Friday, July 23, 2010

37.பால் காவடி

பால்காவடி பூக்காவடி பழக்காவடி எடுத்தே
பாலனே பதம் பணிந்தோம் பழனிமலை ஆண்டவனே

மாங்கனிக்காக சினங்கொண்டகன்றே
மலை ஏறி ஆண்டியாக நின்ற குமரனே
பழம் நீயப்பா ஞானப்பழம் நீயப்பா என்றே
அழைத்த தமிழ்ப்பாட்டிக்குகந்த குமரா வேலனே

பாலமுருகனே சரணம் பழனி முருகனே
வேலேந்தி வினை தீர்ப்பாய் வேங்கடன் மருகனே
ஆறுமுகனே ஐயா அழற்பிறந்தோனே
ஆறுபடை வீடு கொண்ட அழகுமுருக பாலனே

மலை ஏறி வந்து நின்றோம் மயில்வாகனனே
மாறாத பிலலிசூனியம் மலையேறி தொலைந்திடவே
கந்தசஷ்டி கவசம் கூறி கைகூப்பி நின்றோமே
கண்காணா தீவினைகள் காததூரம் அகன்றிடவே

All rights reserved for the poem. Leela Narayanaswamy©

No comments:

Post a Comment