Sunday, December 14, 2014

58.கண்ணா கார்வண்ணா

கண்ணா கார்வண்ணா நந்தகோகுலத்து கோபியரின் மன்னா
கண்ணா... கார்வண்ணா... வெண்ணைதிருடி உண்ணும் கள்வா கமலக்கண்ணா
மாடுமேய்த்திடும் ஓர் இடையப்பையனாம்
மனமயக்கும் குழலூதும் பாலனாம்  (கண்ணா)

அன்னைக்காக உரலோடு பிணைந்து நின்றாயே
அசுரகளை அதிசயமாய் கொன்றோழிதித்தாயே
காளிங்கனின் முடிமேலே ஆடிநின்றாயே
கருணையுடன் கோவர்த்தனக்குடை பிடித்தாயே
கண்ணா..............................................................................
மாயக்கலையிலே மன்னா மனதில் நின்ற மாதவா(கண்ணா)

தர்மம் காக்க பாஞ்சஜன்ய சங்கெடுத்தாயே
தர்மநெறி பாடமாக கீதை தந்தாயே
நல்லோர்க்கு காவலனாய் அருகிருப்பவனே
பல்லாண்டு பாடிநின்றோம் பாலகோபனே
கண்ணா............................................................................
அழகுமுடியில் மயிலின் இறகு ஆட ஓடி வா   (கண்ணா)
All rights reserved for the poem. Leela Narayanaswamy©
Written for Mr. Sibu Sukumaran for an album according to tune already set in June 2010.

No comments:

Post a Comment