது வாழ்க்கையின்
திசை அங்கு மாறியதும்
காதலில் கனிந்து துணையுடன்
அலிந்து சேர்ந்த காலமதும்
கல்வெட்டு போன்று மறையாது
நம் மனதில் நினைவிலுண்டு
நேசித்த உறவுகள் ஒவ்வொன்றாய்
அங்கு மறையும் நேரம்
பாசவலை அறுந்ததுவோ? மனம்
பதப்பட்டு இறுகிய்தோ
பார்வைக்கு இவ்விரண்டும்
ஒன்றுபோல கான்பதேனோ ?
கனிவும் தெளிவும் வாழ்க்கை
கற்றுத்தரும் பாடமாகும்
கல்லறையில் கிடக்கும்வரை
நம் மனதில் நிற்க வேண்டும்
All rights reserved for the poem. Leela Narayanaswamy©

Sunday, July 4, 2010

11. காற்றிக்கு என்றொரு வாசல் இல்லை

காற்றிக்கு என்றொரு வாசல் இல்லை
மண்ணிற்கு என்றொரு மணமில்லை
காலம் யாருக்கும் காத்திருப்பதில்லை
கடல்நீரால் தாகம் தணிவதில்லை

நீரை அடித்தால் வேறாவதில்லை
குற்றம் காண்போருக்கு சுற்றமில்லை
காண்பதை எல்லாம் நம்புதற்கில்லை
வேகமும் விவேகமும் நண்பர்களில்லை

ஆணவம் ஆயுதமாவதில்லை
நாவினால் சுட்ட புண் ஆறுவதில்லை
வினை விதைத்தவன் தினை அறுப்பதில்லை
நஞ்சின் சுவை கண்டு வாழ்ந்தவரில்லை

தாயுள்ளம் ஒருபோதும் சபிப்பதில்லை
தாய்மைக்கு சேய் ஒரு பாரமில்லை
பிஞ்சு நெஞ்சில் என்றும் வஞ்சம் இல்லை
வஞ்சித்தவர் மகிழ்வு நீடிப்பதில்லை

ஆழ்மனம் என்றும் உறங்குவதில்லை
ஆழ்கடலின் ஆழம் கண்டவரில்லை
ஆறாத சினத்தால் ஆரோக்கியமில்லை
அன்பினால் ஆகாதது ஒன்றுமில்லை

ஆகாசம் பூமியைத் தொட்டதில்லை
ஆராய்ந்து பார்த்தால் மெய் தப்புவதில்லை
தன்னை அறிந்தால் மனதில் அகந்தை இல்லை-கண்ணனை
தினம் நினைந்தால் குழலோசை கேட்காமலில்லை
All rights reserved for the poem. Leela Narayanaswamy©

