Saturday, December 13, 2014

26. வசந்தமே உன்

வசந்தமே உன் நினைவுகள் வளருது
வாடும் என் மனதை நாளும் வருடுது
காலம் போனாலும் காதல் மாறுமோ?
காத்திருப்பில் ஒரு சுகமுண்டு தெரியுமோ?

ஆழப்பதிந்த உன் மலர்முகம் மனதை
ஆழ்கடலலை போல் ஆட்டுதம்மா
பாடும் கொடியாக
தொடரும் கதையாக
தேடும் விடையாக
எங்கோ நின்று நீ இன்று   
பாடும் கவியாக என்னை மாற்றிவிட்டாய்
All rights reserved for the poem. Leela Narayanaswamy©

No comments:

Post a Comment