Sunday, August 26, 2012

52.மலர்தாமரைமுக நாயகா வரதா


மலர்தாமரை முக நாயகா வரதா
மாதவா யாதவதிலகா
அமுதம் ஏந்திய மோகினி ரூபா
அலைமகள் நாயகா தேவா

அன்பர்க்கடியனே அஞ்சனவண்ணா
ஆவினம் மேய்த்த இடையா
அருளுக மங்களம் எங்கும்
பெருகுக பேரின்பம் என்றும்

அச்சுதா கேசவா அனந்தசயனா
குழலூதும் கோபகுமாரா
வருவாய் கண்ணா தருவாய்
வாழ்வில் மங்கலம் என்றும்

கண்ணா நலம் சுபமே
கனிவாய் அருள்வாயே
கண்ணா அருள்வாயே
நலம் சுபம் ஜெயம் என்றுமே
All rights reserved for the poem. Leela Narayanaswamy©

All rights reserved for the poem. Leela Narayanaswamy©

No comments:

Post a Comment