Wednesday, June 30, 2010

10.தென்னமர தோப்புலதான் அய்யா

தென்னமர தோப்புலதான் அய்யா
ஒன்ன நான் பாத்துருந்தேன்

பாதயோரம் நடக்கறச்சே நீ
காதோரம் கிசுகிசுத்தே

பக்கமா நீ நடந்தே நான்
வெக்கத்துல ஒதுங்கிகிட்டேன்

ஒன்ன கண்ட நா மொதலா நான்
துன்னுஞ்சோறு ருசிக்கலையே

கண்ணாடி பாத்தாலும் நான்
காணலையே என் மொகம்தான்

கண்ணுத்து பாத்தாலே நான்
கண்டேனே ஒன்மொகம் தான்

ராவுபகல் தெரியலையே என்
ரெண்டுகாலும் தளந்து போச்சே

நெருப்பா கொதிக்குறதே என்
ரெண்டுகண்ணும் சொருகிடுச்சே

மொத்தமா தாங்கலையே நான்
சத்தம் போட்டா தப்பில்லையே

இதென்ன நோவு அய்யோ அம்மா
என்ன ரொம்ப வாட்டுதய்யோ

ஊர்கண்ணு படடுடுச்சோ என்னை
பேக்காத்து அடிச்சுடுச்சோ

மனசுதான் துடிக்குதய்யா இங்க
மருந்தா நீதான் வாருமய்யா

All rights reserved for the poem. Leela Narayanaswamy©

9.நட்பு



நட்பு என்பது ஓர் மலராகும்
சிரிப்பு அதன் பல இதழ்களாகும்

நட்பு என்பது மரமாகும்
தளரும் மனதிற்கு தணல் ஏகும்

நட்பு என்பது உப்பாகும்
உணர்வாம் உணவின் ஆதாரமாகும்

நட்பு என்பது தண்ணீராகும்
வறளும் மனதின் தாகம் தீர்க்கும்

நட்பு என்பது அருமருந்தாகும்
புண்பட்ட மனதினை ஆற்றுவிக்கும்

நட்பு என்பது ஜன்னலாகும்
தேங்கும் மனதிற்கு காற்று நல்கும்

நட்பு என்பது ஊன்றுகோலாகும்
தடுமாறும் மனதினை நடக்க வைக்கும்

நட்பு என்பது விளக்காகும்
இருளும் மனதில் ஒளி வீசும்

நட்பு என்பது சங்கீதமாகும்
மனதாம் வீணையின் கம்பி மீட்டும்

நட்பு என்பது தாய்மடி ஆகும்
அயரும் மனதினை தாலாட்டும்

நட்பு என்பது தந்தையுமாகும்
அவசரகாலத்து அறிவுரை நல்கும்

நட்பு என்பது எல்லாமாகும்
மனதின் இளமைக்கு அமுதமாகும்
All rights reserved for the poem. Leela Narayanaswamy©

36.പാഹി കൃഷ്ണ ജയ



പാഹി കൃഷ്ണ ജയ ബാലഗോപാല ജയ
ശരണം ശര്വേശ ചക്രധാരി ജയ
സരസിജനാഭ മുനിജനപ്രിയ ജയ
ശങ്കരിസോദര കൃഷ്ണ ഹരേ ജയ

തുളസിദളപ്രിയ മുകുന്ദ ഹരേ ജയ
തുളസിദാസപ്രിയ നന്ദകുമാര ജയ
അനന്തശയന ആനന്ദരൂപ ജയ
ശ്യാമസുന്ദര കൃഷ്ണ ഹരേ ജയ

രുഗ്മിണിവല്ലഭ ദ്വാരകാപതെ ജയ
ഗോപകുമാര കുചേലമിത്ര ജയ
ദേവകിനന്ദന യശോദബാല ജയ
പിഞ്ചധാരി ജയ കൃഷ്ണ ഹരേ ജയ

വനമാലിധര വാമനരൂപ ജയ
പീതാംബര ജയ പ്രരണവസ്വരൂപ ജയ
സാഷ്ടാംഗപ്രണാമം സജ്ജനമിത്ര ജയ
ദശരൂപ ജയ കൃഷ്ണ ഹരേ ജയ

മങ്ങളരൂപ മാധവ ജയ ജയ
മധുസൂദന ജയ മദനഗോപാല ജയ
ബലരാമസോദര ഗിരിധര ജയ ജയ
പാര്തസാരതെ കൃഷ്ണ ഹരേ ജയ

രാധമനോഹര മുരളിധര ജയ
ഗീദാനായക വേദസ്വരൂപ ജയ
ഉടുപികൃഷ്ണ ജയ സൌന്ദര്യരൂപ ജയ
ഗുരുവായുര്‍പുരേശ കൃഷ്ണ ഹരേ ജയ

സര്വമംഗളം ദേഹി കൃഷ്ണ ജയ
അമ്പലപുഴവാസ കേശവ ജയ ജയ
ദാമോധര ജയ ശ്രീധര ജയ ജയ
ദേഹി ദര്‍ശനം കൃഷ്ണ ഹരേ ജയ

