Thursday, January 20, 2011

19. ஒரே ஒரு உள்ளம்

ஒரே ஒரு உள்ளம் ஒன்றிற்பரம் உவமைகள்!
உருகுமென் மனமொரு இறகென்பார் சிலர்
உணர்வுகளின் காற்றில் உள்ளம பறந்ததோ?
உணர்வொன்று உதிர்ந்தங்கோர் இறகாய் வீணதோ?

மனம் ஒரு அடங்காப்பேய் என்பார் சிலர்
மாறாதடிக்கும் உணர்வாம் சுழர்காற்றால்
மனம் தன்வயம் இழந்து அலறுவதாலோ?

மனம் ஒரு குரங்கென்று கூறுவார் சிலர்
குணங்களாம் மரங்களில் மாறிமாறித் தாவும் மனம்
குரங்கு போலென்றால் தவறில்லை அன்றோ?

உள்ளம ஒரு மெழுகு எனும் உவமை ஒரு புதுமை
உணர்வின் வெளிப்பாட்டில் ஓயாதடிபட்டு
உருக்குலையும் மனம் ஒரு மெழுகு போலன்றோ?
உணர்வாம் தீச்சூட்டில் உருகி ஒழுகும் மனம்
ஓடும வழியிலேயே உறையுமோ மெழுகுபோல்?

குயவனின் கையில் சீர்படும் மண் போல
குழைந்தும் உறைந்தும் பதப்படும் நம் மனம்
இன்முகம் காட்ட வழிகாட்டியாய் நிற்கும் மனம்
இன்னலும் இன்பமும் சமநிலையில் ஏற்கும் மனம்
சுமைதாங்கி ஆகும் சுடலையில் மறையும் வரை.












All rights reserved for the poem. Leela Narayanaswamy©

No comments:

Post a Comment