Thursday, October 6, 2011

47.(முத்தேவியர் துதி) ஆங்காரி ஓங்காரி சிங்காரி நீ


1 துர்காதேவி
ஆங்காரி ஓங்காரி சிங்காரி நீ
ஆயுதம் பல ஏந்தும மாகாளி நீ
சிங்கவாகனத்தில் அமர்பவள் நீ
தங்கமேனியளாய் ஜொலிப்பவள் நீ
அதர்மம் அழிக்க வந்த அன்னை நீ
துக்கம் தீர்த்தருல்வாய் துர்கா நீ

2 லட்சுமி
ஆயிரம் இதழ் மலர் தாமரை வாழ்
ஆனந்தரூபிணி நீ மகாலட்சுமி
சர்வ அலங்காரி சத்குணை நீ
சரத்கால சந்த்ரமுகமுடையாய்
அலைமகள் திருமகள் அருள்வாய் நீ
அனைத்து மங்கலங்கள் தருவாய் நீ

3 சரஸ்வதி
பொய்கையில் வெள்ளைத்தாமரை வாழ்
காயத்ரி சாவித்திரி சரஸ்வதி நீ
கச்சபி சுவடி மணிமாலையுமாய்
காட்சி தரும் வாணி பாரதி நீ
அன்னவாகினியே அருள்வாய் நீ
அஞ்ஞானம் அகற்றி காப்பாய் நீ

All rights reserved for the poem. Leela Narayanaswamy©

No comments:

Post a Comment