Saturday, December 13, 2014

29.எங்கோ தொலைவிலே

பெண் குரலில்
எங்கோ தொலைவிலே தொடரா நிழலாய் நான்
தேங்கியே விழிமொழியாய் கண்ணீர் பொழியும்
காட்சியில் கலைந்ததம்மா பிரியா விடையும்
ஆண் குரலில்
சந்திரனின் பிரியமுள்ள பூவே நீ இரவினில் மலராதே
ஏதோ கனாவில் அறியாதென் நெஞ்சில்
    கனலுமாய் எரிக்கிறாய் நீறுதேன் பஞ்சணையே (சந்திரனின்)

கடலே வெண்ணலைகளை அனுப்பியே
      உரையாட விழைந்தனை தனியே நீ
யாரோடும் சொல்லாத்த என் மோகங்கள்
      காதோடு கேட்காமல் தானாகவே
எங்கெங்கோ பாய்ந்தங்கு மௌனமாய் ஓடி
      மாய்ந்ததேன் சொல்லேன்       (சந்திரனின்)

நிலவே நின் ஒளியில் அவள் பிம்பம்
       தெரியவே நிழலாய் நானங்கு
ஆராரும் காணாதே நின்னைத் தொடரவே
       அம்முகம் மாயுதே கானல் நீர்போல்
இனி அன்பே மறக்குமோ மெதுவாய் மூளும் என்னனுராகம்
written for Mr. Susanth Sankar according to the tune already set on 23.01 12.


All rights reserved for the poem. Leela Narayanaswamy©
   

No comments:

Post a Comment