Thursday, July 8, 2010

12.கருவறையில் இருளொளியில்

கருவறையில் இருளொளியில்
இருந்த காலம் நம் நினைவிலில்லை
காலால் தாய்வயிற்றில்
உதைத்ததும் நம் நினைவிலில்லை
உருவாகி வெளிஉலகம்
கண்ட நேரம் நினைவிலில்லை
முதன்முதல் யாரைக்கண்டோம்?
பெற்ற தாயையா ? மாற்றாந்தாயையா
அழுததும் நம் நினைவிலில்லை தாயின்
அணைப்பில்உறங்கியதும் நினைவிலில்லை
பாலூட்டி நம்மைத் தாலாட்டிய
காலம் ஒன்றும் நம் நினைவிலில்லை
மூவிரண்டு வயதுவரை வாழ்ந்த
வாழ்க்கை நம் நினைவிலில்லை
கற்பனையில் இப்பொற்காலம்
கோபுரமாய் உயருதம்மா!
வாலிபப்பருவமும் இனிய
தோழமைக்குழாமும்
பொலிமைமாறாத பொன்னோவியமாய்
இன்றும் நம் நினைவிலுண்டு
வளர்ந்தபோது வாழ்க்கையின்
திசை அங்கு மாறியதும்
காதலில் கனிந்து துணையுடன்
அலிந்து சேர்ந்த காலமதும்
கல்வெட்டு போன்று மறையாது
நம் மனதில் நினைவிலுண்டு
நேசித்த உறவுகள் ஒவ்வொன்றாய்
அங்கு மறையும் நேரம்
பாசவலை அறுந்ததுவோ? மனம்
பதப்பட்டு இறுகிய்தோ
பார்வைக்கு இவ்விரண்டும்
ஒன்றுபோல கான்பதேனோ ?
கனிவும் தெளிவும் வாழ்க்கை
கற்றுத்தரும் பாடமாகும்
கல்லறையில் கிடக்கும்வரை
நம் மனதில் நிற்க வேண்டும்
All rights reserved for the poem. Leela Narayanaswamy©

No comments:

Post a Comment