All rights reserved for the poem. Leela Narayanaswamy©

Sunday, June 27, 2010

35.அகாரரூபிணி

அகாரரூபிணி ஆடிவாராய் அம்மா
அகிலம் காக்க இங்கு ஓடிவாராய்

ஆடும் நடேசனுடன் இணைந்து வாராய் -நீ
ஆனைமுகன் தாளமிட பாடி வாராய்

இகபர சுகம் நல்கும் இன்பமே நீ
இடக்கையில் சூலமேந்தி ஆடி வாராய்

ஈசனுடன் இடம் இணைந்த ஈஸ்வரியே -நீ
பாசமிகு வேலனுடன் பக்கல் வாராய்

உலகாளும் உமையவளே சுந்தரியே அம்மா
உலகளந்தோன் சோதரியே ஆடி வாராய்

ஊக்கமுடன் வாத்தியங்கள் முழங்கிடவே -நீ
ஊர்மக்கள் புடைசூழ தேரில் வாராய்

எங்கும் நிறை மறைரூபிணியே -நீ
பாங்காய் பதம் எடுத்து ஆடி வாராய்

ஏகாம்பரன்தேவி ஏந்திழையே என்னில்
மோகங்கள் களைந்திட தேடி வாராய்

ஐங்கரன் அன்னையே ஆதிசக்தி நீ
பூங்கரத்தில் கரும்பேந்தி ஆடி வாராய்

ஓட்டும் பாசவலை அறுத்து என்னை உன்
பட்டுக்கரம் தொட்டு காக்க வாராய்

ஓங்கார ரூபிணி ரீங்காரியே எங்கள்
அகங்காரம் களைந்திட ஆடி வாராய்

ஔவை தமிழ்ப்பாட்டில் மகிழ் அன்னையே தேவி
கௌரி கௌமாரி பாடி வாராய்

அம்மெனும் எழுத்தின் ஆதாரமே அம்மா
இம்மையின் வெம்மையை நீக்க வாராய்

ஆயுத எழுத்தில் மிளிர் அந்தரியே அம்மா
சேய் எனைகாத்திடவே தேடி வாராய்

காதணியை முழுமதி ஆக்கிய அபிராமியே அம்மா
மீதமற முன்வினைகள் தீர்க்க வாராய்

மதுரை வாழ் மாதரசே மீனாட்சியே நீ
மதுரமூறும் தமிழ்கீதம் கேட்க வாராய்

நாதலய நட னமதில் லயிப்பவளே அம்மா
பாதசரம் இசை எழுப்ப அசைந்து வாராய் (அகாரரூபிணி )
All rights reserved for the poem. Leela Narayanaswamy©

Saturday, June 26, 2010

34.ജഗത്‌ രക്ഷകാ കൃഷ്ണാ


ஜகத்ரக்ஷகா ...... ஜகன்மோகனா .....
ப்ரணாமம் சர்வேசா க்ருஷ்ணா....

ஜகத்ரக்ஷகா க்ருஷ்ணா ஜகன்மோகனா மய்யா
பக்தவத்சலா ச்யாமா ப்ரபோஹரே 
பாலகோபாலா க்ருஷ்ணா 
ஜய ஜய கிருஷ்ணா ஹரஹர க்ருஷ்ணா 
பாஞ்சாலி சோதர பவபய நாசக 

மேகஸ்யாம வர்ணா கிருஷ்ணா மதுமுரளி கானலோல
கிரிதர கோவிந்தா ப்ரபோஹரே
மதுராபதே க்ருஷ்ணா
ஜய ஜய கிருஷ்ணா ஹரஹர க்ருஷ்ணா 
கடகோல்தரணா கோகுலபாலா 

ப்ருந்தாவனவாசா க்ருஷ்ணா நந்தகுமாரா முகுந்தா 
நவநீதப்ரிய நந்தனா ப்ரபோஹரே 
நரஹரி தேவா க்ருஷ்ணா 
ஜய ஜய கிருஷ்ணா ஹரஹர க்ருஷ்ணா 
கம்சமர்தனா காளீய நர்த்தனா 

குருவாயூர் புரேச க்ருஷ்ணா குரூரம்ம பாலகோபால 
குவலயதள நேத்ரா ப்ரபோஹரே 
குசேலமித்ரா க்ருஷ்ணா 
ஜய ஜய கிருஷ்ணா ஹரஹர க்ருஷ்ணா 
பூந்தான மித்ரா புரந்தர பூஜிதா 

ஸ்ரீரங்கபுரேசா க்ருஷ்ணா ஸ்ரீனிவாசா கோதைநாதா 
ஸ்ரீவைகுண்ட  விஷ்ணோ ப்ரபோஹரே 
ஸ்ரீவத்சா க்ருஷ்ணா 
ஜய ஜய கிருஷ்ணா ஹரஹர க்ருஷ்ணா
பார்த்தசாரதே பாண்டவமித்ரா 

அம்பலப்புழ வாசா க்ருஷ்ணா ஆஸ்ருதவத்சலா முராரே 
ராதாஹ்ருதய சோரா ப்ரபோஹரே 
மாதவா ப்ரணாமம் க்ருஷ்ணா 
ஜய ஜய கிருஷ்ணா ஹரஹர க்ருஷ்ணா
சங்கடநாசக சந்தான கோபாலா         (ஜகத்)



ജഗത്‌ രക്ഷകാ... ജഗന്‍മോഹനാ...
പ്രണാമം സര്‍വ്വേശാ കൃഷ്ണാ...

