Saturday, December 13, 2014

27. தூரே தூரே போனாலும்

தூரே தூரே போனாலும்
     தொடரும் உந்தன் நினைவுகளும்
யாரும் யாரும் அறியாதே
     யாழின் இசையாய் இனிமை தரும்
எங்கோ பெய்யும் மழைத்துளிகள்
     பாங்காய் தாளம் கொட்டிவரும்
இங்கே அங்கே என்றிருந்தாலும்
      எங்கும் நிறைந்த காற்றலைபோல்
வானும் நிலவும்போல் இணை பிரியா
       தென்றும் நம்முறவு தொடர்ந்திடுமே

All rights reserved for the poem. Leela Narayanaswamy©

No comments:

Post a Comment