Thursday, October 6, 2011

46.கண்ணாஎன் கால்கள் இடறுதடா


கண்ணா என் கால்கள் இடறுதடா
கைபிடித்து வழிநடத்த வருவாயா?
கண்ணா மனம் உலைபோல் கொதிக்குதடா
கண்மலர் திறந்து குளிர்விப்பாயா?

கண்ணா ஆசைக்கடலில் மனம் ஆடுதடா
ஓடமாய் வந்தெனைக் காப்பாயா?
கண்ணா வீண்மோகங்கள் கூடுதடா
கரங்களால் களைந்துதவ வருவாயா?

கண்ணா மனதில் பனிமூடலடா
குழலோசையால் உருக்கி களைவாயா?
கண்ணா எங்கே பிழை செய்தேனடா?
பவளவாய் திறந்து கூறுவாயா?

கண்ணா கனவில் நீ இல்லையடா
காரணம் என்னவென்று சொல்வாயா?
கண்ணா மனம் தாயன்பால் ஏங்குதடா
கண்முன்னில் குழந்தையாய் வருவாயா?

All rights reserved for the poem. Leela Narayanaswamy©

45.அசுரனாய் மாறிய வரமுனியை

அசுரனாய் மாறிய வரமுனியை
அழிக்க வந்தவளே ஆதிசக்தி
மூன்று மூர்த்திகளும் ஒன்றிணைந்து
நின்ற வடிவமே பராசக்தி

சக்ரம் சூலம் கமண்டலமும்
சகலதேவ மகாசக்திகளும்
சக்தி மிக்க சிங்க வாகனமும்
சார்த்தி நின்றவளே சந்திரமுகி

ஒன்பது நாட்கள் நீண்ட போரில்
குமாரி த்ரிமூர்த்தி கல்யாணியாய்
ரோகிணி காளிகா சண்டிகையாய்
சாம்பவி துர்கா சுபத்ராவாய்
ஒவ்வொரு வடிவம் கொண்டவளே

அசுரனை அழித்தவன் உடல்மீதே
ஆனந்த தாண்டவம் ஆடிநின்ற
துர்கா தேவி தொழுது நின்றோம்
மங்கள ரூபிணி மகாலட்சுமி
காயத்ரி தேவி நீ காத்தருள்வாய் 


All rights reserved for the poem. Leela Narayanaswamy©

21.புகழ்ச்சியால் மனதில் பூக்கும் களிப்பு



மரத்தில் பூக்கும் பூக்களல்ல இவை
மனதில் பூக்கும் பூக்கள்

புகழ்ச்சியால் மனதில் பூக்கும் களிப்பு
இகழ்ச்சியால் நிகழும் மனதில் வெடிப்பு
மகிழ்ச்சியின் வெளிப்பாடு கலகல சிரிப்பு
நெகிழ்ச்சியில் ஒழுகும் மனதில் பல நினைப்பு

ஏற்றம் வருங்கால் தோன்றும் பூரிப்பு
சீற்றம் வாருங்கால தோன்றும் கடுப்பு
சுற்றம் சூழுங்கால் தோன்றும் பிணைப்பு
குற்றம் காணுங்கால் மனதில் கொதிப்பு

கவலைகள் சேர்த்திடும் மனதில் இடிப்பு
கணநேர உணர்வால் இரட்டிக்கும் துடிப்பு
தொடரும் தோல்வியால் தோன்றும் களைப்பு
தொலைந்தது வாழ்வென மனதில் வெறுப்பு

நாளை நமதென்ற மனிதனின் எதிர்பார்ப்பு
நம்பிக்கையில் பூக்கும் மனதில் சுறுசுறுப்பு
மனிதனின் கையில் இல்லை பிறப்பு இறப்பு
மாறாத வியப்பு இது மாதவன் படைப்பு

All rights reserved for the poem. Leela Narayanaswamy©

20.காதல் கடலினிலே மூழ்கி

காதல் கடலினிலே மூழ்கி
கரையேறத் தவிக்கின்றேனே
கடைக்கண் நோக்கினிலே எனக்கோர்
அடைக்கலம் தருவாயோ?