ജഗത്‌ രക്ഷകാ കൃഷ്ണാ
ജഗന്‍മോഹനാ മയ്യാ
ഭക്ത വല്‍സലാ ശ്യാമാ... പ്രഭോ ഹരേ!
ബാലഗോപാലാ കൃഷ്ണാ

ജയ ജയ കൃഷ്ണാ ഹരഹര കൃഷ്ണാ
പാഞ്ചാലി സോദരാ ഭവ ഭായ നാശകാ

മേഘശ്യാമ വര്‍ണ്ണാ കൃഷ്ണാ
മധുമുരളി ഗാന ലോലാ
ഗിരിധര ഗോവിന്ദാ... പ്രഭോ ഹരേ!
മധുരാപതേ കൃഷ്ണാ

ജയ ജയ കൃഷ്ണാ ഹരഹര കൃഷ്ണാ
കടകോല്‍ ധരണാ ഗോകുല ബാലാ

വൃന്ദാവന വാസാ കൃഷ്ണാ
നന്ദകുമാരാ മുകുന്ദാ
നവനീതപ്രിയ നന്ദനാ... പ്രഭോ ഹരേ!
നരഹരി ദേവാ കൃഷ്ണാ

ജയ ജയ കൃഷ്ണാ ഹരഹര കൃഷ്ണാ
കംസ മര്‍ദ്ദനാ കാളീയ നര്‍ത്തനാ

ഗുരുവായൂര്‍ പുരേശാ കൃഷ്ണാ
കുരൂരമമ ബാലഗോപാലാ
കുവലയദള നേത്രാ... പ്രഭോ ഹരേ!
കുചേല മിത്രാ കൃഷ്ണാ

ജയ ജയ കൃഷ്ണാ ഹരഹര കൃഷ്ണാ
പൂന്ദാന മിത്രാ പുരന്ദര പൂജിതാ

ശ്രീരംഗപുരേശാ കൃഷ്ണാ
ശ്രീനിവാസാ കോതൈ നാഥാ
ശ്രീവൈകുണ്ട വിഷ്ണോ... പ്രഭോ ഹരേ!
ശ്രീവത്സാ കൃഷ്ണാ

ജയ ജയ കൃഷ്ണാ ഹരഹര കൃഷ്ണാ
പാര്‍ത്ഥസരാതെ പാണ്ഡവ മിത്രാ

അമ്പലപ്പുഴ വാസാ കൃഷ്ണാ
ആസൃത വത്സലാ മുരാരേ
രാധാ ഹൃദയ ചോരാ... പ്രഭോ ഹരേ!
മാധവാ പ്രണാമം കൃഷ്ണാ

ജയ ജയ കൃഷ്ണാ ഹരഹര കൃഷ്ണാ
സങ്കട നാശകാ സന്താനഗോപാലാ
All rights reserved for the poem. Leela Narayanaswamy©

33.கண்கட்டுவித்தை

கண்கட்டு வித்தை ஏனடா என் கண்ணா
உ ன் கமலக்கண் திறவாய் கண்ணா .....
குறைகள் ஏராளம் எனக்கிங்கு அனைத்தும் அங்கு
மறை போற்றும் கண்ணா மனநிறைவோடே களைந்திடுவாய்
கள்ளநோட்டம் வேண்டா கண்ணா
என் உள்ள்ம் நிறை கார்வண்ணா குருவாயூர் மணிவண்ணா
பீலி சூடி வா முன்னால் துளசிமாலையோடே கண்ணா
மரகதமே........ மாதவமே ............
ஆலிலையில் பள்ளிகொண்ட கண்ணா -அலை
கடலில் துயில் அனந்த சயனா -மண்ணை
உண்ட பவளவாய் கண்ணா -கட்
டுண்டு உரலோடிழை பாலா
குழலூதி என்னில் களியாடும் கண்ணா
கோகுலப்பெண்டிர் போற்றும் கோபகுமாரா நந்தனா
யாதவதிலகா கண்ணா ......(கண்கட்டு )
All rights reserved for the poem. Leela Narayanaswamy©

32.ககார ரூபிணி

ககார ரூபிணி கற்பகவல்லி நீ
கதம்பவனம் வாழ் கல்யாணி அருள்புரி
கைகால்ய தாயினி கைலாசவாசினி
வையகம் போற்றும் மங்கள ரூபிணி
மங்கொம்பில் அருளிடும் வனதுர்க்கே பகவதி
செங்கமலக்கண்ணி சிவனேஸ்வரி கெளரி (ககார)

ஒங்காரரூபிணி ஐங்கரன் அன்னை நீ
வேங்கடன் சோதரி வேப்பிலைக்காரி நீ
ஓங்காரரூபிணி ஐங்கரன அன்னை நீ
வேங்கடன் சோதரி வேப்பிலைக்காரி என்
அகங்காரம் களைந்திட அருளொளி தந்திட
திகம்பரன் நாயகி திறந்திடு கண்ணை நீ (ககார)

