Sunday, August 26, 2012

23.ஆவணித் திருவோண நன்னாளில் அதிதிக்கு



  ஆவணித் திருவோண நன்னாளில் அதிதிக்கு
  அந்தணச் சிறுவனாய் அவதரித்தவாமனா

  பக்தனாம் மகாபலியை பக்குவப்படுத்திட
  யுக்தியாய் மூன்றடி மண் யாசித்த பாலா  (ஆவணி)

  ஈரடியில் மூவுலகும் அளந்தபின் மகாபலியின்
  திருமுடியில் மூன்றாமடி பதித்த பரந்தாமா
  பக்தனாம் மகாபலியை அன்போடாதரித்து
  பாதாள லோகமதை பரிந்துரைத்த தேவா (ஆவணி)

  அத்தம் முதல் பத்து நாளும் அனைத்து வீட்டு வாசலிலும்
  அழகழகாய் பூக்கோலம் திருநாள் கோலாகலம்
  இனிவரும் காலமும் இதேபோல் இன்பமுற
  இரங்கி அருள்வாய் நீ அலைமகள் தேவா (ஆவணி)


No comments:

Post a Comment