Sunday, August 26, 2012

52.மலர்தாமரைமுக நாயகா வரதா


மலர்தாமரை முக நாயகா வரதா
மாதவா யாதவதிலகா
அமுதம் ஏந்திய மோகினி ரூபா
அலைமகள் நாயகா தேவா

அன்பர்க்கடியனே அஞ்சனவண்ணா
ஆவினம் மேய்த்த இடையா
அருளுக மங்களம் எங்கும்
பெருகுக பேரின்பம் என்றும்

அச்சுதா கேசவா அனந்தசயனா
குழலூதும் கோபகுமாரா
வருவாய் கண்ணா தருவாய்
வாழ்வில் மங்கலம் என்றும்

கண்ணா நலம் சுபமே
கனிவாய் அருள்வாயே
கண்ணா அருள்வாயே
நலம் சுபம் ஜெயம் என்றுமே
All rights reserved for the poem. Leela Narayanaswamy©

All rights reserved for the poem. Leela Narayanaswamy©

23aമലയാള



 മലയാള ദേശത്ത് മാവേലി വരുന്ന കാലം
 നാടാകെ ആഘോഷം മത്സരം സമ്മാനം

 വീടിന്‍റെ മുറ്റത്ത് പൂക്കളം പുലരിയില്‍
 പാടിക്കളിക്കുന്നു ഊഞ്ഞാലിട്ടൊരുകൂട്ടം

 മാദേവന്‍ വാമനന്‍ എഴുന്തള്ളും നേരം
 തിരുവോണ സദ്യയുമായ്‌ സ്വാഗതം സ്വാഗതം

 തിരുവോണക്കോടിയുമായ്‌ കളിചിരിതൂകി ബാലര്‍
 തിരുനാളില്‍ മിത്രമുമായ്‌ ഓടിക്കളിയായ്

 ഈചിരി എന്നെന്നും മായാതെ കാക്കണേ
 ഈരടിയില്‍ മൂണ്ലോകം അളന്ന നാരായണ
   

23.ஆவணித் திருவோண நன்னாளில் அதிதிக்கு



  ஆவணித் திருவோண நன்னாளில் அதிதிக்கு
  அந்தணச் சிறுவனாய் அவதரித்தவாமனா

  பக்தனாம் மகாபலியை பக்குவப்படுத்திட
  யுக்தியாய் மூன்றடி மண் யாசித்த பாலா  (ஆவணி)

  ஈரடியில் மூவுலகும் அளந்தபின் மகாபலியின்
  திருமுடியில் மூன்றாமடி பதித்த பரந்தாமா
  பக்தனாம் மகாபலியை அன்போடாதரித்து
  பாதாள லோகமதை பரிந்துரைத்த தேவா (ஆவணி)

  அத்தம் முதல் பத்து நாளும் அனைத்து வீட்டு வாசலிலும்
  அழகழகாய் பூக்கோலம் திருநாள் கோலாகலம்
  இனிவரும் காலமும் இதேபோல் இன்பமுற
  இரங்கி அருள்வாய் நீ அலைமகள் தேவா (ஆவணி)


Sunday, August 5, 2012

51.அறுகம்புல் அணிந்தோனே




  அறுகம்புல் அணிந்தோனே ஆனைமுகனே சரணம்
  இமையவன் மகள் மகனே ஈசனின் திருமகனே (அறுகம்புல்)

  உந்திய வயிற்றோனே வந்தனம் சந்ததம்
  ஊதுகுழல் ஏந்தியோனின் மனமுகந்த மருமகனே
  எருக்கம்பூ சூடியோனே ஏகதந்தனே ஐயா
  ஐங்கரனே சரணம் ஐயங்கள் களைந்திடுவாய் (அறுகம்புல்)

  ஒளிரும் திருமேனியனே ஓங்காரரூபா சரணம்
  முப்பழப்பிரியோனே முருகனுக்கு மூத்தோனே
  அப்பமொடவல் பொரி மோதகம் ஏற்றிடுவாய்
  எதிருமிடர் களைந்திடுவாய்  ஏத்தமிட்டு தொழுதோமே (அறுகம்புல்)

   All rights reserved for the poem. Leela Narayanaswamy©