All rights reserved for the poem. Leela Narayanaswamy©

31.பாராமுகம் ஏனம்மா


பாராமுகம் ஏனம்மா அம்மா - உன்
பதம் தேடி வந்தோம் அம்மா
எங்களிடம் உள்ள குறை ஏராளம் தான் அம்மா
பொங்கிவரும் உன் கருணை தாயன்பின்
வடிவம் அம்மா
நெஞ்சே நீ மறவாதே..................
தஞ்சமென அன்னைதனை கொண்டிடுவாய்
நிறைவோடே
முக்கண்ணன் நாயகியாம் மஹாமாயையே
மனமுருகி ..............அழைப்பாயே ..
ஆதி அந்தமும் நீயே அனைத்து உயிர்களும் நீயே
மகிஷமர்தினி நீயே அந்த மாயன் சோதரி நீயே
மலைமகளும் நீயே மறைபோற்றும் மாதே
மாதவப்பயனும் நீயே மங்களம் அருளவாய் நீயே
மங்கொம்பு வாணிடும் தாயே ........(பாராமுகம்)

அசுரகுலம் அழிந்திடவே எழுந்ததுன் திரிசூலம்
ஒன்பது ராத்திரியும் ஒளிர்ந்ததுன் அவதாரம்
வட்டகவாளுடுடையவளே ......
வனதுர்க்கே வரமருள்வாய் மக்கள்க்கிங்கே ...
குணவதியே குலம்காக்கும் கற்பகமே ..
கணநாதன் ............. அன்னையே ..
திரிபுரசுந்தரி நீயே திருமூர்த்தி ஜனனியும் நீயே
அரனின் நாயகி நீயே இந்த அகிலமசைவதுன்னாலே
ஒளிர் சூர்யன் நீயே குளிர் நிலவும் நீயே
அகம்குளிர் இசையும் நீயே கண்குளிர் பரதம் நீயே
அருளிட வருவாய் தாயே ............(பாராமுகம்)
All rights reserved for the poem. Leela Narayanaswamy©

Tuesday, April 13, 2010

30.ലാവണ്യരൂപാ രാഘവാ

ലാവണ്യരൂപാ രാഘവാ
ലക്ഷ്മണ സോദരാ ശ്രീരാഘവാ
ശ്രീഭരത സേവിത ശ്രീരാഘവാ
ശ്രീപതേ പാഹിമാം ശ്രീരാഘവാ

ശത്രുഗ്ന സോദര രാഘവാ
സത്പുത്ര രാമാ ശ്രീരാഘവാ
ദശരഥനന്ദന രാഘവാ
ത്യാഗരാജ സേവിത ശ്രീരാഘവാ

കോശല തനയ രാഘവാ
കോദണ്ഡപാണീ ശ്രീരാഘവാ
അയോദ്ധിപതെ രാമാ രാഘവാ
അഗലിക മോക്ഷക ശ്രീരാഘവാ

താരകമന്ത്രരൂപാ രാഘവ
താടക മോക്ഷക ശ്രീരാഘവാ
ജഗത് രക്ഷകാ രാമാ രാഘവാ
ജനകസുധാ രമണാ രാഘവാ

കാരുണ്യരൂപാ രാഘവാ
കമലദളനയനാ രാഘവാ
ഗുഹസ്നേഹ രാമാ ശ്രീരാഘവാ
മേഘശ്യാമവര്‍ണ്ണാ ശ്രീരാഘവാ

ജടായു മോക്ഷക രാഘവാ
ജയ ശബരി സ്തുതിപാത്ര രാഘവാ
ജടാമകുടദാരീ രാഘവാ
ജയ തുളസിദാസ പൂജിത രാഘവാ

സുഗ്രീവ മിത്രാ രാഘവാ
സുരഗണസേവിത ശ്രീരാഘവാ
രഘുകുല തിലകാ രാഘവാ
രാവണ മര്‍ദ്ധന ശ്രീരാഘവാ

മാരുതി ഹൃദയവാസ രാഘവാ
മൈഥിലി ഹൃദയചോരാ രാഘവാ
വിഭീഷണ ശരണാ രാഘവാ
അഭീഷ്ട വരദ രാമാ രാഘവാ

