Monday, January 10, 2011

15.சங்ககாலப்பெருமை கொண்ட பொங்கல் திருநாளன்று


சங்ககாலப்பெருமை கொண்ட பொங்கல் திருநாளன்று
தங்குதடையின்றி தனம் நலம் பெருகிடவே
காலமெல்லாம் பாடுபட்ட கால்நடைகளுக்கு நன்றி
மண்ணுக்கு நன்றி சொல்ல புதுப்பானை அலங்காரம்
கீதையில் கண்ணன் சொன்னான் ஒளியில நான் சூரியனென்று
ஆதவனாம் ஏழுவண்ணரூபனுக்கு நன்றி சொல்வோம்
பொங்கும் புதுப்பானையிலே புத்தரிசி சொல்லிடுமே
பொங்குக நல்லுணர்வாம் ஞானப்பொங்கலென்று











All rights reserved for the poem. Leela Narayanaswamy©

No comments:

Post a Comment