கனவில் வந்து நின்றாய் - மலர்
நயன மொழி பொழிந்தாய்
முத்தமழை பொழிந்தே என்னைப்
பித்தனாய் அடித்து விட்டாய்

முத்துநகையோடும்
தத்து மொழியோடும்
மெத்த மனமிரங்கி என்
சித்தம் தெளிய வைப்பாய்

kaathal kadalinile moozhki
karaiyeRa thudikkendRene- oru
kadakkaNN nokkinile enakkor
adaikkalam tharuvaayo?

kanavil vanthu nindRaay-malar
nayanamozhi mozhinthaay
muththamazhai pozhinthe ennai
piththanaay adiththu vitaay

muththu nakaiyodum
thaththu mozhiyodum
meththa manamirangi en
chiththa theliya vaippaay

All rights reserved for the poem. Leela Narayanaswamy©


Friday, July 29, 2011

44. மாறாதபுன்னகையை

மாறாத புன்னகையை பூத்தருளும் தாயே
மலர் போல சிரிக்கின்ற மனம் அருள்வாய் நீயே
பேதமின்றி பேரன்பு பொழிகின்ற தாயே
வேதநெறி கூறும் அன்பு வழி காட்டு நீயே

மடமையும் அச்சமும் போக்கிடுவாய் தாயே
கடமையும் நேர்மையும் சேர்த்திடுவாய் நீயே
போதாதென்ற மனம் மாற்றிடுவாய் தாயே -நற்
பாதையை பகுத்தறியும் அறிவினைத்தா நீயே

ஏதிலார் நிறை அறியும் நற்குணம் தா தாயே
தீதிலா சொற்கூறும் நாவினைத்தா நீயே
முதியோர் முன் நாவடக்கம் தந்தருள்வாய் தாயே
நீதிவழி நடந்திட மனத்திண்மை தா நீயே

எனதென்ற செருக்கடக்கி காத்திடுவாய் தாயே
உனதடி தொழுது நின்றேன் உய்விப்பாய் நீயே
நாடிவந்தோம் உனையே நலம் அருள்வாய் தாயே
வணங்கினோம் வாழ்வை வளமாக்கு நீயே











All rights reserved for the poem. Leela Narayanaswamy©

Thursday, January 20, 2011

19. ஒரே ஒரு உள்ளம்

ஒரே ஒரு உள்ளம் ஒன்றிற்பரம் உவமைகள்!
உருகுமென் மனமொரு இறகென்பார் சிலர்
உணர்வுகளின் காற்றில் உள்ளம பறந்ததோ?
உணர்வொன்று உதிர்ந்தங்கோர் இறகாய் வீணதோ?

மனம் ஒரு அடங்காப்பேய் என்பார் சிலர்
மாறாதடிக்கும் உணர்வாம் சுழர்காற்றால்
மனம் தன்வயம் இழந்து அலறுவதாலோ?

மனம் ஒரு குரங்கென்று கூறுவார் சிலர்
குணங்களாம் மரங்களில் மாறிமாறித் தாவும் மனம்
குரங்கு போலென்றால் தவறில்லை அன்றோ?

உள்ளம ஒரு மெழுகு எனும் உவமை ஒரு புதுமை
உணர்வின் வெளிப்பாட்டில் ஓயாதடிபட்டு
உருக்குலையும் மனம் ஒரு மெழுகு போலன்றோ?
உணர்வாம் தீச்சூட்டில் உருகி ஒழுகும் மனம்
ஓடும வழியிலேயே உறையுமோ மெழுகுபோல்?

குயவனின் கையில் சீர்படும் மண் போல
குழைந்தும் உறைந்தும் பதப்படும் நம் மனம்
இன்முகம் காட்ட வழிகாட்டியாய் நிற்கும் மனம்
இன்னலும் இன்பமும் சமநிலையில் ஏற்கும் மனம்
சுமைதாங்கி ஆகும் சுடலையில் மறையும் வரை.