All rights reserved for the poem. Leela Narayanaswamy©

29. ശരണം ശരണം കൃഷ്ണ ശരണാഗത വത്സലാ

சரணம் சரணம் கிருஷ்ணா சரணாகத வத்சலா 
ஸ்ரீதரா கேசவா கோபிகா வந்தித 
ராதாமாதவ  ராசலீலப்ப்ரிய (சரணம்)

தேவகி நந்தன யதுகுல திலகா
யசோதப்ரிய குமாரா கோகுல பாலக 
பிருந்தாவன வாசா கீதகோவிந்தப்ரிய (சரணம்)

பூதகி மர்த்தன பாபவிமோசகா
சாதுஜனப்ரிய கீதா நாயக 
நந்தகுமாரா நவநீதப்ரிய  (சரணம்)

ശരണം ശരണം കൃഷ്ണാ
ശരണാഗത വത്സലാ
ശ്രീധരാ കേശവാ ഗോപികാവന്ദിത
രാധാമാധവ രാസലീല പ്രിയ

ദേവകി നന്ദനാ യദുകുല തിലകാ
യശോദപ്രിയ കുമാരാ ഗോകുല പാലകാ
വൃന്ദാവനവാസാ ഗീതഗോവിന്ദപ്രിയ

പൂതകി മാര്‍ദ്ധനാ പാപവിമോച്ചകാ
സാധുജനപ്രിയ ഗീതാ നായകാ
നന്ദകുമാരാ നവനീതപ്രിയ

All rights reserved for the poem. Leela Narayanaswamy©

28.നാരായണീയ ഭല സ്തുതി

ഭട്ടതിരിപ്പാടിന്‍റെ ശതദശക പുഷപങ്ങള്‍
ഫലപ്പ്രദ മോക്ഷകങ്ങള്‍ പാപനാശകാരകങ്ങള്‍
പാരായണം മോക്ഷ ലഭ്യം ശ്രവണം സര്‍വ്വ ശാന്തി ലഭ്യം
ശതദശ സ്മരണ എന്നും തൃപ്പാദപൂജാ തുല്യം

പാദാദി കേശ ശ്ലോകം ഭവഭയ നാശകം
പാര്‍വ്വതി സോദരന്‍റെ പ്രിയങ്കര ഭൂഷണം
അവതാര ശ്ലോകങ്ങള്‍ അപൂര്‍വ്വ വിഭവങ്ങള്‍
അഷ്ടമാസിദ്ധി നല്‍കും അഭീഷ്ട സദ്യകള്‍

All rights reserved for the poem. Leela Narayanaswamy©

27.அஞ்சன வண்ணா நீ

அஞ்சன வண்ணா நீ
ஓடி வருகையிலுன்
அடிமுடி உலையுதடா
என் நெஞ்சம் பதறுதடா

பட்டாடை கலைந்திடுமோ
பாதசரம் குத்திடுமோ
பிஞ்சுக்கால் அல்லவோடா
மெதுவே வாடா கண்ணா

கழுத்தில் மாலை ஆடுதடா
சின்னக்கண்ணா உந்தன்
கண்ணருகே வியர்த்தொழுகி
கண்மையும் கரையுதடா
மயிலிறகு பறக்குதடா
மணிவண்ணா மெதுவே வாடா
குயிலோசையை வெல்லும் உந்தன்
குழலினை எனக்குத்தாடா

வெண்ணை திருடும் கள்ளக்கண்ணா
உண்மை நானும் சொல்லவோ நீ
திருடுவது வெண்ணை அல்ல
வெள்ளை உள்ளம அல்லவோடா
மண்ணை உண்ட கண்ணா உன்னை
மடியில் இருத்தி கொஞ்ச வேணும
வேண்டுதலை ஏற்றங்கிந்த
அன்னையை நீ ஆட்கொள்ளடா

All rights reserved for the poem. Leela Narayanaswamy©

26.மயிலிலை சூடிநின்ற

மயிலிலைசூடி நின்ற மாதவா மணிவண்ணா
கையிலை கூப்பி நின்றேன் கமலதள நயனா
ஆலிலை பள்ளி கொண்ட அஞ்சனவண்ணா உன்
கோயிலை நாடி வந்தேன் கோபிஜன ரமணா

கையில் குழலேந்தி கருணை விழிஏந்தி
காதலுடன் இலையரசி துளசிமாலை தோளேந்தி
பைய நடந்தெந்தன் பக்கலில் வந்தணைவாயோ
மெய்யான சுகம் ஒன்றென் மெய்யுணர வைப்பாயோ

