Thursday, January 20, 2011

43.மங்களம்அருளிடும்


மங்களம் அருளிடும் நாயகி வரதே
மாதவ சோதரி மாயே

அங்கயற்கண்ணி உன் நாமமதையே
மங்களம் பாடுவோம் என்றும்

சரணம் என்றுனை தொழுது நின்றோமே
சங்கரன் நாயகி தாயே

பொங்குக மங்களம் எங்கும்
தங்குக பேரின்பம் என்றும்

மகிஷாசுர மர்த்தினி மாதவி மாதங்கி
மலைமகள் பார்வதி தாயே

நலம் ஜெயம் அருள்வாய் நீயே
நான்மறை போற்றிடும் தாயே

நலம் சுபம் ஜெயம என்றுமே
நாயகி அருள்வாய் நீயே
நலம் சுபம் ஜெயம என்றுமே
அருள்வாய் தாயே நீயே













All rights reserved for the poem. Leela Narayanaswamy©

No comments:

Post a Comment