All rights reserved for the poem. Leela Narayanaswamy©

43.மங்களம்அருளிடும்


மங்களம் அருளிடும் நாயகி வரதே
மாதவ சோதரி மாயே

அங்கயற்கண்ணி உன் நாமமதையே
மங்களம் பாடுவோம் என்றும்

சரணம் என்றுனை தொழுது நின்றோமே
சங்கரன் நாயகி தாயே

பொங்குக மங்களம் எங்கும்
தங்குக பேரின்பம் என்றும்

மகிஷாசுர மர்த்தினி மாதவி மாதங்கி
மலைமகள் பார்வதி தாயே

நலம் ஜெயம் அருள்வாய் நீயே
நான்மறை போற்றிடும் தாயே

நலம் சுபம் ஜெயம என்றுமே
நாயகி அருள்வாய் நீயே
நலம் சுபம் ஜெயம என்றுமே
அருள்வாய் தாயே நீயே













All rights reserved for the poem. Leela Narayanaswamy©

Sunday, January 16, 2011

42.പലവട്ടം തെളിഞ്ഞല്ലോ ഭഗവാന്‍റെ കാരുണ്യം

പലവട്ടം തെളിഞ്ഞല്ലോ ഭഗവാന്‍റെ കാരുണ്യം
ഫലപ്രതമാണല്ലോ ഭഗവന്നാമ സ്മരണകള്‍
പാവപുണ്യഫലമെന്ന ജീവിത യാത്രയില്‍
ഭാവി എന്തെനറിയാത്ത അന്ധരാനല്ലോ നാം

നാളകെന്നു ചൊല്ലി നെട്ടോട്ടം ഓടിയതില്‍
നല്ലപ്രായം പോയതൊന്നും നമ്മള്‍ ആരും അറിഞ്ഞില്ല
നാല്പതും കഴിഞ്ഞല്ലോ വൃദ്ധവേഷം വന്തല്ലോ
നേട്ടം ഒന്നും ബാകി ഇല്ല നേരെ നില്‍കാന്‍ ശക്തി ഇല്ല
കാലും തളര്ന്തങ്ങു നാലുവശം നോക്കിയപ്പോള്‍
നാലുവട്ടം ഉണ്ടുതീര്ത്ത് കൂട്ടര്‍ എല്ലാം പോയല്ലോ
അറുപതും കഴിഞ്ഞഞ്ഞു ആശ്രയം തേടിയപ്പോള്‍
അനന്തശയന നിന്ടെ കാലൊച്ച കേട്ടല്ലോ












All rights reserved for the poem. Leela Narayanaswamy©










41.ആശ്രുത വത്സല

ആശ്രുത വത്സല ആബത്ബാന്ധവ
അനന്തശയന അഭയം കൃഷ്ണ
അഭയം കൃഷ്ണ

കാഞ്ചനവര്‍ണ നിന്‍ മോഹനരൂപം
കണ്ണില്‍ നിറൈയേണം ഹരേകൃഷ്ണ
ഹരേകൃഷ്ണ

സരസീജനാഭ നീരജനയന
ദ്വാരകാപതെ ശ്രീ ഹരേകൃഷ്ണ
ശീരസാഗര സയന ശ്രീപതെ
ക്ഷണം കണ്‍ മുന്നില്‍ വരേണം കൃഷ്ബ
വരേണം കൃഷ്ണ

വേദസ്വരൂപ വേങ്കടെസ വരത
വേണുഗോപാല തൊഴുന്നേന്‍ കൃഷ്ണ
പുരന്തരവിട്ടല ബ്രുന്താവനവാസ
നരഹരി ദേവ ഹരേ നാരായണ
ഹരേ നാരായണ











All rights reserved for the poem. Leela Narayanaswamy©

Saturday, January 15, 2011

40.മങ്കൊമ്പില്‍ അമ്മെ മംഗളദായിനീ


മങ്കൊമ്പില്‍ അമ്മെ മംഗളദായിനീ
ഗംഗാധരന്‍ദേവീ കൈതൊഴുന്നേന്‍

ദുഷ്ടനിഗ്രഹേ ദുര്‍ഗ്ഗേ ഭഗവതീ
ഇഷ്ടപ്രതായിനീ കൈതൊഴുന്നേന്‍

താനവനാശിനീ ധര്മസംവര്‍ധിനീ
കാനനദുര്‍ഗ്ഗേ കനിയേണമേ

വട്ടകശൂലം വഹിക്കും മഹേശ്വരീ
കഷ്ടങ്ങള്‍ അകലുവാന്‍ കനിയെനമേ

ജഗത്ജനനീ അമ്മെ സത്ഗുണകാരികെ
ജഗത്രക്ഷകീ അമ്മെ കൈതൊഴുന്നേന്‍













All rights reserved for the poem. Leela Narayanaswamy©