Sunday, November 8, 2009

5 சாமகானப்ப்ரியே

பாட்டு 1
பல்லவி:
சாமகானப்ரியே சாரதே
சரவணனின் அன்னை நீயே (சாமகானப்ரியே...)

அனுபல்லவி :
மாதருந்தன் நடையில் நின்று மனமுருகி பாடும்போது
மறைந்திருந்து மகிழ்ந்துறையும் காட்சி தனை மனதில் கண்டேன் (சாமகானப்ரியே...)

சரணம் 1:
அம்மா நீ அவதரித்து அசுரர்களை அழித்தொழித்த
நவராத்ரி மகிமைகளை நலமுறவே துதித்திடுவோம்
மாதவனின் சோதரியே மதுரைவாழும் மாதரசே
சுடலையாடும் நாயகனின் காதலியே கற்பகமே (சாமகானப்ரியே...)
சரணம் 2:
மலைமகள் நீ கண்திறந்தால் மாநிலமே தழைக்குதம்மா
மறைபோற்றும் நாயகியே குறை அகற்றும் குணவதியே
கருணையுள்ளம் கொன்டவளே கல்யாணி திரிசூலி
காட்சி தந்து ஆட்சி செய்வாய் புன்னக்கல் பகவதி நீ (சாமகானப்ரியே...)

பாட்டு 2.
பல்லவி:
சாமகானப்ரியே சாரதே

சரவணனின் அன்னை நீயே (சாமகானப்ரியே...)

அனுபல்லவி :
மங்களங்கள் பொங்கிடவே மனமுருகி பாடிநின்றோம்
குங்குமாங்கி மாதங்கி அகமகிழ்ந்தருள்வாய் நீ (சாமகானப்ரியே...)
சரணம் 1.
மங்கொம்பு பகவதி தன் பதமலரிணை பணிந்திடுவோம்
பண்பாடி தொழுதிடுவோம் கண் திறந்து காத்திடுவாள்
மாதவனின் சோதரியே மதுரைவாழும் மாதரசே
சுடலையாடும் நாயகனின் காதலியே கற்பகமே (சாமகானப்ரியே...)
சரணம் 2:
மலைமகளே மங்கொம்பில் திருக்கோயில் கொண்டவளே 
வட்டகவாளுடையவளே வரமருளும் வனதுர்க்கே
கருணையுள்ளம் கொன்டவளே கல்யாணி திரிசூலி
காட்சி தந்து ஆட்சி செய்வாய் கரம் கூப்பி தொழுதிட்டோம்  (சாமகானப்ரியே...)



All rights reserved for the poem. Leela Narayanaswamy©

No comments:

Post a Comment