அவலுண்டு பிணி தீர்த்தாய்
ஆடை தந்து பெண்மானம் காத்தாய்
மலைக்குடையில் மக்களை
மாமழையின்றி காத்து நின்றாய்
மலை சோதரா நீ எதைத்தந்தென் குறை தீர்ப்பாய்
அலைமகள் நாயகா உன் அருள் தந்தெனை காப்பாய்

All rights reserved for the poem. Leela Narayanaswamy©

25.கண்ணன் சகோதரி



கண்ணன் சகோதரி கைலாயன் காதலி
காருண்யரூபிணி காதம்பரி கௌரி
மங்கொம்பில் அருளிடும் மாதா பூரணீஸ்வரி
மங்களரூபிணி மரகதவல்லி நீ

சித்திரை மாதத்தில் சிறப்புடன் திருவிழா
சிதம்பரன் நாயகிக்குவந்திடும் பெருவிழா
நல்லவர் நலம் பெற அல்லவர் அழிவுற
அன்னையின் அருள் பெற ஆற்றிடும் அரும்விழா

ஈரைந்து தினங்களும் பாட்டும் பரதமும்
இனிய நாதத்தில் நிறைந்திடும் நெஞ்சமும்
வட்டக வாலேந்தும் வனதுர்க்கே பகவதி
வையகம் வாழ்ந்திட வரமருள் வைஷ்ணவி

All rights reserved for the poem. Leela Narayanaswamy©

24.கடலலை வந்து

கடலலை வந்து மோதும்போது பல
கரைகள் தனை இழந்து கரையலாம்
காற்றலை வந்து மோதும்போது பல
மரங்கள் வேரிழந்து வீழலாம்
உன் அருளலை வந்து மோதினால் என்னில்
இருளலை நீங்கி மிளிருவேன்
என் கவியலை மோதி மகிழ்ந்துந்தன்
கயல் விழியிலை நன்கு மலருமே

கடலலை உனது இருக்கையோ அந்த
ஆலிலைதான் படுக்கையோ
எந்நிலையிலும் நிலைகுலைவில்லா திட
மனநிலை மக்கட்க்குணர்த்தவோ
உரலினை உருட்டிகொண்டன்று நடை
பழகிய பால கோபனே
நரகனை அழித்தந்நாளினை தீப
ஒளி எனத் திகழச்செய்தோனே


All rights reserved for the poem. Leela Narayanaswamy©

Thursday, March 4, 2010

23.വെങ്കടരമണ ഗോവിന്ദാ

വെങ്കടരമണാ ഗോവിന്ദാ ഹരേ സങ്കട ഹരണാ ഗോവിന്ദാ
പാണ്ഡവ രക്ഷകാ ഗോവിന്ദാ ഹരേ ശ്രീനിവാസാ ഗോവിന്ദാ
സര്‍വ്വവ്യാപീശാ ഗോവിന്ദാ ഹരേ സാധുജനപ്രിയ ഗോവിന്ദാ
സര്‍വ്വലോകേശാ ഗോവിന്ദാ ഹരേ ശ്രീനിവാസാ ഗോവിന്ദാ
യദുകുല തിലകാ ഗോവിന്ദാ ഹരേ യശോദതനയാ ഗോവിന്ദാ
ഗോപീജനപ്രിയ ഗോവിന്ദാ ഹരേ ശ്രീനിവാസാ ഗോവിന്ദാ
കാരുണ്യ രൂപാ ഗോവിന്ദാ ഹരേ കംസമര്‍ദ്ധനാ ഗോവിന്ദാ
കടകോല്‍ധരണാ ഗോവിന്ദാ ഹരേ ശ്രീനിവാസാ ഗോവിന്ദാ
പൂന്താനമിത്രാ ഗോവിന്ദാ ഹരേ പൂതനമര്‍ദ്ധനാ ഗോവിന്ദാ
നന്ദകുമാരാ ഗോവിന്ദാ ഹരേ ശ്രീനിവാസാ ഗോവിന്ദാ

All rights reserved for the poem. Leela Narayanaswamy©

22.ശങ്കരപ്രിയങ്കരി പ്രണാമം

ശങ്കരപ്രിയങ്കരി... പ്രണാമം
ശങ്കരപ്രിയങ്കരി സങ്കട മോച്ചനി
ഭക്തജനപ്രിയേ ഭവാനി പാര്‍വ്വതി

ഗജമുഖജനനീ കൈലാസവാസിനി
ഗിരിധരസോദരി ഗിരിരാജപ്രിയപുത്രി
ദിനകരകോടി പ്രകാശിനി ചിന്മയി
ശ്രീപീഠസ്ഥിതേ ശ്രീലിളിതാംബികേ

