Thursday, October 6, 2011

45.அசுரனாய் மாறிய வரமுனியை

அசுரனாய் மாறிய வரமுனியை
அழிக்க வந்தவளே ஆதிசக்தி
மூன்று மூர்த்திகளும் ஒன்றிணைந்து
நின்ற வடிவமே பராசக்தி

சக்ரம் சூலம் கமண்டலமும்
சகலதேவ மகாசக்திகளும்
சக்தி மிக்க சிங்க வாகனமும்
சார்த்தி நின்றவளே சந்திரமுகி

ஒன்பது நாட்கள் நீண்ட போரில்
குமாரி த்ரிமூர்த்தி கல்யாணியாய்
ரோகிணி காளிகா சண்டிகையாய்
சாம்பவி துர்கா சுபத்ராவாய்
ஒவ்வொரு வடிவம் கொண்டவளே

அசுரனை அழித்தவன் உடல்மீதே
ஆனந்த தாண்டவம் ஆடிநின்ற
துர்கா தேவி தொழுது நின்றோம்
மங்கள ரூபிணி மகாலட்சுமி
காயத்ரி தேவி நீ காத்தருள்வாய் 


All rights reserved for the poem. Leela Narayanaswamy©

No comments:

Post a Comment