സുന്ദരി നന്ദിനി ദുര്‍ഗ്ഗേ ഭഗവതി
മന്ത്രസ്വരൂപിണീ മംഗളദായിനി
പഞ്ചദശാക്ഷരി പരബ്രഹ്മ രൂപിണി
പാഹിമാം വരദേ പങ്കജലോചനി

All rights reserved for the poem. Leela Narayanaswamy©

21.അമ്മേ ഭഗവതി

അമ്മേ ഭഗവതി ഹരിപ്രിയ സോദരി
അനുഗ്രഹം ദേഹി അന്നപൂര്‍ണേശ്വരി

മന്ത്രസ്വരൂപിണി മധുകൈടപ നാശിനി
ഇന്ദ്രാദി ദേവ പൂജിത രൂപിണി

ചഞ്ചല നാശിനി ശങ്കരപ്രിയകരി
സാധുജന രക്ഷിത ചാമുണ്ഡി ശാംഭവി
സര്‍വ്വ കുടുംബിനി മോക്ഷക കാരിണി
സത്യപ്രസാദിനി ഷണ്മുഖ ജനനി

All rights reserved for the poem. Leela Narayanaswamy©

20.ജയജഗദീശ്വരി

ജയജഗദീശ്വരി മാ അംബ ജയജഗദീശ്വരി മാ
ജയജഗത്‌ ജനനീ രാജ്ഞി ജയജഗത്‌ ജനനീ രാജ്ഞി
ജയജഗദീശ്വരി മാ ഓം ജയജഗദീശ്വരി മാ

കല്യാണി കാളി അംബ കദംബവനവാസിനീ
സുന്ദരമുഖ ഓങ്കാരീ ഭൈരവി കാന്തനൂരീശ്വരി മാ
ഓം ജയജഗദീശ്വരി മാ
മലയധ്വജന്‍ പുത്രി അംബ മാധവ സോദരി ഗൗരി
കാഞ്ചി കാമാക്ഷി മദുര മീനാക്ഷി കാശിവിശാലാക്ഷി
ഓം ജയജഗദീശ്വരി മാ
അപര്‍ണേ അന്നപൂര്‍ണേ അംബ ആഗമ വേദരൂപേ
നാഗാഭരണ മനോഹരി നന്ദിനി നാഗേശ്വരി അംബാ
ഓം ജയജഗദീശ്വരി മാ
പഞ്ച ദശാക്ഷരി ഭവാനി അംബ ഭക്തരക്ഷണ പരിപൂര്‍ണേ
പരിപൂര്‍ണാനുഗ്രഹം ദേഹി വരദേ ഭവഭയമോചനി അംബാ
ഓം ജയജഗദീശ്വരി മാ
ചണ്ടമുണ്ടാന്തികെ ശ്യാമേ അംബ ചതുര്‍മുഖ സംസ്ഥിതെ സൗമ്യേ
സഞ്ചിത പാപ വിനാശിനി ശാമ്ബവി കഞ്ചുകധാരിണി അംബാ
ഓം ജയജഗദീശ്വരി മാ

All rights reserved for the poem. Leela Narayanaswamy©

19.யமுனா நதிக்கரையில்

யமுனா நதிக்கரையில்
கண்ணனின் காலோசை அங்கு
ராதையின் சிரிப்பலையில்
கலந்ததே குழலோசை
மாதவா மதுசூதனா என்ற
ராதையின் குரலோசை
மதி மயங்கினேன் நீளாதோ
இக்கனவென பேராசை
கண்ணா .... கண்ணா... கண்ணா...

ஏழு வயதில் குறும்பும் குழலுமாய்
இடையபெண்டிரை மயக்கியே
ராசக்ரீடையை அருளியே
பக்திபரவசமாக்கியே
ஒருநிலைப்பட்ட பக்திநிலையினை
உலகிற்கங்கு உணர்த்தினாய்
கண்ணா... கண்ணா... கண்ணா...

கண்ணா உனது கீதை சொல்லும்
உலக நீதி வீதிகள்
வழி நடந்தால் காணுமே
உந்தன் காலடி சுவடுகள்
கண்ணா... கண்ணா... கண்ணா...

கண்ணா எனது கவிதையில் நான்
காண்பதுந்தன் மலர்முகம்
கனவில் உன்னைக் கொஞ்சினேன்
அதுந்தன் அருள் எனும் அதிசயம்
கண்ணா... கண்ணா... கண்ணா...

All rights reserved for the poem. Leela Narayanaswamy©